@iam_Vetti@AlimAlbuhari உதய் மட்டுமல்ல, எந்த உறுப்பினர்கள் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லவேண்டும். இதுவே முதல் அமைச்சர் கடமை. கடமையை செய்ய மறுத்தால் பதவி விலக வேண்டும்
சபாநாயகர்... TVK பார்த்து உக்காருங்க உக்காருங்க.. ன்னு சொல்றாரு... ஆனா TV ல எதிர்க்கட்சியை மட்டும் தான் காட்டுறாங்க... இதுக்கு பேர் தான் live 🤣🤣🤣🤣🤣🤣
#TVKVijayFails
@kalgikumaru அதிமுக அதிருப்தி உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்தால், மொத்த சமஉ எண்ணிக்கை குறையும். அப்போது மெஜாரிட்டி 107 போதும். இதை ஏற்கனவே ஒருமுறை கர்நாடகாவில் பாஜக செய்துள்ளது. #TVKVijay#dmk#tnbjp#admk
துப்பாக்கி படம் பார்த்து 150 பேர் ராணுவத்தில் சேர்ந்ததாக #தவெக MLA சட்டசபையில் கூறினார்..
ரசிகன் படம் பார்த்துவிட்டு மாமியாருக்கு எத்தனை பேர் சோப்பு போட்டார்கள் என்கிற கணக்கு இருக்கிறதா என்று கேட்டால் சண்டைக்கு வருகிறார்கள்..
மேலூர் நகரத்தை விட கிராம்ப்புற மக்கள் கொத்து கொத்தாக FQL கும்பலிடம் பணத்தை இழந்திருக்கின்றனர்
இந்த பண மோசடியில் மக்கள் வீழ்ந்ததை தவெக ஆதரவுடன் ஒப்பிட்டு ஆய்வே நடத்த முடியும்!
தமிழ்நாடு முற்போக்கு மாநிலமென்பது ஒரு Myth மட்டுமே!
Rationalists are minorities in Tamilandu !
வாட்சப்பில் வந்தது..
தி.மு.க ஆட்சியில் நடந்தால் அது சட்டம் ஒழுங்கு Out of Control...
த.வெ.க ஆட்சியில் நடந்தால் அந்த கட்சியின் பெயரே வராது - அதுவும் இது சட்டம் ஒழுங்கு Out of Control அல்ல.. சின்னச் சின்ன தகராறுகள் தான்..
இந்தப் பிழைப்பிற்கு பெயர் என்ன @JuniorVikatan ?
வேங்கைவயல் பிரச்சினையில் மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் ஊடகங்களுக்கோ செயற்பாட்டாளர்களுக்கோ இல்லை; திமுகவைப் பழிசுமத்துவதிலேயே முனைப்பு காட்டினர்.
சம்பவம் அறிந்ததும் மாவட்ட அமைச்சர் மெய்யநாதன் மக்களைச் சந்தித்தார். தொடர்ந்து சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. அதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கயல்விழி பங்கேற்றனர். மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் சார்பிலும் மக்களைச் சந்தித்தனர். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
நிற்க…
தவெக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டப் பள்ளியில் நீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து மூன்று-நான்கு வாரங்கள் ஆகிவிட்டன.
எந்த அமைச்சரும் சென்று பார்க்கவோ விசாரிக்கவோ இல்லை. பள்ளி இன்றும் நாறுகிறது என யாரும் கட்டுரை எழுதவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களை எந்த அமைப்பும் சந்திக்கவில்லை. பாரதிதாசனின் “வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்ற ரெடிமேட் வாசகத்தையும் பதிவு செய்யவில்லை.
எந்த ஆட்சியிலும் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க முடியாது. ஆனால் சம்பவம் நடந்த பின்பு அமைச்சர்கள் சென்று பார்க்க வேண்டாமா? ஊடகங்களுக்கும் அந்தப் பொறுப்பு இல்லையா?
தொட்டியில் மலம் கலந்தவர்களை விட இத்தகைய ஊடகவியலாளர்களும் செயற்பாட்டாளர்களும் கொடிய சைக்கோக்கள் என்பதை இவர்களது மௌனம் உணர்த்துகிறது.
சட்டமன்றத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பேச வாய்ப்பு கொடுப்பது சபைக்கு தலைவர் தான்!
துறைக்கு சம்பந்தமில்லாத அமைச்சர்களை வேறு துறை மானிய கோரிக்கையின் போது பேச அனுமதிப்பதும் அவர்தான்.
பிறகு நல்லவர் போல் பேசுவதும் அவர்தான்.
இதெல்லாம் ஒரு செட்டிங் போல நடைபெறுகிறது.
அதற்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரை மட்டும் பேச விட்டால் போதும் இந்த மாதிரி குழப்பமும் நடக்காது ஆனால் சபை தலைவர் சம்பந்தமில்லாத கள்ள லாட்டரியையும், சங்கியையும் பேச விடுகிறார், அவ்வாறு அனுமதிக்கும் போது அவர்களிடம் உண்மைக்கு மாறான கருத்துக்களை ரீல்ஸ்க்காக சபையில் பேசக்கூடாது என சொல்லுவதுமில்லை,,, ஆனால் அந்த அமைச்சர் சம்பந்தமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி முடித்தவுடன் அதை இவ்வாறு சம்பந்தம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என சொல்கிறார், எந்தப் பிரயோஜனமும் இல்லை அவர்கள் அரசியல் கருத்துக்களை உண்மை போல சபையில் ரீல்ஸ்காக பேசி விடுகின்றனர்,
இதுதான் அவர்களது செட்டிங்.
இதுவெல்லாம் சபைத் தலைவருக்கும் தெரியும் கடைசியில் அதை கண்டிப்பது போல் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறார்.
பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போலத்தான் இது