தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து புகார் .
தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி - தலைமைக் கழக தலைமை சட்ட ஆலோசகர் பி.வில்சன், எம்.பி., - எஸ்.ஆஸ்டின், M.L.A., - சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், Ex.M.L.A., ஆகியோர்
மாண்புமிகு ஆளுநரிடம் புகார் கடிதம்!
கடந்த 1.7.2026 அன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பட்ட புகாரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து குறித்து கடிதம் எழுதப்பட்டது. அதுகுறித்து இன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி, இடைத்தேர்தலில் த.வெ.க.கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறச் செய்வதாக திரு.வைகோ அவர்கள் அளித்த செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்ததை மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் தெரிவித்து, அதன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
திருச்செந்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறப்பினர் திரு. அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., அவர்களை அவதூறு வழக்கில் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐந்து மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.கட்சியில் இணைந்திட வற்புறுத்தியதை மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
நாகர்கோவில் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆஸ்டின் அவர்களை த.வெ.க.சார்பில் அவரை தொடர்பு கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.கட்சியில் இணைந்திட வலியுறுத்தியதுடன், அவர் விரும்பிய துறை அமைச்சர் பதவி கொடுப்பதாக நிர்ப்பந்தித்து குறித்தும் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
வேப்பனஹள்ளி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. சீனிவாசன் அவர்களையும் த.வெ.க. கட்சியில் இணையும்படியும், 50 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் வாரியத் தலைவர் பதவி அளிப்பதாகவும் ஆசைக்காட்டி அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திட பேசியதாக மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நண்பர்கள், திரு. ஜான்ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணுரெட்டி ஆகியோர் அரசு அலுவல்களில் தலையிடுவதையும் – அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொண்டதையும் மற்றும் அவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் தனியாக அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் – அதேபோல், முதலமைச்சரின் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக முதலமைச்சர் அவர்களின் தனி பாதுகாவலர் ஒருவர் பணியாற்றி வருவதும், அவர் முதலமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சருடன் சட்டத்திற்கு புறம்பாக அவருடைனே பயணிப்பது குறித்தும் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேற்சொன்ன புகார்களை கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி - நாகர்கோவில் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், எம்.எல்.ஏ., - தலைமைக் கழக தலைமை சட்ட ஆலோசகர் பி.வில்சன், எம்.பி., - சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், Ex.M.L.A.. ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்து, புகார் கடிதத்தை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் அளித்தனர். அனைத்து புகார்களையும் – புகார்களின் சாரம்சங்களையும் கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு ஆளுநர் அவர்கள், இதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இன்று சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற தி.மு.க தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் திரு.துறைமுகம் காஜா அவர்களின் பேத்தி திருமிகு. சமீனா சப்ரியத் - திரு. ஹனிஃப் கான் இணையரின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினேன்.
26 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (4.07.2000) அன்று, நவீன தமிழகத்தின் தந்தை, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு முயற்சியால் உருவாகி, சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள Tidel Park எனும் மென்பொருள் பூங்காவை இந்தியப் பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய் அவர்கள் திறந்துவைத்த நாள் இன்று!
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திரு. @ARROffice அவர்களை, தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் தி.மு.க அடிபணியாது.
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலக சொன்ன மதிமுக
ஏன் கூட்டணியில் வெற்றி பெற்ற தனது நாடாளுமன்ற உறுப்பினரை பதவி விலக சொல்லவில்லை.
ஏனென்றால் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு தர்மம்.
மற்றவர்களுக்கு #அதர்மம்
Impact After Term | 13 : iTNT Hub — Scaling Tamil Nadu's Deep Tech Ecosystem (Part 2)
Establishing iTNT Hub was only the first step. The larger vision was to ensure that Tamil Nadu's emerging Deep Tech ecosystem extended beyond Chennai, enabling innovators, researchers and entrepreneurs across the State to participate in the technologies shaping the future.
Under the leadership of Dr. PTR as Minister for Information Technology and Digital Services, iTNT Hub expanded through regional centres in Tiruchirappalli, Madurai and Coimbatore. By bringing world-class infrastructure, mentoring, industry partnerships and access to investment closer to Tier-II and Tier-III cities, the initiative laid the foundation for a more decentralised innovation ecosystem.
To strengthen early-stage Deep Tech entrepreneurship, the FOUNDATION Fund was launched, through which the first five startups received ₹53 lakh in seed funding. The Deep Tech Hardware Product Design Scheme further supported indigenous hardware innovation by providing grants of up to ₹15 lakh for product design and development.
