இன்று மாமல்லபுரம் அருகே கோவளத்தில் மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன்!
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK