🤡பதவி ஏற்று 15 நாட்களில் 25 கொலை, 19 POCSO வழக்குகள் 2 துப்பாக்கி/வெடிகுண்டு பயன்பாடு...
சட்டமாவது ஒழுங்காவது....
போராளிகளை ஏமாளியாக்கி கோமாளியை தலைவனாக்கி
ஏமாளிகள் தந்த அற்புதமான மாற்றத்தின் விளைவு...
இதற்க்கே பயந்தா எப்படி இனி பயங்கரமா இருக்கும்.....
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#ROOT_MAFIA | ரூட் மாஃபியா என்றால் என்ன ? ☠️☠️☠️☠️
இவர்கள் லட்சக்கணக்கான போலியான Facebook அக்கவுண்ட் , Instagram அக்கவுண்ட் வைத்திருப்பார்கள். இவர்கள் ஒருவர் மட்டுமே பல லட்சக்கணக்கான இணையதள அக்கவுண்ட்களை ஒரு கணினியின் மூலமாக பல போலி அக்கவுண்ட்களை இயக்குகிறார்கள் . இதன் மூலமாக யார் அரசியலுக்கு வரவேண்டும் யார் அரசியலுக்கு வரக்கூடாது என்று போலி பார்வையாளர்கள் மற்றும் போலி லைக்குகளை பெற்றுக்கொண்டு புரிதல் இல்லாத மக்கள்களை கவர்ச்சியான மற்றும் கலர்ஃபுல்லான வீடியோக்களை பார்த்து மக்கள் ஏமாறுகிறார்கள்..!!!
இது போல்தான் இருக்கும்...