திரிஷாவின் பவர் என்ன என்பதை காட்ட நினைக்கிறது விஜய் ஆட்சி. அவ்வளவு தன்..
இதை விட கேவலமாக பேசிய பல தவெக ஒரு 100 ஐடி நான் தரவா ? நல்லா வாயில வருது என்று பேசிய விஜய் பேச்சு எப்படியானது? விஜய் மனைவி சங்கிதாவை இதே விஜய் கட்சியினர் அசிங்கமாக பேசி தான் திரிந்தனர்.. ஆக
இன்று இவ்வளவு தீவிரமான நடவடிக்கைக்கு காரணம் திரிஷா பெயர் இருப்பதால்.
எனவே இது திரிஷாவின் பவர் என்ன என்பதை காட்ட நினைக்கிறது ஆட்சி மேலிடம்..
உதயநிதி அவர்கள் பேச்சு ஏற்புடையது இல்லை ஆனால் விஜய் கடைசியாக பேசிய பேச்சும் யோக்கியமா பேச்சு இல்லை.
@Cricketpaglu45 Definitely his experience will help India team bowling lineup Indian team selectors should consider him for WC playing with Inexperienced team in South Africa will lead to loss WC.
@Cricketpaglu45 BCCI should give chance for him and for Shami also Bumrah siraj kumar Shami pandya this bowling lineup hits different for all opponent team.
@Teamindiacrick These pace attack will be very effective for India in South Africa conditions selection committee should consider them and Gambhir should give chance otherwise Inexperienced Indian bowling will affect team very heavily bring back them in ODIs.
@shan_bharath@sansbarrier நமது தமிழகத்தில் மட்டும் தான் NEET வேண்டாம் என்று போராட்டம் செய்கிறார்கள் ஆனால் மற்ற மாநிலங்களில் மாநிலத்தில் NEET ஆதரித்து மற்றும் NEET Paper leak நீதி கேட்டு தான் போராட்டம் செய்கிறார்கள் இது உங்களுக்கு தெரியலயா நமது தமிழகத்தில் அரசியல்வாதிகள் மாணவர்களை தவறாக வழி நடத்துகின்றனர்.
One Sanam Shetty finished an entire narrative set up for days by dmk eco system. This is why I keep saying dmk has got the entire calculation wrong. Your 2017 formula is not going to work anymore. Times have changed. People have evolved.
Over the past many years, I have taken a personal stand in support of the NEET examination, arguing that it brought uniformity in student selection across the country and gave students from underprivileged backgrounds a real shot at pursuing their dream of medical education. In the last 5 years, the NEET UG question paper has leaked thrice. Imagine the amount of pressure that it puts on students, who had to go through the examination process yet another time when the system that was supposed to bring in uniformity was failing. Yet there was no accountability, and I believe strongly that it was that moment that brought in a shift in the minds of the students to take to the streets to cry their hearts out.
Protest is a fundamental right in a Democracy. The pertinent question, however, is this: why did the BJP-led Central Government take so long to initiate a dialogue with the protestors? Why was meaningful engagement delayed until the protest had escalated to a flashpoint? What kept you waiting?
The students and the people who are leading them also have a responsibility here. It is natural that when a protest stays on for weeks, people with vested interests will take the stage to air views that are either completely irrelevant to the initial demands of the protests or would try to completely hijack it to serve their agenda. If you remain silent and let these people with vested interests further their agenda, then you are deviating from your core objectives. Please do not let it happen!
I urge the BJP-led Central Government to engage in meaningful dialogue, uphold transparency, and take swift, appropriate action to address the concerns at hand. The strength of any nation lies in the confidence its youth place in its institutions. If our students lose faith in the fairness and credibility of our education system, we are jeopardising the future of our nation.
@sansbarrier This Governor will not take any action against this Govt Because TN Govt is running behind back support of BJP only so he won't take any action bjp formula is to destroy both two Dravidian parties not it's happened so our cm also in recent times he didn't opposed bjp party.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று போட்டித் தேர்வை நடத்தியது. சுமார் 42,000 தேர்வாளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வுகள், 48 பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்றன. கடந்த 25.06.2026 அன்று வெளியிடப்பட்ட இந்தத் தேர்வுகளின் முடிவுகள், பல குழப்பங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
பாடப்பிரிவுகளுக்கு 150 மதிப்பெண்களுக்கான தேர்வும், விளக்கவுரைக்கு (Descriptive) 50 மதிப்பெண்களுக்கான தேர்வும் நடைமுறைப்படி நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்த் துறையில், 150 மதிப்பெண்களுக்கு 111 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த தேர்வாளருக்கு, விளக்கவுரை தேர்வில், பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதே போல, கணினி அறிவியல் துறையில் 107/150 மதிப்பெண்கள் பெற்றவருக்கு, விளக்கவுரை தேர்வில், 1/50 மட்டுமே கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில், இயற்பியல் பாடப்பிரிவில், 54/150 பெற்றவர், விளக்கவுரை தேர்வில், 49/50 பெற்றிருக்கிறார்.
