நிர்ணயித்த நேரத்துக்குள் தான் வந்தார்னு நீதிமன்ற பதிவே இருக்கு னா .
ஆனால் " எப்படி ஒரு நாளில் 41 உடல்களை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தீர்கள் " என்ற கேள்விக்கு , இன்னும் நீங்கள் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கவில்லை !
எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நெனைக்க கூடாது னா !
பொதுவாக ஒரு அதிகாரி அல்லது அரசியல் பிரமுகர் ஓர் இடத்திற்கு ஆய்வுக்குச் சென்றால், அங்குள்ள பிரதான ‘தலைமை நாற்காலியில்’ போய் அமர்வதையே கௌரவமாகக் கருதுவார்கள். "நான்தான் பாஸ், உன்னைக் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என்ற அதிகாரத் தொனியை, வார்த்தைகளால் சொல்வதை விட அந்த நாற்காலியில் அமர்வதன் மூலமே சத்தமில்லாமல் உணர்த்திவிடுவார்கள். இது காலம் காலமாகத் தொடரும் ஒரு அதிகார வர்க்க மனோபாவம்.
ஆனால் தலைமை மருத்துவரின் இருக்கையில் அமராமல், அவருக்கு எதிரே இருக்கும் மக்கள் இருக்கையில் அமர்ந்து முதல்வர் ஆய்வு செய்த விதம் சாதாரணமானதல்ல. அது ஒரு அரசியல் புரட்சி!
நான் உங்களை மிரட்ட வரவில்லை, கேள்வி கேட்க வரவில்லை, உங்களோடு இணைந்து பணியாற்ற வந்திருக்கிறேன்" என்ற இணக்கமான சூழலை இந்த ஒரே ஒரு நகர்வு உருவாக்கிவிடுகிறது. எதிரில் இருப்பவரைப் பயமுறுத்தாமல், அவரோடு சமமாக அமர்ந்து பேசும் போதுதான் உண்மையான கள நிலவரமும், குறைகளும் வெளியே வரும் என்பதை உணர்ந்த மக்களின் முதல்வர் மனோபாவம் இது.
இதற்கு முன்பு எந்த முதல்வரும் இதைச் செய்ததில்லை என்றே நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் இப்படித்தான் எளிமையாக இருப்பார் எனப் படித்திருக்கிறேன்.
அப்படிப் பார்த்தால் கடந்த ஐம்பது ஆண்டு கால அரசியலில் இது ஒரு வரலாற்றுப் படம், அரசு நிர்வாகம் எப்படி இணக்கமாக செயல்பட வேண்டும் என பிற அதிகாரிகள், அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் ஒரு பாடமும் கூட.
#CMOTamilNadu #cmvijay
நன்றி: ஹரிஹர சுதன் தங்கவேலு முகநூல் பதிவு
Hariharasuthan Thangavelu