"அதிகார பகிர்வு" என்ற மக்களாட்சிக் கோட்பாடு குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் நிலைப்பாடுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், தார்மீக அரசியல் நாகரிக எல்லைகளை மீறியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்கள் தனது சமூக ஊடகப் பக்கத்தில் (X தளம்) பதிவிட்டுள்ள ட்வீட் அநாகரீகத்தின் உச்சம்!
சமூக நீதி சார்ந்த கட்சிகள் தங்களின் உரிமைகளையோ அல்லது மாற்று அரசியல் கருத்துகளையோ முன்வைத்தால், அவர்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், மிரட்டும் தொனியில் பேசுவதும் திமுக-வின் அதிகார மமதையையே காட்டுகிறது!
தமிழக வெற்றிக் கழகம் முன்வைக்கும் நேர்மையான, அனைவரையும் உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வு என்ற அரசியல் தத்துவம், தங்களின் குடும்ப அரசியல் ஏகபோகத்தைச் சரித்துவிடும் என்ற பயத்தில், திமுக-வினர் தங்களின் நிதானத்தை இழந்து பிதற்றத் தொடங்கியுள்ளனர்!
உங்கள் சுயரூபத்தை நீங்களே வெளிப்படுத்தி விட்டீர்கள்!