கேள்வி நேரத்தை ரத்து பண்ணிட்டா எதிர்கட்சி வரிசையில் இருந்து பதிலுரைக்கு கேள்வி வராது ன்னு எதுவும் ஐடியா இருந்தா அதை இப்போவே Erase பண்ணிடுங்க @actorvijay ப்ரோ..!!
மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் 1 மணி நேரம் உங்கள் அரசின் சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசி இருக்கிறார்.
இந்த Cringe கதை, Unwanted Action எல்லாம் பண்ணும் உங்க வழக்கமான ரீல் வேலைகளை விட்டுட்டு, Real பதில்களை கொடுக்கப் பாருங்க.
We are Waiting..!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
" ஜனநாயகன் படம் ஆஹா ஓஹோ இந்த ஆட்சியில 100 நாள் ஓடும்னு சொல்லிட்டு இருந்தாங்க ஆனா ஒரு வாரம் கூட ஓடல காத்து வாங்கிட்டு தான் இருந்தது அதே மாதிரி தான் இந்த ஆட்சியும் "
- EPS ஐயா முரட்டு Form ல இருக்காரு 🤣🔥
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு,
திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.
நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.