அவதூறு பரப்பும் @sunnewstamil 🐗 மற்றும் பல ஊடகங்களுக்கும் செருப்படி💥
உண்மைத்தன்மை என்னன்னு தெரியாம மீடியாக்கள் செயல்படுவதனால் தான் மக்கள் செய்தி சேனலை புறக்கணிச்சுட்டாங்க @PttvNewsX@polimernews@NewsTamilTV24x7@News18TamilNadu இனியாவது மக்களுக்கு விசுவாசமா நேர்மையா இருங்க
“இப்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பேரிடர்க் காலத்தில்…” என்று திருவாய் மலர்ந்திருக்கும் திரு.உதயநிதி அவர்களே,
எது பேரிடர்க் காலம் என்று பார்ப்போமா?
தமிழகத்திற்கான பேரிடர்க் காலம்:
*அண்ணா உருவாக்கிய கட்சியை அவரது குடும்பத்தைக்கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில்கூட இடம் பெற்றிராத ஒரு குடும்பம் மட்டுமே கைப்பற்றியதே, அதுதான் தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட பேரிடர்க் காலம்.
*அண்ணாவிற்குப் பிறகு கலைஞரை முதல்வராகவும் தலைவராகவும் ஆக்கப் பேருதவியாக இருந்த எம்.ஜி.ஆரை நன்றி விசுவாசமின்றித் தூக்கி வீசிய ஒரு குடும்பத்தால் உருவானதுதான் தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட பேரிடர்க் காலம்.
*திருட்டு மாடல் திமுகவின் ஆட்சிக் காலம் முழுவதும் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்பட்டதுதான் பேரிடர்க் காலம்.
தீயசக்தி திமுகவிற்கான பேரிடர்க் காலம்:
*ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொள்ளை அடித்த தீயசக்தி திமுகவிற்கு, அரசியலில் கொள்ளை அடிக்க இயலாத நிலையை உண்டாக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் வருகைதான் திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம்.
*லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்கி வரும் எங்கள் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சிதான் தீயசக்தி திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம்.
*அடித்த கொள்ளையால் அகப்பட்டு, தலைமறைவாகவும் வெளிநாட்டு மருத்துவமனைகளிலும் பதுங்கித் திரியும் திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கும்தான் இது அரசியல் பேரிடர்க் காலம்.
*திமுக முன்னாள் அமைச்சர்கள் சிக்கினால், முக்கியக் குடும்பமும் சிக்கி, திக்கித் திணறுமோ என்பதுதான் தீயசக்தி திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம்.
இப்படி தீயசக்தி திமுகவால் தமிழக அரசியலுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிடர்க் காலம் ஏற்பட்டதும் உண்மை. ஆட்சியில் இருந்தபோது அடித்த கொள்ளைகளால் திமுகவிற்கும் இப்போது பேரிடர்க் காலம் ஏற்பட்டு இருக்கிறது என்பதும் உண்மை.
ஆனால், எங்கள் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சியின் காரணமாக, தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது. அந்த வகையில், தீதும் சூதும் நிறைந்த திமுகவிடம் இருந்து தப்பிய தமிழக மக்களுக்கு இது அழகிய தென்றல் காலம். அகமகிழும் பேரின்பக் காலம். ஆனால், தீயசக்தி திமுகவிற்கு இது பேரிடர்க் காலம்தான். அதில் சந்தேகமே இல்லை. எப்படியோ இப்படி உளறியாவது உண்மையை ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்.
வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்லவிருக்கும் நிலையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான இடம் தேர்வு செய்வது குறித்து தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு...
Karur | vijayabaskar | 05 July 2026
#CMVijay#Karur
திமுகதான் தமிழ்நாட்டின் பேரிடர். அந்த பேரிடரில் இருந்து தமிழ்நாடு தவெக எனும் மீட்பு சக்தியால் மீட்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டியை நிரந்தரமாக மீட்கும் சக்தியாக தலைவர் அண்ணன் விஜய் இருக்கிறார்கள்.
ஒப்பாரி வைப்பதை நிறுத்தி விட்டு வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள்.
எங்கள் மாடல் சமூகநீதி மாடல் என்பதை மக்கள் எல்லோரும் சொல்லி வருகிறார்கள்.
எங்களுக்கு கிடைத்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் பேசுவது தெரிகிறது.
ஜெலுசில் சிரப் வாங்கி குடியுங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விடும்.