“வாழ்த்தாத நாளில்லை வையகம்
மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர்
வாழ்த்தாத நாளில்லை வையகம்!
பொழுதெல்லாம் தமிழுக் குழைத்த தலைவனை
வாழ்த்தா நாளில்லை வையகம்” – பாவேந்தர் பாரதிதாசன்!
“தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள்” என வலியுறுத்தி, தமக்கென வாழாமல் தமிழுக்கென வாழ்ந்த மறைமலையடிகளின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவுப் பெருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை! மறைமலையடிகளாரின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.
வேதாசலம் என்ற தன் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் அடிகளார். “இந்தி பொதுமொழியா?” நூல் உள்ளிட்ட தம் பங்களிப்புகளால் இந்தித் திணிப்பை எதிர்த்தார்.
“தமிழர் அனைவரும் பண்டுபோல் தமக்குந் தம் இல்லங்களுக்கும் தம்மூர்களுக்கும் பிறவற்றிற்கு மெல்லாந் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டும்” என்ற மறைமலையடிகளின் வேண்டுகோளினை ஏற்று நம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்! வாழ்க மறைமலையடிகள் புகழ்!
இந்திய அரசியல் களம் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணம் முடித்து தாய் மண்ணுக்குத் திரும்பிய திராவிட நாயகர் நம் கழகத் தலைவர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் திரண்டு வந்து வரவேற்று மகிழ்ந்தனர். வாழ்த்து முழக்கங்கள் விண் அதிர ஒலித்தன.
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
சிறிய கருத்துக்களுக்கு, விமர்சனங்களுக்கு கூட கைது செய்யும் இந்த சேடிஸ்ட் முதலமைச்சர் விஜயின், 'தொடைநடுங்கி மாடல் அரசு' நீதிமன்றத்தில் குட்டுப்பட்டாலும் திருந்துவதாக தெரியவில்லை
விஜய் ஜனநாயகன் அல்ல ஒரு பயந்தாங்கொள்ளி என்பதையே வரலாறு பதிவு செய்யும்!
கழகத் தலைவர் @mkstalin அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கழக இளைஞரணி இன்று 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இளைஞரணியின் செயலாளர் மாண்புமிகு @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில் இளைஞரணி தம்பிகள் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். அடுத்த தலைமுறை திராவிட அரசியலின் OG-ஆக தம்பிகள் திகழ்வதற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது. அத்தளத்தில் தடம் பிறழாமல் நடப்போம்.
என்னை தாலாட்டியும் கண்டித்தும் செதுக்கியது இளைஞரணிதான் என்பதிலும் பேருவகை அடைகிறோம்.
@dmk_youthwing
#DMKYW #47_Years_of_DMKYW
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
இதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற இலட்சணமா CM Saar. உங்க ஆட்சியில் நாளுக்கு நாள் பாலியல் வன்முறைகள், படுகொலைகள் அதிமாக நடக்கிறது.
சும்மா டயலாக் பேசி, reels வித்தைகளைக் காட்டாமல் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய அக்கறை காட்டுங்க டம்மி முதல்வரே.
#TVKVijayFails
முதலமைச்சர் விஜய் அவர்களே, உங்களை கேள்வி கேட்கும் ஒரு இளைஞரை தடுத்தால் ஒரு லட்சம் இளைஞர்கள் கேள்வி கேட்க வருவார்கள். உங்களுக்கு தெம்பு, திராணி இருந்தால் கைது செய்து பாருங்கள்.
- கழக அமைப்புச் செயலாளர் திரு @RSBharathiDMK அவர்கள்
#TVKFails
இளைஞர்களைக் கண்டு தொடைநடுங்கும் தவெக முதல்வரும், நிழல் முதல்வர்களும்!
GenZ DMK என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. அன்பானந்தம் என்பவரை நள்ளிரவில் ராயக்கோட்டை போடம்பட்டி வீட்டில் புகுந்து, பெற்றோரிடம் அத்துமீறி வாக்குவாதம் செய்து அராஜகமாகக் கைது செய்ய முயன்ற தவெக அரசின் பாசிச வெறி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
சினிமா வெளிச்சத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஏமாற்றலாம் என்ற உங்கள் பகல்கனவை உடைத்து, தவெகவின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தரவுகளோடு தோலுரிக்கும் GenZ இளைஞர்களைக் கண்டால் ஏன் இவ்வளவு பயம்?
உங்களை எதிர்த்துக் கேள்வி கேட்டாலே ஆபாசமாகத் திட்ட ஆன்லைன் ரவுடிகளை ஏவுவது, அல்லது நள்ளிரவில் போலீஸை அனுப்புவதுதான் உங்களின் மாற்று அரசியலா?
விமர்சனங்களை நேர்கொண்டு சந்திக்க வக்கற்ற ஒரு 'தொடைநடுங்கி' அரசாங்கம் உங்களுடையது!
கேமரா முன் "ஜனநாயகம், கருத்துரிமை" என்று மனப்பாடம் செய்த வசனத்தைப் பேசிவிட்டு, இருட்டில் போலீஸை ஏவி மிரட்டுவதுதான் அப்பட்டமான சர்வாதிகாரம் மற்றும் உண்மையான பாசிசம் CM சார்!
அதிகார வெறிகொண்டு குரல் எழுப்பும் இளைஞர்களை ஒடுக்க நினைக்கும் உங்களது கோழைத்தனமான அரசுக்கு, வெகு விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்!
#TVKFails
தவெகவிற்கு துணை போகும் காவல்துறையே எதிர்கொள்ள வலுவான சட்டத்துறை அணி திமுகவிடம் உள்ளது. இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டால் அதனை சட்டத்தின் துணை கொண்டு முறியடிப்போம்.
- கழக அமைப்புச் செயலாளர் திரு @RSBharathiDMK அவர்கள்
#TVKVijayFails
திரைப்பட இயக்குனர் திரு. கௌதமன் அவர்கள் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ளச் செல்லும் வழியில், கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திராவிட மாடல் ஆட்சியில் நாங்கள் எடுத்த நடவடிக்கையால் ஏதேனும் நன்மை நடந்தால், அதற்கு உடனடியாக தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது.
பேருந்துகளில் முதியவர்களுக்கு இலவச பயணம்; அரசுப்பள்ளியில் முதலமைச்சர் படமில்லாத பைகள் ஆகியவை என இவர்கள் Sticker ஒட்டிய list மிகப்பெரிய list.
- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
தவெகவின் தலைமை அலுவலகத்திலேயே Power cut ஆகிருக்கு. ஆளுங்கட்சியா இருந்தும் பனையூர்லயே பவர் இல்லையே என ஆளுங்கட்சியினரே புலம்பிட்டு போனதா தகவல் வந்துச்சு.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
அரசுப் பள்ளிகளுக்குள் தவெக எம்எல்ஏ-க்கள் சென்று ஆய்வு என்கிற பெயரில் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆபாசப் பாடல்கள், தவறான பாடல்கள் எல்லாம் ஒலிபரப்புவதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதனை முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அறிவித்துள்ள குறுவை சாகுபடி சிறப்புத்திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. அதனை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை முதலமைச்சர் கேட்க வேண்டும்.
விவசாயியாக பிறக்க இன்னொரு ஜென்மம் தேவையில்லை.. எப்போது நினைத்தாலும் விவசாயி ஆகலாம்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly