வணக்கம் @CMOTamilnadu முதல்வர் அவர்களே,
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. தங்கள் ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என்று மக்களாகிய நாம் நம்புகிறோம்.
நேற்று கோவையில் 10 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரம் மிகவும் வேதனைக்குரியது.
END OF HUNGER... BEGINNING OF ACCOUNTABILITY...!
Sonam Wangchuk ends his fast after 26 days upon getting assurance from the government and members of parliament of all political parties that the issue of accountability in the failing examination system will be discussed on the floors of the Indian Parliament. The government also gave assurance that families of suicide victims in the recent NEET examination paper leak will be given adequate compensation and that there will be no cases registered against the peacefully protesting students and youths.
Watch full video on YouTube Channel: Sonam Wangchuk
Sonam's videos have no copyrights; can be shared freely.
Not Just Investigating Irregularities; The Fraudulent NEET Itself Must Be Completely Abolished!
As a continuation of the massive youth protest held in Delhi against the irregularities and bungling in the National Eligibility cum Entrance Test (NEET), while protests are spreading across Northern states, the TVK government’s action of suppressing Tamil Nadu's students and youth using the police when they attempt to take to the streets in protest is deeply condemnable. The state government's tendency to suppress the spontaneous protest of the younger generation against NEET, while claiming to oppose the exam itself, is a betrayal of democracy.
Is it fair for Chief Minister Vijay—who brands himself a. "Democrat" (Jananayagan) on screen—to unleash state violence through the police on students and youth on the ground, committing a brutal murder of democracy? Is he a democrat only in movies? While Northern youth stand on the streets of Delhi fighting for their right to education, keeping Tamil Nadu youth lined up outside cinema halls is an unacceptable cruelty. On one hand, claiming to condemn the BJP government's suppression of the youth protest in Delhi, while on the other, attempting to crush the youth protests against NEET in Tamil Nadu—is this not double standards by the TVK government?
Calling the BJP an ideological enemy while secretly serving their interests—is this not indirect service by the TVK government? What a farce!
While protests in Northern states condemn the irregularities in NEET, it is only in Tamil Nadu that protests emphasize that the NEET system itself is a fraud. When a system brought in under the pretext of producing quality doctors—claiming to be better than the previous method—suffers from so many irregularities, confusions, and bunglings, what is the purpose of this examination system? What guarantee is there that irregularities did not occur in this same NEET system in the past?
Therefore, not only investigating the irregularities in NEET, but completely abolishing this fraudulent NEET system altogether is the best opportunity to safeguard the healthcare infrastructure of this country. In a country lacking uniform learning opportunities and facilities, conducting a standardized entrance examination is inherently unequal. Thus, Naam Tamilar Katchi strongly opposes the anti-equality NEET system.
When political parties and movements lead protests against NEET, they are often viewed merely as symbolic demonstrations. However, when students, youth, and the general public take to the streets to protest, it explodes into a democratic revolution, forcing the ruling class to submit and fulfilling their demands. I fully support and welcome the peaceful struggle of the youth gathering working toward this goal.
May the peaceful struggle of the youth in Tamil Nadu triumph!
May the NEET be completely abolished!
My wishes and love to all my brothers and sisters fighting with a militant spirit against injustice!
- Senthamizhan Seeman
Chief Coordinator | NTK
‘தூய அரசியலின் நேர் வடிவம்’ நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டிய மாமனிதர்..!
காவல்துறை அமைச்சராக இருக்கிறபோதே அரசுப் பேருந்தில் பயணம் செய்த எளிமையானப் பெருமகன்..!
தன்னுடைய மகன், தன் சொந்த முயற்சியால் காவல்துறைக்குத் தேர்வாகி வரும்போது, நான் சொல்லித்தான் கிடைத்தது என்று யாராவது சொல்லக்கூடும், எனவே அது வேண்டாம் என்று விலகச் சொல்லி, ஊழல், இலஞ்சம் என எவ்வித முறைகேடுகளும் அண்ட முடியாத பெருநெருப்பாக வாழ்ந்த பெருந்தகை..!
பெருந்தலைவர் காமராசருக்கு இத்தனைப் பெருமைகள் இருக்கிறது என்றால், அதற்கு ஐயா கக்கனைப் போன்ற பெருந்தகைகளும் பெரும் காரணம். தன்னுடைய அமைச்சரவையில் இருந்த எல்லோரையும் நேர்மையாளர்களாக வைத்திருந்ததால்தான் பெருந்தலைவரின் நேர்மை போற்றப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. தாத்தா கக்கன் அவர்களுடைய வாழ்க்கை, வரலாறு, வழித்தடம் ஆகியவை நம்மைப் போன்ற பிள்ளைகளுக்கு ஆகப்பெரும் படிப்பினை.
அவரைப் போலவே உண்மையும், நேர்மையும், எளிமையுமாக அரசியல் பணியாற்றுவோம் என்கிற உறுதியை பேரப்பிள்ளைகளாகிய நாம் இன்றைய நாளில் ஏற்போம்.