இப்படி, மொத்தம் 43 பாடப்பிரிவுகளில், பாட மதிப்பெண் அதிகம் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்ணும், பாட மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிக அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மேலும், விளக்கவுரை மதிப்பெண்களில், 8.25, 24.75 என தசம, எண்ணிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், தேர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி, தேர்வு மதிப்பீட்டு முறையின் குழப்பத்தால், பல தேர்வாளர்களின் தரவரிசையில், பல நூறு இடங்கள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மதிப்பீட்டு முறையின் வெளிப்படைத் தன்மை குறித்தும், நம்பகத்தன்மை குறித்தும் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணிக்காக, தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக தங்கள் கடுமையான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். தேர்வு மதிப்பீட்டில் இத்தனை குழப்பங்கள் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த விளக்கவுரை (Descriptive) தேர்வு மதிப்பீடு முறையை ஆய்வுக்குள்ளாக்க வேண்டும் என்றும், இந்தத் தேர்வை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 2708 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெற்றுள்ளது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம், 4000 பணியிடங்களையும் ஆறு மாதங்களில் நிரப்ப உத்தரவிட்டுள்ளது. எனவே, மீதமுள்ள பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
This comes as a shocker, as three previously affiliated colleges of The Tamil Nadu Dr MGR Medical University have received deemed university status, which will lead to a reduction of 650 medical seats in this admission year. This will directly impact the admission of students selected under the 7.5% reservation for government school students, and the fee expected to be paid by students admitted to these colleges will be quadrupled, at the least.
The three colleges that have now been granted Deemed University status are St. Peter’s Medical College (250 seats) and Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences & Srinivasan Medical College (400 seats). As for who owns and controls these institutions, that is hardly a secret; it is already in the public domain.
The Tamil Nadu Dr MGR Medical University has clarified that it has not issued an NOC to either of these colleges to apply for deemed university status. However, it is also clarified that the refusal letter issued to St. Peter’s Medical College is currently being contested in court.
The UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022, in point number 5.02(i) and 5.02 (ii) clearly state that the University Grants Commission will presume that the State Government has no objection to the issuance of deemed university status if the affiliating university (in this case The Tamil Nadu Dr MGR Medical University) does not object within a window of 60 days and it will presume that the university had no objection for issuance of deemed university status.
The Tamil Nadu Dr MGR Medical University has clarified that they did not issue a NOC to Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences and Srinivasan Medical College.
Hence, a pertinent question arises. Did the previous DMK Govt deliberately ignore the application filed by Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences and Srinivasan Medical College and wait for the 60-day window to close?
I urge the TVK Govt to conduct a detailed probe into this matter and ensure that those responsible for this gross wilful negligence be punished. The future of aspiring medical students cannot be made collateral damage by administrative apathy or wilful political negligence. Their dreams of pursuing affordable medical education must not be stalled or sacrificed because those in power fail to act in time.
@MaridhasAnswers வருங்கால தலைமுறையினர் என்ன நிலைமைக்கு உள்ளாக போகிறார்கள் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை இது மிகவும் கேவலமான அரசியல் மாணவர்களை மூலை செலவு செய்கிறார்கள் இது சமுதாயத்தின் மிக பெரிய சீர்கெடு விளைவிக்க கூடும்.
அட ஆச்சரியக்குறிகளே…
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அண்ணா தோற்றுவித்த திமுக-வின் போர்வாளாகத் திகழ்ந்து, அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்தவர். அண்ணா மறைவிற்கு பிறகு திரு. கருணாநிதியை திமுக தலைவர் ஆக்கிய கிங்மேக்கர்.
தான் தேர்ந்தெடுத்த தலைமை தடம் புரண்டதைக் கண்டு, அண்ணாவின் கொள்கை காக்க உண்மையான திராவிட இயக்கம் @AIADMKOfficial-ஐ தோற்றுவித்தவர்.
மாண்புமிகு அம்மா அவர்கள் கழகத்தின் கொள்கை பரப்ப தமிழகமெங்கும் பயணித்தவர். சத்துணவு திட்டத்தை செயல்படுத்த அரும்பணியாற்றியவர். புரட்சித் தலைவர் மருத்துவமனையில் இருந்தபோது கழகத்தின் முகமாய் தமிழகத் தெருவெங்கும் சென்று கழகத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் புரட்சித் தலைவி அம்மா.
வரலாற்றை “படிடா பரமா, படிடா பரமா” என்று சொன்னால் கேட்டா தானே?
தமிழக வரலாற்றின் ஒப்பில்லா தலைவர்களின் திருப்பெயரோடு உங்கள் தலைவர் பெயரை எழுதுவதே ஒரு வரலாற்று அசிங்கம்.
உங்கள் தலைவருக்கு என்ன வரலாறு இருக்கிறது?
அப்பா தயவால் சினிமாவுக்கு வந்துவிட்டு, பதிவிடவே கூச்சப்படும் காட்சிகளில் தன் ஆரம்பகாலத்தில் கூச்சமின்றி நடித்த நடிகர் தானே?
8 படங்கள் அப்பாவின் இயக்கத்தில்,
பெரிய இயக்குனர்கள் படங்கள் அப்பாவின் சிபாரிசில்,
தெலுங்கு பட ரீமேக் ரைட்ஸ் அப்பாவின் செல்வாக்கில்,
உங்கள் அப்பா இல்லையென்றால் நீங்கள் யார் @actorvijay ?
அதே அப்பா மீதும், பெற்ற அம்மா மீதும் வழக்கு போட்டவர் தானே நீங்கள்?
இலங்கைத் தமிழருக்காக நிதி கேட்டு வந்த இன்றைய அமைச்சர் வன்னி அரசு அவர்களை கொச்சைப்படுத்தி அனுப்பியது தானே உங்கள் அரசியல் வரலாறு?
ஈழத் தமிழர்களுக்கான நடிகர் சங்கப் போராட்டத்தின் பொது எல்லா நடிகர்களும் அள்ளிக் கொடுக்க, 500 ரூபாயை கஞ்சத் தனமாக கிள்ளிக் கொடுத்தவர் தானே நீங்கள்?
நீங்களாக ஒரு மேடை போட்டு, “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட” என்று பாடியதால் தான் இலங்கைப் போர் நின்றது என்று உங்கள் ரசிகர்கள் வேண்டுமானால் உருட்டலாம். தமிழக மக்கள் இதையெல்லாம் கண்டு சிரித்ததே வரலாறு.
ஒரு Twitter ID விமர்சனம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், கமிஷனர் ஆபீசுக்கு சென்று கதறிய உங்கள் இயக்கத்தின் “மாபெரும் அரசியல் வரலாறு” எங்களுக்கு தெரியாதா என்ன?
“கோட் சூட் போட்டோஷூட்” நடத்தினால் அதை சொல்லத் தான் செய்வோம். உங்களைப் போல “Wow… How Cute?” என்று சிலாகிக்க நாங்கள் என்ன ஆச்சரியக்குறிகளா?
கரூரில் 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்த போது கூட அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஓட்டம் பிடித்த சக்தி, அன்றும் இன்றும் மக்களுடனே நிற்கும் மக்கள் சக்தியான நம்மைப் பார்த்து பேசுவதா?
கீழ்மாடியில் ராஜினாமா, மேல்மாடியில் இணைப்பு விழா என உங்கள் குதிரை பேரத்திற்காக கண்ணியமிகு தலைமைச் செயலகத்தை பனையூர் பங்களா போல மாற்றிய கேவலத்திற்கு சொந்தக்காரர்கள், உயிரை விட இயக்கம் மேலென நிரூபிக்கும் தொண்டர்கள் உள்ள ஒரு மாபெரும் இயக்கத்தைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?
அஇஅதிமுக தீர்ந்து போன சக்தியாம்.
விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்துவிட்டு தமிழகத்தை அலங்கோலப் படுத்தும் உங்களை தீர்த்துக் கட்டப் போகும் சக்தி இந்த அஇஅதிமுக தான் என்பதை நினைவிற்கொள்க.
@TVKHQITWingOffl
#அதிரடிஅதிமுக_ITWING
இதற்கு என்ன பதில் முதல்வர் அவர்களே
சட்டங்களை கடுமையாக்கி தமிழகத்தில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் முதல்வர் அவர்களே.
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா?
இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார்.
இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும்.
காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார்.
மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா?
“ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?
ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை!
தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்?
இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?
தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial