Reels க்காக முதலமைச்சரே கிளம்பிவிட்டார்?
ஏதோ திரையரங்கோ, முதல் நாள் முதல் காட்சியோ அல்ல —இது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை.
உயிருக்காகப் போராடும் குழந்தைகள் இருக்கும் மருத்துவமனையையே அரசியல் விளம்பர மேடையாக மாற்றும் அளவுக்கு அதிகார மமதை தலைக்கேறிவிட்டது போல.
த.வெ.க வின் அனைத்து MLA க்களும், மந்திரிகளும் Reels போடுகிறார்கள் நானும் களத்தில் குதிப்போம் என்று விஜய் அவர்கள் இறங்கிவிட்டாரா?
மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகள் Silence Zone. நோயாளிகளின் அமைதிக்காகவே அந்தச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் விஜய் அவர்களுக்கு மட்டும் அந்தச் சட்டம் பொருந்தாதா?
Noise Pollution (Regulation and Control) Rules, 2000-ஐ மீறுவது, Environment (Protection) Act, 1986-இன் Section 15-ன் கீழ் நடவடிக்கைக்கு உட்பட்டதாகும். அந்தச் சட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ₹1 லட்சம் அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
இதே சம்பவத்தை ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அல்லது வேறு ஒரு நடிகர் செய்திருந்தால், ஊடகங்களில் நாள் முழுவதும் விவாதம் நடந்திருக்கும். காவல்துறை மின்னல் வேகத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கும். “சட்டத்தின் ஆட்சி” என்று பாடம் எடுத்திருப்பார்கள்.
ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் செய்தால் அது “ஆய்வு ”. மற்றவர்கள் செய்தால் அது “குற்றம்”. இதுதானா சமத்துவ ஆட்சி?
குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனை என்பது அரசியல் மேடை அல்ல. உங்கள் அதிகாரத்தின் ஆரவாரம் ஒலிக்கும் இடம் அல்ல.
அதிகாரம் என்றால் சட்டத்திற்கு மேலான இடம் அல்ல. மாறாக, சட்டத்தை முதலில் மதிக்க வேண்டிய பொறுப்பு.
முதலமைச்சர் அவர்களே,
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மருத்துவமனையை, அரசியல் காட்சிப்படுத்தலுக்கான அரங்கமாக மாற்றாதீர்கள்.
உங்கள் பதவி மக்களை விட பெரியதல்ல.
உங்கள் விளம்பரம் குழந்தைகளின் அமைதியை விட முக்கியமானதல்ல.உங்கள் அதிகாரம் சட்டத்தை விட உயர்ந்ததல்ல.
சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், அது ஆட்சியாளர்களிடமிருந்தே தொடங்க வேண்டும்.
@Keerthana4VNR@Ford ஏன்டா உன் உழைப்புல புதுசா ஒரு கம்பெனியை கொண்டு வா திமுக கொண்டு வந்ததெல்லாம் நான் கொண்டு வந்தேன்னு சொல்றதுக்கு அதுக்கு நீ தேவை இல்லை அதற்கு யாரோ ஒரு சுப்பணோ குப்பணோ கூட போதும்
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் அதே நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வி என்ற பெண் அமைச்சர் ராஜ்மோகனின் மனைவி மரியா லீலாவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரில். அரசாங்க வேலை வாங்கித் தருவதாக மரியா லீலா வாக்குறுதி கொடுத்ததாகவும். இது பற்றி மரியா லீலா அமைச்சராக இருக்கும் தனது கணவர் ராஜ்மோகன்னிடம் கூறியதாகவும். நடப்பது TVK ஆட்சிதான் அதனால் கண்டிப்பாக என்னால் வாங்கித் தர முடியும் என்று அவர் கொடுத்த நம்பிக்கையின் பெயரில். அமைச்சரின் மனைவி மரியா லீலா பல தவணைகளில் சுமார் 11,00,000 ரூபாய் வெற்றி செல்வியிடம் இருந்து பெற்றதாகவும். ஆனால் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திரும்பி தராமல் ஏமாற்றியதாகவும். மேலும் இது பற்றி புகார் கொடுப்பேன் என்று வெற்றி செல்வி கூறிய பிறகு வெற்றி செல்விக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில். மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ்பி அலுவலகம் நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு TVK அரசிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவும், கிடப்பில் போட்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்ற ஆசையிலும் எஸ்பி அலுவலகம் மனுவை கிடப்பில் போட்டதாக வெற்றிச்செல்வி தரப்பு கூறுகிறது.
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!