@K_T_L நன்றி என்பது ஒரு கட்டிடத்துக்கு வந்து சொல்வதிலேயே இல்லை; கூட்டணியை மதித்து தொடர்ந்து இணைந்து நிற்பதில்தான் அதன் உண்மை இருக்கிறது.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் உறவின் மதிப்பு குறையக் கூடாது என்பதுதான் எங்கள் நிலை. 2/2
@K_T_L உங்கள் வருத்தம் புரிகிறது
ஆனால் தலைவர் M. K. Stalin எப்போதும் கூட்டணியை அரசியல் கணக்காக மட்டும் பார்க்கவில்லை நம்பிக்கையும், கொள்கை உறவும் கொண்ட பயணமாகத்தான் பார்த்திருக்கிறார்.
1971 முதல் இன்று வரை வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் கூட்டணியின் மரியாதையை திமுக காத்திருக்கிறது 1/2
@Michel_Offl DMK–ADMK கூட்டணி பற்றி கதை கட்டுறவர்கள் முதல்ல ஆதாரம் காட்டணும்.
அரசியலில் எதிரிகள் கூட சில விஷயங்களுக்கு சந்திக்கலாம்; அதுவே கூட்டணி ஆகிடாது.
மக்களை குழப்ப கற்பனை அரசியல் ஓடலாம், ஆனா உண்மை நீண்ட நாள் மறையாது.
@Michel_Offl 108 சீட் வந்ததும் கடவுளின் திருவிளையாடல்னு சொல்றவர்கள், 2021ல மக்கள் ஏன் Dravida Munnetra Kazhagam-க்கு ஆட்சி கொடுத்தாங்கன்னு மறந்துட்டாங்க போல
மக்கள் யாரை நம்புறாங்கன்னு தேர்தல் முடிவே சொல்லுது.
சமூகநீதி, நலத்திட்டம், வளர்ச்சி — இதுதான் DMK அரசியலின் அடையாளம்.
1/2
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
‘ரூ’ என்பது பெரிதானது ஏன்?
#TNBudget2025-இல் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்!
#UngalilOruvanAnswers
A flawless campaign, a perfect ending! 🇮🇳 🏆
Congratulations to #TeamIndia on winning the #ChampionsTrophy2025 and to New Zealand for a strong tournament.
Rohit and his men rise to the occasion, delivering a campaign of excellence, a final of composure, and a victory to cherish.
Champions once again!
‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து’
- குறள் 978, அதிகாரம் 98
ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இந்த தம்பி மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார்..
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் 🤩
#கல்விஎனும்பேராயுதம்