Recognising that innovation achieves its greatest value only when research reaches the marketplace, the Tamil Nadu Technology Transfer Facilitation Centre (TNTTFC) was established in July 2025. Through patent facilitation, IP management, Innovation Spotlight and the Research2Revenue programme, the initiative has already enabled more than 60 patent filings while helping researchers translate ideas into commercially viable technologies.
Announced by Dr. PTR in the Legislative Assembly in June 2024 and successfully held on 30 July 2025, the Innovate in TN IP Conclave strengthened Tamil Nadu's intellectual property ecosystem. Bringing together organisations such as the World Intellectual Property Organization (WIPO), the Indian Patent Office, NASSCOM, C-DAC, Bosch and Mahindra & Mahindra, the conclave showcased 16 emerging technologies, facilitated four technology transfers to industry, and connected 44 researchers and startups with iTNT Hub's pre-incubation and acceleration programmes.
During this period, iTNT Hub also expanded Tamil Nadu's global innovation network through collaborations with leading universities, research institutions and industry partners in India and abroad. Partnerships with organisations such as the University of Melbourne, Rutgers University, Bosch, Amazon Web Services, Rolls-Royce, C-DAC and others opened new opportunities for technology collaboration, industry engagement and global market access for startups.
These initiatives culminated in the launch of the Tamil Nadu Deep Tech Startup Policy at UmagineTN 2026, providing the State with its first comprehensive policy framework dedicated to accelerating Deep Tech innovation, strengthening research commercialisation and building globally competitive technology enterprises.
Together, these initiatives transformed iTNT Hub from an innovation platform into a comprehensive Deep Tech ecosystem—connecting research, entrepreneurship, industry, investment and public policy. In doing so, they strengthened Tamil Nadu's position as one of India's leading destinations for frontier technology and innovation.
— Admin Team
பதிவு செய்யாத பாகப்பிரிவினை - பயம் வேண்டாம்!
சட்டப்படி 3 தீர்வுகள்:
நம்ம ஊர்ல 100-ல 90 குடும்பத்துல இதே பிரச்சனை தான்.
அப்பா உயிரோட இருக்கும்போது 3 பிள்ளைங்களுக்கும் சொத்த பிரிச்சு கொடுத்திருப்பார்.
"நீ வடக்க பார்த்த வீடு,
நீ தெற்கு பார்த்த நிலம்,
நீ தோட்டம் வச்சுக்கோ"னு வாய் வார்த்தையா சொல்லிட்டு போயிருப்பார்.
ஆனா பத்திரம் பதிய மாட்டார். "நமக்குள்ள என்னடா பத்திரம்"னு விட்டுடுவார்.
வருஷம் ஓடும். அப்பா-அம்மா இறந்துடுவாங்க. கூட பிறந்த 2 பேரும் இறந்துடுவாங்க.
இப்போ நீங்க மட்டும் தான் உயிரோட இருக்கீங்க. சொத்த விக்க போனா, லோன் வாங்க போனா, பட்டா மாத்த போனா ஆபீஸர் கேட்பார்:
"பாகப்பிரிவினை பத்திரம் எங்க?"
அப்போ தான் தலை சுத்தும். "அய்யய்யோ பத்திரமே இல்லையே, இனி சொத்து போச்சா?"னு பயம் வரும்.
பயப்படாதீங்க. சொத்து போகாது. இந்திய சட்டம் உங்க பக்கம் தான் இருக்கு.
முதல்ல ஒரு அடிப்படை உண்மை தெரிஞ்சுக்கோங்க:
பதிவு செய்யாத பாகப்பிரிவினை செல்லாது இது Registration Act Section 17 சொல்லுது. ₹100 மேல மதிப்பு இருக்கிற அசையா சொத்த பிரிச்சா கண்டிப்பா பதியணும். பதியலனா அந்த பத்திரத்துக்கு சட்டப்படி மதிப்பு கிடையாது.
ஆனா இங்க தான் ஒரு Twist இருக்கு.
Limitation Act, 1963 Section 27 சொல்லுது:
"ஒரு சொத்த ஒருத்தர் 12 வருஷத்துக்கு மேல தொடர்ந்து, தடையில்லாம, வெளிப்படையா அனுபவிச்சா, அந்த சொத்து அவருக்கே சொந்தமாயிடும்." இதுக்கு பேரு Adverse Possession.
அதாவது, பத்திரம் இல்லனாலும் 12 வருஷம் நீங்க மட்டும் தனியா அனுபவிச்சா, EB Bill உங்க பேர்ல கட்டுனா, வீட்டு வரி உங்க பேர்ல கட்டுனா, Voter ID, Ration Card-ல இந்த Address இருந்தா, அந்த சொத்து சட்டப்படி உங்களுக்கு சொந்தம்.
சரி, இப்போ தீர்வுக்கு வருவோம். உங்களுக்கு 3 வழி இருக்கு.
வழி 1: விடுதலை பத்திரம் - Release Deed - ரொம்ப ஈஸி
இது தான் 90% கேஸ்ல Work ஆகும் வழி. இறந்து போன உங்க கூட பிறந்தவங்களுக்கு மனைவி, பிள்ளைங்க இருப்பாங்க இல்லையா?
அவங்க தான் இப்போ சட்டப்படி வாரிசு.
நீங்க அவங்க கிட்ட போய் பேசணும். "எங்க அப்பா அப்பவே பாகம் பிரிச்சு கொடுத்துட்டார். 20 வருஷமா நான் தான் அனுபவிக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா, என் பேருக்கு ஒரு விடுதலை பத்திரம் எழுதி கொடுங்க"னு கேட்கணும்.
அவங்க சம்மதிச்சா, ஒரு Document Writer கிட்ட போய்
"விடுதலை பத்திரம்"
எழுதணும்.
வாசகம் இப்படி இருக்கும்:
"எங்கள் தகப்பனார் பெயரில் உள்ள சொத்தில் எங்களுக்கு சேர வேண்டிய பாகத்தை, [உங்க பெயர்] அவர்களுக்கு முழுமனதுடன் விட்டுக்கொடுக்கிறோம். இனி அந்த சொத்தில் எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை."
இத எல்லா வாரிசும் கையெழுத்து போட்டு சார் பதிவாளர் ஆபீஸ்ல பதிஞ்சா போதும். Stamp Duty சொத்து மதிப்புல 1% மட்டும் தான். Registration Fee ₹4,000. ஒரு வாரத்துல உங்க பேருக்கு பத்திரம் வந்துடும். பட்டா மாத்திடலாம்.
இதுக்கு தேவையான Document:
1. தாய் பத்திரம்
2. இறந்தவர்களின் Death Certificate
3. வாரிசு சான்று
4. EC
5. உங்க ஆதார், பான் கார்டு
வழி 2: குடும்ப ஏற்பாடு பத்திரம் - Family Arrangement
ஒருவேளை வாரிசுகள் "விடுதலை பத்திரம் வேண்டாம், ஆனா சொத்து உங்களுக்கே இருக்கட்டும்"னு சொன்னா, இந்த வழிக்கு போகலாம்.
எல்லா வாரிசும் ஒண்ணா உக்காந்து பேசி ஒரு முடிவுக்கு வரணும். அப்புறம் ₹100 Stamp Paper வாங்கி
"குடும்ப ஏற்பாடு பத்திரம்"
எழுதணும். "குடும்பத்துல சண்டை வரக்கூடாதுனு நாங்க எல்லாரும் சேர்ந்து இந்த முடிவு எடுத்திருக்கோம்.
[சொத்து விவரம்] இனி [உங்க பெயர்] அவர்களுக்கே முழு உரிமையானது"னு எழுதி எல்லாரும் கையெழுத்து போடணும்.
இந்த பத்திரத்த பதிய வேண்டிய அவசியம் இல்ல. ஆனா பதிஞ்சா சட்டப்படி ரொம்ப Strong. இத வச்சே தாசில்தார் ஆபீஸ்ல போய் பட்டா பெயர் மாத்த கேட்கலாம்.
செலவு வெறும் ₹500 தான் ஆகும்.
வழி 3: நீதிமன்ற வழக்கு - Declaration Suit - கடைசி ஆயுதம்
வாரிசுகள் ஒத்து வரல. "எங்களுக்கும் பங்கு வேணும்"னு சண்டைக்கு வந்தா, வேற வழி இல்ல. Court தான் போகணும்.
நீங்க Civil Court-ல "Declaration Suit" போடணும். வக்கீல் மூலமா "நான் இந்த சொத்த 12 வருஷத்துக்கு மேல தனியா அனுபவிக்கிறேன். EB Bill, வீட்டு வரி எல்லாம் என் பேர்ல தான் இருக்கு. அதனால Limitation Act படி சொத்து எனக்கே சொந்தம்னு தீர்ப்பு கொடுங்க"னு கேட்கணும்.
Court-ல நீங்க 12 வருஷ அனுபவத்தை நிரூபிக்கணும். பழைய EB Bill, வீட்டு வரி Receipt, Voter ID, பக்கத்து வீட்டுக்காரங்க சாட்சி எல்லாம் கொடுக்கணும். Judge திருப்தி ஆனா உங்களுக்கு சாதகமா Decree கொடுப்பார். அந்த Decree-அ வச்சு பத்திர ஆபீஸ்ல பதிஞ்சு பட்டா மாத்தலாம்.
இதுக்கு 2 முதல் 5 வருஷம் ஆகும். செலவு ₹50,000 மேல ஆகும்.
அதனால இது கடைசி வழி தான்.
-------------------------------------------------
இப்போ நீங்க உடனே செய்ய வேண்டிய 3 விஷயம்:
1. EC போடுங்க:
https://t.co/0wiZZA0A49 Website-ல போய் இப்போ சொத்து யார் பேர்ல இருக்குனு பாருங்க. அப்பா பேர்ல இருந்தா தான் மேல சொன்ன வழி எல்லாம் Work ஆகும்.
2. வாரிசு சான்று எடுங்க:
இறந்து போன கூட பிறந்தவங்களுக்கு மனைவி, பிள்ளைங்க யாரு இருக்காங்கனு VAO ஆபீஸ்ல கேட்டு வாரிசு சான்று வாங்குங்க.
3. பேசி தீருங்க:
வாரிசுகள் கிட்ட நேர்ல போய் பேசுங்க. "சண்டை வேண்டாம், சுமூகமா முடிச்சுக்கலாம்"னு சொல்லுங்க. 90% பிரச்சனை பேச்சுவார்த்தையில முடிஞ்சிடும்.
கடைசியா ஒரு வார்த்தை:
சொத்து பிரச்சனை வந்தா உடனே Court-க்கு ஓடாதீங்க. முதல்ல குடும்பத்துக்குள்ள பேசி பாருங்க. விடுதலை பத்திரம் மூலமா சுமூகமா முடிக்க பாருங்க. நேரம், பணம், மனநிம்மதி மூணும் மிச்சமாகும்.
சட்டம் தெரிஞ்சா எல்லாமே ஈஸி தான். பயப்படாதீங்க.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல் #அறிவோம்சட்டம்
A friend recently forwarded me a WhatsApp message explaining how to access government services through the 'Namma Arasu' WhatsApp chatbot, asking, "Wasn't this launched during your tenure?"
I must admit, it was immensely satisfying.
When I launched Namma Arasu on 8 January 2026 at #UmagineTN2026, it was one among several digital governance initiatives undertaken by the DMK Government, under the leadership of Hon'ble Thiru @mkstalin, to make government services simpler, more accessible and truly citizen-centric. As Minister for Information Technology and Digital Services, I was pleased to launch this platform as another step towards bringing government services directly to people's fingertips.
In its first phase, Namma Arasu brought together 51 essential government services from 16 departments, enabling citizens to access certificates, make utility payments, avail local body services and use a range of other public services through a simple WhatsApp conversation. The platform was designed to expand progressively, with additional departments and services being added over time.
It is gratifying to see the platform continue to reach people through everyday conversations and word of mouth. Governments and office bearers may change, but the true success of a public initiative lies in its continued relevance and usefulness to the citizens it was created to serve.
That, to me, is the most meaningful measure of impact.
📲 Access Namma Arasu on WhatsApp: +91 78452 52525
திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN
``நாம என்ன மெஷினா..’’
``3 வருஷமா வாரத்துல 6 நாளும் வேலை செய்யுறதால உடம்பும் மனசும் சோர்ந்துடுச்சு.. குடும்பத்தோட டைம் ஸ்பெண்ட் பண்ண கூட தெம்பு இல்ல. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தூக்கத்துலயே ஓடிடுது. ஆனா இவ்ளோ உழைச்சும் சம்பளம் 23 ஆயிரம்தான். இந்தியாவுல தொழிலாளர் சட்டம் ஏன் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் சமநிலைய கொண்டு வர்ற மாதிரி இல்ல? யாரோ ஒருத்தரோட சாம்ராஜ்யத்தை வளர்க்க நாம ஏன் மெஷின் மாதிரி உழைக்கணும்? நாமளும் மனுசங்க தான.. மத்த நாடெல்லாம் 5 நாள் வேலைக்கு மாறும்போது, நமக்கு மட்டும் எப்போ மாறும்?’’
* Reddit தளத்தில் 25 வயது பெண் சிவில் இன்ஜினியர் புலம்பல்
#civilengineer #hyderabad #reddit #worklife #thanthitv
திமுக மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் இவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த வீடியோவை சொல்லப்படும் அனைத்தும் உண்மையாய் அல்லது பொய்யா என்று விளக்கம் நீங்கள் @svembu கூற வேண்டும்.