அண்ணாமலையாருடன் இணைந்து அரசியல் பயணத்தில் பங்கேற்க விரும்பினால், கீழே உள்ள [பதிவு இணைப்பு] ( https://t.co/YmpqsgvsR1 ) மூலம் உங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்கள் பங்களிப்பே ஒரு புதிய அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்தை வடிவமைக்கும். 🙏🏻
@annamalai_k#அண்ணாமலை ❤️
Delighted to have had the opportunity to inaugurate the expanded new campus of the Indian Multispeciality Hospital (IMSH) in Udumalpet today. Extending my heartfelt congratulations to the management team for their tremendous effort in bringing state-of-the-art medical departments, including Cardiology and Nephrology, to the region.
Best wishes to the entire team of consultant doctors, specialists, and support staff as they begin this new chapter in their medical service.
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) மற்றும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் 39 ஆவது தமிழ் விழாவில், அமெரிக்க நேரம் EST ஜூலை 3 அன்று மாலை,(இந்திய நேரம் ஜூலை 4 காலை) நமது அன்பான தமிழ் வம்சாவளியினரைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்பும், தமிழ்ப்பற்றும் நிரம்பிய இந்த தமிழ்ச் சமூக சந்திப்பில், உங்கள் அனைவரையும் நேரில் காண ஆவலாக உள்ளேன்!
Narcotics are dangerously infiltrating TN, threatening our youth and our collective future. To combat this crisis, @WTLFoundation has prepared a policy paper for a Drug-Free Tamil Nadu. The policy paper elaborates on the crisis at hand and also explores the best practices worldwide in the fight against drugs.
https://t.co/SZqMKx6CZa
This policy paper also outlines a definitive 5-year roadmap focused on rigorous enforcement, prevention, rehabilitation, and reintegration to kill the demand for drugs in our state entirely.
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
போதையில்லா தமிழகம் பிறக்கட்டும்!
#WTL_WhiteBandMonth
சமூக வலைத்தளங்கள் மூலம் அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக ஓரணியில் இணைவோம்! வாருங்கள்!
எங்களுடன் இணைய உடனே கீழுள்ள Google Form-ஐ நிரப்பி பதிவு செய்யவும்!
https://t.co/k7GJdUwmhq
My interview to @timesofindia on the outcome of the recent elections in Tamil Nadu, my political journey with the BJP, the reasons behind my decision to move on, and the vision and objectives of our new political movement to shape a stronger future for Tamil Nadu.
https://t.co/SVCXXfyHYZ
தமிழ்நாட்டிற்கு ஒரு வலிமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாங்கள் தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்தின் தொலைநோக்கு பார்வை மற்றும் நோக்கங்கள் குறித்து 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' (Times of India) நாளிதழுக்கு நான் அளித்த நேர்காணல்."
அன்புடன்
@annamalai_k ❤️
கடந்த 2020 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில், உதவி மின் பொறியாளர் பணியிட நியமனங்களுக்கான TNPDCL தேர்வு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, நிர்வாகக் காரணங்களைக் கூறி, இந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக, TANGEDCO அறிவித்தது. மேலும், TN Act No. 14 of 2022, TNPSC (Additional Functions) சட்டத்தின்படி, TNPSC மூலமாக, இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்றும், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்பகிர்மானக் கழக உதவி மின்பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக, 2025 ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 26.07.2024 அன்று வெளியிடப்பட்ட, பொதுப்பணித்துறை (PWD) உதவி மின் பொறியாளர் காலிப் பணியிட நியமனங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக, முன்பு ரத்து செய்யப்பட்ட TNPDCL உதவி மின்பொறியாளர் காலிப் பணியிடங்களில், 195 இடங்கள், பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் மூலம் நிரப்பப்படும் என்று திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு வயது வரம்பும் 32 என்று அறிவிக்கப்பட்டது.
இதனால், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு, அந்தத் துறை சார்பான தேர்வுகள் ரத்து செய்து, எந்த மறு அறிவிப்பும் செய்யாமல் காத்திருக்க வைத்து விட்டு, அதே பணியிடங்களை, பொதுப்பணித்துறை சார்பான தேர்வுகள் மூலம் நிரப்ப முடிவு செய்தது, அந்த இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. குறிப்பாக, அரசின் நிர்வாகக் குளறுபடி காரணமாக, தகுதியான இளைஞர்களுக்கு வயது வரம்பில் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு தளர்வு வழங்கும் தமிழக அரசின் 13.09.2021 அன்று வெளியான அரசாணை எண் 91 ன் படி, கொரோனா பெருந்தொற்றால் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால், வயது உச்ச வரம்பு, 2 ஆண்டுகள் தளர்த்தப்படும். ஆனால், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, 04.07.2022 அன்றுதான். ஏற்கனவே தேர்வுகள், 2020 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், பொதுவாக வெறும் இரண்டு ஆண்டுகள் தளர்வு என்பது எப்படிப் பொருத்தமானதாக அமையும்?
