அண்ணா சாலையில் Food Street உரிமம் பெற்றுத்தருவதாக கூறி மாதம் மாதம் லட்ச கணக்கில் வாடகை வாங்கி விட்டு ஏமாற்றியதாக திமுக வட்ட செயலாளர் மீது புகார்.. நள்ளிரவில் வீட்டு வாசலில் கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
#Chennai | #DMK | #FoodStreet | #DistrictSecretaries | #PolimerNews
21 ஆண்டுகளாக நீடித்து வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவரும் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து, அன்புடன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்த சோளங்குருணி கிராம மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனும், அடிப்படை தேவைகளும் நிறைவேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் தலைமையில் தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றுவோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
இன்று மாமல்லபுரம் அருகே கோவளத்தில் மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன்!
#JustNow || தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் என புகார்.. - போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடி லஞ்சம் கைமாறியது கண்டுபிடிப்பு
#DMK | #Police | #School | #PolimerNews
தலைமைச் செயலகத்தில் உள்ள எமது அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை, மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களிடம் வழங்குவதற்கு நேற்று (25.06.26) மாலை தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டேன்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள், 'நானே உங்கள் அறைக்கு வந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறேன்' என்று நேரில் வருகை தந்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் மக்கள் நலப்பணி சிறந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தினேன்.
@imrajmohan