சீதைக்கு போட்டியாக கண்ணகி சிலை!
விவேகானந்தர் மண்டபத்திற்கு நிகராக வள்ளுவர் சிலை!
இந்து முன்னனியினர் மராட்டிய மன்னன் சிவாஜியிற்கு மார்கெட்டிங் செய்து கொண்டிருந்த போது ராஜராஜ சோழனுக்கு ஆயிரமாண்டு விழா!
அம்பேத்கர் பெயரை வைப்பதை எதிர்த்து சிவசேனா போராடிய நேரத்தில் சென்னையில் அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி!
யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூலகத்தை கட்டியது என எதிரிகளை தன் அறிவால் சண்டையிட்டு திருப்பி அடித்த தலைவன்.
கலைஞர் எனும் தமிழ்நாட்டின் ஆலமரம்.🖤♥️
முதன்முதலில் நீட்டை காங்கிரஸ் கொண்டு வந்தபோது “இது கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாதிக்கும்” என கலைஞர் கண்டித்ததால் “நீட் நடத்துவதும் நடத்தாததும் மாநிலங்களின் உரிமை” என பணிந்து சட்டத்தை மாற்றியது காங்கிரஸ்.
பின்னர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது நீட்டை ஏற்றுக் கையெழுத்திட்டார், அப்போது அதிமுகவில் உளவாளியாக இருந்த RSS கைக்கூலி மாஃபாய் பாண்டியராஜன்,
பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம் வந்தபோதே நீட் என்பது மாபெரும் அநீதி என போராட்டத்தை ஆரம்பித்தார் MKS. ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசைதிருப்ப இப்படிச் செய்கிறார் என வழக்கம்போல் நம்மூர் திருடர்கள் இட்டுக்கட்டினார்கள். மாடு பிடிப்பதில் ஜெயித்துவிட்டு, படிப்பதில் தோற்றோம்.
பிறகு பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக பாஜகவை நீட்டை ஒழிக்கச் சொல்லி நிர்பந்திக்கவே இல்லை. ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை வேறு வாங்கியது பாஜக.
பின்னர் திமுக ஆட்சி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது விஸச்செடியாக இருந்த நீட் இப்போது நன்றாக வேர்விட்டு, பல ஏழை, கிராமப்புற, நடுத்தர வர்க, BC, MBC, SC, ST மாணவர்களின் உயிரைக் குடித்து வளர்ந்து ஆலமரமாக நின்றிருந்தது. சட்டப்படி அதை முற்றிலும் ஒழிப்பதற்காக ஏ.கே.ராஜன் கமிட்டி அமைத்து அதை ஒழிக்கச் சட்டமும் இயற்றி அனுப்பியது திமுக அரசு. அதுதான் உதயநிதி சொன்ன ரகசியம். அதுதான் மந்திரம். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த ரகசியம் வேலை செய்யும். இந்த மந்திரம் பலிக்கும். ஆனால் பாஜகவின் இந்தியாதான் ஜனநாயகமே இல்லையே! ஜனநாயகத்துக்குப் புறம்பாக கவர்னரையும் ஜனாதிபதியையும் வைத்து இன்றளவும் அதை ஒழிக்கவிடாமல் ஒரு பச்சையான அயோக்கியத்தனத்தைச் செய்துகொண்டிருக்கிறது பா ச க. ஆனால் இப்போதும் பாருங்கள் “நீட்டை ஒழிக்கிறேன்னு திமுக சொல்லுச்சே.. ரகசியம் இருக்குனு உதயநிதி சொன்னாரே... ஒழிச்சுச்சா.. கிகிபிகி” என திமுகவைக் கிண்டல் செய்யும் எவனும், அயோக்கியத்தனமாக சட்டத்தை வளைத்த பா ச கவை கேள்வி கேட்க மாட்டான். இதில் நீட்டை ஆதரிப்பவனும் அடக்கம், (திமுகவைச் சேராத) எதிர்ப்பவனும் அடக்கம்! அதுதான் தமிழ்நாட்டின் விசித்திர டிசைன்!
வழக்கம்போல், எப்படி திமுகவின் இந்தித்திணிப்பு எதிர்ப்பை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ, எப்படி திமுகவின் இட ஒதுக்கீட்டு ஆதரவை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ, திமுகவின் மாநில உரிமைக்கான குரலை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ அதேபோல் திமுகவின் நீட் எதிர்ப்பை இப்போது ஏனைய இந்தியா லேட்டாகப் புரிந்துகொண்டிருக்கிறது. இதோ மாணவர் போராட்டம்.
திமுக ஆ.ராசாவை அனுப்பி மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்கும்போது, உதயநிதி மாணவர்களுக்காக தன் ஆதரவையும் வன்மையான கண்டனங்களையும் தெரிவித்திருக்கும்போது, ஒரு காலத்தில் முதுகெலும்போடு நிமிர்ந்து நின்ற தமிழ்நாட்டு அரசு வாயை மூடிக்கொண்டு டேபிளுக்கு அடியில் ஒளிந்துகொண்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமே எதிர்த்த ஒரு அநீதியை இன்று இந்தியாவே எதிர்க்கும்போது உடன் நிற்க தமிழ்நாட்டுக்கு இன்று தெம்பில்லை. அதன் முதுகெலும்பு சினிமா மோக ஆசிட்டில் கரைந்துவிட்டது. அதன் வீரம் ரீல்ஸ்களின் பொய்களில் செத்துவிட்டது.
விலைபோனவர்களின் வார்த்தைகளுக்கும், ரீல்ஸ்களுக்கும், பொய்க்கும் மூளையை அடகு வைத்தவர்களே... ஏன் திமுக? ஏன் திமுக? ஏன் திமுக? என கேட்டுக்கொண்டே இருப்பீர்களே... இதற்காகத்தான் திமுக! நம்மை மானத்தோடு வைத்திருக்கத்தான் திமுக. தமிழ்நாடுக்கு வந்த ஆபத்தை மட்டுமல்ல, வரப்போகும் ஆபத்தைக் கூட எதிர்க்கத்தான் திமுக. தடுப்பூசியைத் தூக்கி எறிந்துவிட்டு உயிர்க்கொல்லிக் கிருமியிடம் உடலை ஒப்படைத்திருக்கிறீர்களே, நீங்கள் தற்குறி அல்லாமல் வேறு யார்...
நம்மை நிஜ ஹீரோவாக வைத்திருந்தது திமுக. இதோ உங்கள் நிழல் ஹீரோ நம்மை பரிதாபமான நிஜக் கோமாளியாக்கி இருக்கிறார். வடக்கன், பீகார், பீடா வாயன் என கிண்டல் அடித்துச் சிரிப்போமே. அவனெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறான், வாயால் அல்ல! ஏன் என்றால் நாம் செய்திருக்கும் காரியம் அப்படி!
மக்கள் கூட பொய்க்குப் ப*லி*யான ப*லியாடுகள். ஆனால் எல்லாம் தெரிந்தும், எல்லாம் அறிந்தும், தவெக என்பது பா ச க'வின் ட்ரோஜன் ஹார்ஸ் என்பது தெரிந்தும் தமிழ்நாட்டின் இந்த வரலாறுகாணா அவமானத்திற்கும், அசிங்கத்திற்கும், வீழ்ச்சிக்கும் துணைநின்று ஒத்து ஊதும் திருமாவளவன், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், காங்கிரஸ்... நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
சாத்தான் உங்களுக்கு அதிகாரத்தில் மட்டும் பங்கு தரவில்லை. பாவத்திலும் தந்திருக்கிறான். தமிழ்நாட்டு வரலாறு உங்களுககன சோஃபா செட்டுகளை வட்டியும் முதலுமாய் கொடுக்கும். வட்டியும் முதலுமாய் கொடுக்கும்.
1/1
Happy Birthday, @Suriya_offl Anna! ❤️
Wishing you a year filled with happiness, good health, and many more memorable performances. Can’t wait to watch Vishwanath & Sons. Wishing you and the entire team all the very best.
Lots of love always! 🤍
#HappyBirthdaySuriya
கேள்வி: எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? -Jashwant Krishna சென்னை
பதில்: இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன என்பதும், அவைதான் உங்களைப்போன்ற இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக் கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சரி கவனமாக படியுங்கள்.
கலைஞர் பிறந்தது 1924ல்.
சேலத்தில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட நிறுவனத்தில் கதை வசனம் எழுத்தாளராக வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். (அவர் முதன் முதலில் சேலத்துக்குதான் சென்றார்.சென்னைக்கு அல்ல)
மூன்றாண்டுகள் உதவி எழுத்தாளராக இருந்தவருக்கு 1947ல் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதல் அங்கீகாரம் கிடைத்தது அதாவது உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்ற பெயரில்.
அப்போது அவருக்கு வயது 23.அந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தவர் எம்ஜிஆர்.
கலைஞருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. 1948ல் அபிமன்யு,1949ல் மருதநாட்டு இளவரசி 1950ல் மந்திரிகுமாரி என படங்கள் தந்த புகழில் கலைஞர் உச்சத்துக்கு போனார்.
1952ல் கலைஞர் சொந்தமாக கார் வைத்திருந்தார்(படம் பார்க்க) கோபாலபுரத்தில் வீடும் வாங்கிவிட்டார்(1955)
அப்போதிருந்த திராவிட இயக்கத்தினரிடையே மிகவும் இளையவராகவும் பணக்காரராகவும் இருந்தவர் கலைஞர்.
எம்ஜிஆர் நடித்த எல்லா படங்களுக்கும் நட்பின் அடிப்படையில் கலைஞர் கைகொடுத்து வாய்ப்பளித்தார்.
எம்ஜிஆருக்கு மந்திரிகுமாரி படம் திருப்புமுனையாக அமைந்தது(1950)
அப்படம் திருப்புமுனையாக இருந்தாலும் அவரை சூப்பர் ஸ்டார் உயரத்துக்கு கொண்டு சென்ற படம் மலைக்கள்ளன்(1954).அதுவும் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.
ஆனால் அதற்குமுன்பே கலைஞர் ஒரு மாபெரும் சூப்பர்ஸ்டாராக இருந்தார்.
அவர் கதைவசனம் எழுதி சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் 1952 வந்தது.
இங்கே கவனிக்க வேண்டியது 1952 முதல் 1954 வரை சிவாஜியை விடவும் எம்ஜிஆர் சின்ன நடிகராக இருந்தார் என்பதாகும்
இன்னொன்று சொல்கிறேன்.
திமுக தொடங்கப்பட்டது 1949ல்
முதன் முதலில் தேர்தலின் நின்றது 1957ல்
வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது 1967ல். கலைஞர் அமைச்சாரனதும் அப்போதுதான்.
1944ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி 1947ல் உச்சம்பெற்று 1952ல் சூப்பர்ஸ்டாராகி 1955க்குள் தனக்கு தேவையான எல்லா சொத்துக்களையும் தனது உழைப்பால் கலைஞர் சேர்த்துவிட்டார்.
அது மட்டுமல்ல. எம்ஜிஆர் சிவாஜி என்ற மாபெரும் திறமை படைத்த திரைக் கலைஞர்களை உலகத்திற்கு கொடுத்திருக்கிறார்.
அவர் கோடீஸ்வரனாகி சுமார் 13 ஆண்டுகள் கழித்துதான் அமைச்சர் பதவிக்கு வந்தார்.
இன்றைக்கும் கலைஞரின் சொத்து 1955ல் எவ்வளவு இருந்ததோ அவ்வளவுதான் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அந்த சொத்து கூட எதிர்காலத்தில் மருத்துவமனையாக வேண்டும் என்றே அவர் உயில் எழுதி வைத்திருக்கிறார்.
தங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
Kathir RS
28/7/19
#கதிர்_பதில்கள்
#Karuppu திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியாகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுருத்த அன்போடு வேண்டுகிறேன். 🙏🏽
#AnbaanaFans
@DreamWarriorpic@SakthiFilmFctry
#Karuppu
The love, name & fame we are getting from across the globe, goes to the entire cast & crew of #Karuppu who believed & worked hard. Backed by @DreamWarriorpic, S R Prakash Babu & @prabhu_sr.
Thank you dear @kalaivananoffl for focusing solely on our film till we locked the edit. You balanced our work alongside your newborn, much appreciate.
Sai! No words to thank you @SaiAbhyankkar. Happy for the love you are getting. You are the backbone for our film to have this level of vibe & celebration in theaters.
@dop_gkvishnu Bawa! Respect for the immense love you had for me while filming. You & your team worked day and night to give your best. Your love is the ‘magic dust’ on #Karuppu.
@RJ_Balaji You promised me a blockbuster & you've also earned everybody's love while delivering it. Respect to your Manifestation powers. Shine brighter.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
1991 ராஜீவ் படுகொலைக்குப் பிறகு வெறும் 2 திமுக MLAக்கள் மட்டுமே வென்றனர். வைகோ 9 மாவட்ட செயலாளர்களுடன் கட்சியைப் பிளந்து கொண்டு போனார். கலைஞருக்கோ வயது 70. அத்தோடு திமுக முடிந்தது என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். இன்று எந்தக் கட்சி நீடித்து நிலைத்து நிற்கிறது?
இந்த தேர்தல்ல கவனிச்சீங்கனா?
ரோடு சரியல்லை
Bus stand கட்டலை
ரோடுல மேம்பாலம் கட்டலை
கால்வாய் சீரமைக்கல
மழைநீர் சேகரிப்பு பண்ணல
மழை பெய்தால் தண்ணி நிக்குது
மின்சாரத் தடை
அரசுப் பள்ளிகளின் தரம்
மருத்துவமனைகளின் தரம்
இந்த போல அடிப்படை தேவைகளை பிரச்சனைகள யாருமே பேசலை. காரணம் என்னனா அந்த பிரச்சனைகள் பெரும்பாலான இடங்களில் தீர்த்து வைக்கப்பட்டிருக்கு.
இப்ப எல்லாரும்
NEET ஒழிப்போம்னு சொன்னீங்களே என்னாச்சு?
மசோதா நகலை எரிச்சா அவங்க பின் வாங்கிடுவாங்களா?
மும்மொழிக் கொள்கை எப்படி சமாளிப்பீங்க?
கேசு விலையை குறைப்பீங்களா?
இப்படி அடுத்த கட்டத்துக்கு போய்ட்டாங்க. இதை அவங்க குறையா சொன்னாலும் சரி உரிமையா கேட்டாலும் சரி. இந்தளவுக்கு தமிழ்நாட்டோட தரம் உயர்ந்ததற்கு 5 ஆண்டு திமுக ஆட்சி காரணமாயிருக்குல அது போதும்.
சிந்திப்பீர் வாக்களிப்பீர்!
#உதயசூரியன்
#ஸ்டாலின்_தொடரட்டும்
#VoteForDMK