இந்த நிலையில், வயது வரம்பில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கை, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மின்பகிர்மான கழக உதவி மின்பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள், கடந்த 23.01.2026 அன்று வெளியாகின. பணி நியமனங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் முன்பாக, வயது வரம்பைக் காரணம் காட்டி, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற இளைஞர்களைக் கூட தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். TNPSC அமைப்பின் இந்த நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார வாரிய உதவி மின்பொறியாளர் பணிக்காகக் காத்துக் கொண்டிருந்த தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த துரதிருஷ்டவசமானது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண் 231 மூலம் தமிழக அரசு சிறப்புத் தளர்வு வழங்கியுள்ளது. அதே போல, கடந்த 2013 ஆம் ஆண்டு, இதே போன்று, நீண்ட கால பணியிட நியமனங்கள் நடைபெறாத நிலையில், விதி 91(h) மூலம், ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை, தமிழக மின்சார வாரியம் வழங்கியிருந்தது. கடந்த 2019 முதல், 2024 வரை, எந்தப் பணியிடங்களும் நிரப்பப்படாத நிலையில், இதே சூழ்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கும், வயது வரம்பில் தளர்வு கொடுத்திருக்க வேண்டும். நிர்வாகத் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு, அந்த நிவாரணத்தை மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். கடந்த கால முன்னுதாரணங்களைப் பின்பற்றி, நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும். மேலும், தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு கூடுதல் அறிவிப்பு என்ற பெயரில் பணியிடங்களையோ, விதிகளையோ மாற்றும் முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலம், அரசின் நிர்வாக அலட்சியத்திற்குப் பலியாக அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC), under the direction of the TVK Govt, had filed an FIR & conducted a raid yesterday at the residence and other premises associated with former DMK Minister Thiru E.V. Velu avl in connection with alleged irregularities in the execution of road contracts awarded in 2022.
I welcome the TVK Govt's efforts to investigate allegations of corruption from the previous DMK regime. I sincerely hope that the TVK Govt ensures a swift conclusion to these cases, and that anyone found guilty is held accountable in accordance with the law.
While we are on this subject, I urge the TVK Govt to look into the following scams that were exposed over the past 5 years, order an enquiry, and take action accordingly. Naming a few to begin with.
1.BGR Energy Scam – Flouting rules, re-awarding a contract, and later cancelling it after being exposed.
2.Nutrition Kit Scam – Procurement of Health Mix from private vendors at an inflated price despite Aavin coming forward to manufacture it.
3.Pongal Dhoti Scam – Use of excess polyester instead of cotton, and proofs of which were submitted to DVAC.
4.Multiple scams in the State Transport Department – Procurement of Reflective & Rear Marking Plates and much more.
5.TNMSC Scam – Procurement of Pesticides
6.MGNREGA Scam
We also hope the TVK Govt finds the time to solve a long-pending mystery. For years, we have been asking about the rather curious coincidence of Thiru Udhayanidhi Stalin avl's fan club and Noble Steels operating from the very same address, and about Noble Steels' announcement of a ₹1,000 crore investment in Tamil Nadu soon after former Chief Minister Thiru M.K. Stalin's visit to Dubai (that investment remains an announcement, is a topic for another day).
இவருக்குத்தானே Anti-nationalist சாயம் பூச பாத்திங்க? Aug 15th அன்னிக்கு Abdul Kalam Centre for ethics & politicsஐ திறக்கிறார். 'இந்தியா வளரணும், அதில் தமிழகம் முன்னணியில் இருக்கணும்' என்று சொல்கிறார்.
ஆனா நீங்க? உங்க கட்சியில இருந்தா மட்டும் தான் தேசப்பற்று உள்ளவனா? 🤡
#Annamalai
இன்று @annamalai_k அண்ணாவை சந்தித்தேன். ரொம்ப நேரம் பேசுற வாய்ப்பு கிடைத்தது.
செம்ம மீட்டிங்! ரொம்ப Informative, Casual & Fun-ஆ இருந்துச்சு. சினிமா, அரசியல் என்று நிறைய விஷயங்களைப் பற்றி பேசினார்...
முன்னாடியை விட ரொம்ப Energetic-ஆ இருக்காரு…
என்ன பண்ணணும், எப்படி பண்ணணும், எப்ப பண்ணணும்னு ரொம்ப தெளிவா இருக்காரு….
பொறுமையாவும் நிதானமாவும் அடுத்த வேலைக்கு தயாராகிட்டு இருக்காரு. 👍👍