பெருமைமிகு தமிழர் இன அடையாளமாக, மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற ‘தூய அரசியலின்’ நேர்வடிவம் நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
NTK உறவுகளுக்கு...
அரசியலில் வெற்றி பெறுவது எதிர்க்கட்சித் தொண்டர்களுடன் சண்டையிடுவதால் அல்ல; அவர்களை நம் பக்கம் ஈர்ப்பதால்தான்.
இன்று ADMK, DMK இரண்டிலும் தலைமுறை மாற்றம் பற்றிய கேள்வி உள்ளது. TVK-க்கு விஜயின் நட்சத்திர ஈர்ப்பு இருக்கலாம்; ஆனால் அரசியலில் நீண்ட பயணம் மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசும் குரலுக்கும் களப்பணிக்கும் தான்.
அதற்கான மிகப்பெரிய வாய்ப்பு சீமானுக்கு உள்ளது.
எனவே நமது வேலை DMK, ADM TVK ஆதரவாளர்களை அவமதிப்பது அல்ல. அவர்கள் ஏன் NTK-வை ஆதரிக்க வேண்டும் என்பதை பொறுமையாக விளக்குவது.
எதிரிகளை உருவாக்காதீர்கள்.
ஆதரவாளர்களை உருவாக்குங்கள்.
அதுதான் வளர்ச்சி அரசியல்
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்’ என்று நல்லதொரு நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை வரையறுக்கிறார் நம்முடைய மூதாதை வள்ளுவப் பெரும்பாட்டன்!
நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமன்று; வருங்கால நம் தலைமுறைகளுக்குமானது! அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளித்து செல்வது ஒன்றே நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் பெருங்கடமை!
நிலம், நீர், காற்று, மலை, காடு, அருவி, ஆறு, கடல் என்று இயற்கையின் அருங்கொடைகள் அனைத்தையும் நாம் மாசுபடுத்தி, அழித்தொழிக்கக் கூடாது. தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில்
நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் இயற்கை வளங்களை அழிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது.
நம் கண் முன்னே இரசாயன ஆலைக்கழிவுகள் கலந்து நிலமும், நீரும், காற்றும், கடலும் மாசுபடுத்தப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும், மலைகள் வெட்டப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் தடுக்கத்தவறினால், அது வருங்கால தலைமுறைக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நாம் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
‘நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு!’ என்றார் நம்முடைய பெரிய தகப்பன் வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள்.
மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டு எதை நாம் உண்ணப்போகிறோம்?
எப்படி சுவாசிக்க போகிறோம்?
உயிர்கள் வாழவே முடியாத பூமியில் வளம் எதற்கு? வளர்ச்சி எதற்கு?
நீர்வழிப்பாதைகளை அழித்து, மழைநீரை வீணாக்கிவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்க பல்லாயிரம் கோடிகளைக் கொட்டுவதையும், மரங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து காற்றை மாசுபடுத்திவிட்டு, அதிக விலை கொடுத்து நல்ல காற்றை வாங்குவதையும் வளர்ச்சி எனக் கட்டமைப்பது அறிவுக்குப் புறம்பானது என்பதை என்றைக்கு நாம் உணரப்போகிறோம்?
வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம்!
வசதியாக வாழ்வதை விடவும்; நிம்மதியாக வாழ்வது முக்கியம்!
நம்மை வாழ வைப்பதாக நாம் நம்பும் சாமிகள் கூட ஆயிரம் உண்டு; ஆனால் நாம் வாழ்வதற்கான பூமி ஒன்றுதான் உண்டு என்ற உண்மையை என்பதை உணர்ந்து..,
நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம் என உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்போம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldEnvironmentDay
"A journey defined by excellence and fueled by service. From the fields of Karur to the frontline of leadership, he remains a real-life hero at 42..!"
..Birthday wishes to most eligible, educated, eminent, & efficient political leader -
Mr.Annamalai Kuppusamy💐💐
@annamalai_k
ஐம்பது ஆண்டு காலமாக,
மொழி, நாடு, மக்கள் என அனைத்து எல்லைகளையும் கடந்து, காலங்கள் கடந்தும் நிலைத்திருக்கும் ஈடு இணையற்ற இசையினை வழங்கி, பல கோடி மக்களின் மனங்களில் எல்லா விதமான உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும்..
அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு தட்டிப்பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடானது, இந்திய ஒன்றிய அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (TNMOA) மாநிலம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தது. அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாப்பதில் அன்றைய அதிமுக அரசு காட்டிய அலட்சியம் காரணமாக, அரசு மருத்துவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஊக்க மதிப்பெண்கள் வழங்கும் (Incentive Marks) முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், அது அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய நியாயமான வாய்ப்பை பெற்றுத்தரவில்லை.
அதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு (MCI) எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, கடந்த 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 462ஐ பிறப்பித்து, முதுகலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மருத்துவர் பெருமக்கள் இழந்த தங்கள் உரிமையை மீண்டும் பெற்று வந்தனர்.
ஆனால் 2025 கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில் 151 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் கடந்த 29.5.26 அன்று உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் தங்கள் படிப்பை முடித்த பின் ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பு அல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கும் உயர்நோக்கு கொள்கையாகும்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மருத்துவ கலந்தாய்வு நீட் மதிப்பெண் வரம்பினை (NEET cut-off percentile) தொடர்ந்து குறைத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அது முற்றிலுமாக (Zero percentile) குறைக்கப்பட்டது. ஆனால் இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு இந்த ஆண்டு திட்டமிட்டு நீட் மதிப்பெண் (cut-off) குறைப்பு அறிவிப்பை வேண்டுமென்றே வெளியிடாமல் தாமதப்படுத்தி, அனைத்திந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் நீட்டித்தது. அதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சேவை இடங்களை இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்க முயன்று, அதனை உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் தற்போது சாதித்துள்ளது. ‘நீட்’ மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிப்பதென்பது மாநில உரிமையை பறிக்கும் அப்பட்டமான சூழ்ச்சியாகும்.
தமிழ்நாடு அரசு தன் வசம் உள்ள அரசு மருத்துவர்களுக்கான உயர் மருத்துவ இடங்களை தானே நிரப்பலாம் என்று உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கியிருந்த நிலையிலும், ஒன்றிய அரசு இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு மூலம் மாநில இடங்களை கைப்பற்ற முயல்வது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் கொடுஞ்செயலாகும்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழ்நாட்டின் பொதுசுகாதார கட்டமைப்பையும், ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளில் உயர் மருத்துவம் பெறும் உரிமையையும் நேரடியாக பாதிக்கும். மேகதாது அணைபோல, அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயிலும் விவகாரத்திலும் தவெக அரசு மெத்தனமாக இருப்பது தமிழ்நாட்டின் உரிமையை தாரைவார்க்கும் சிறிதும் பொறுப்பற்றச் செயலாகும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தியது முதலாக அதனை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வினாத்தாள் கசிவுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளால் நீட் தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது. எனவே நீட் தேர்வு மதிபெண்ணை அடிப்படையாக கொண்டு உயர் மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்பை பறிப்பது அரசு மருத்துவப் பெருமக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
ஆகவே, நம்முடைய அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயில, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்படும் 50% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு தட்டிப் பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் |
நாம் தமிழர் கட்சி
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
கோவை சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஒரு பச்சிளம் பிள்ளை கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியா பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல, தவெகவின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனியுரிமையையும் உறுதிசெய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல; அது சுடுகாடு. தொடரும் பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இச்சமூகம் குற்றச்சமூகமாக மாறிவிட்ட பேராபத்துக்கான அறிகுறியாகும். ஒட்டுமொத்தச் சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பேரவலம் இது. இதற்குக் குற்றங்கள் நடந்தேறிவிட்டப் பின்னர், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்வது மட்டும் போதாது; குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே, முன்னுணர்ந்து தடுக்கக் குற்றத்தடுப்புக் காவல்துறையும் அமைக்கப்பட வேண்டும். எவ்விதக் கொடூரக் குற்றத்தையும் செய்வதற்குரிய குரூரச்சிந்தனையையும், துணிவையும் தரும் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், பரவலையும் முற்றாக ஒழிக்க வேண்டும். இனியொரு சிறுமியோ, பெண்ணோ ஒருபோதும் பலியாகக்கூடாது.
ஆகவே, சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு 50 இலட்சம் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் ஆளும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
வணக்கம் @CMOTamilnadu முதல்வர் அவர்களே,
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. தங்கள் ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என்று மக்களாகிய நாம் நம்புகிறோம்.
நேற்று கோவையில் 10 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரம் மிகவும் வேதனைக்குரியது.
பெண்கள் (குழந்தை முதல் முதியவர் வரை) பாதுகாப்பாக வாழும் சூழல் மிக அவசியம்.
பாலியல் குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி, தாமதமின்றி மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இந்த கடும் தண்டனை பார்த்து நாடு முழுவதும் குற்றம் புரியும் எண்ணம் கொண்டவர், அஞ்ச வேண்டும்.
@TVKVijayHQ@TVKPartyHQ
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
May 22 - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நாள் இன்று.
உரிமைக்காகப் போராடிய மக்களை, தனியார் முதலாளிகளுக்காக அரச எந்திரம் ஈவு இரக்கமின்றி நசுக்கிய நாள் இன்று.
இந்த அரசப் பயங்கரவாதம் நடைபெற்று இன்று 8 ஆண்டுகள் ஆகிவிட்டன.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 தமிழர்களை நினைவுகூர்வோம்.