தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் வணக்கம்!
ஏப்ரல் 23.
தமிழகத்தின் ஜனநாயகத் திருவிழா நாள்.
எல்லோரும் சீக்கிரமாகவே எழுந்து தயாராகி,
காலை 7மணியில் இருந்து
12மணிக்குள்,நமக்குரிய வாக்குச்சாவடிக்குச் ச��ன்று நமது வாக்கினைப் பதிவு செய்திட வேண்டும்.
குறிப்பாக,முதியவர்களும்,
பெண்களும் வெயிலுக்கு முன்பாகவே தங்கள் வாக்கினைப் பதிவு செய்துவிடுவது நல்லது.
மேலும்,வாக்காளர்கள் அனைவரும் மதியத்திற்குள் தங்களது வாக்கினைப் பதிவு செய்துவிட்டால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துகொள்ளலாம்.
எனவே, ஒருவர் விடாமல், ஒரு வாக்குகூட விடுபடாமல் ‘நம் வாக்கு - நம் உரிமை’ என்பதை உறுதி செய்ய, 100% விழிப்புணர்வுடன் இருக்கவே இந்த வேண்டுகோள்.
100% வாக்குப் பதிவினை உறுதி செய்வதை லட்சியமாகக் கொண்டு வாக்களிப்போம்.
ஜனநாயகம் காப்போம்.