மாநகராட்சிகளில் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும்!
'தங்க மோதிரம் திட்டத்தை' மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
சட்டப் பேரவைக்கான மரபையும் முதலமைச்சருக்கான மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
-------------------------
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அதனை எதிர்த்து விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடின. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. தமது உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்து, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தவெக'வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல்
ரூ. ஒரு இலட்சம் வரையில் வசூலிக்கின்றனர். சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.
இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மேனாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
கடைசி மனிதனுக்கும் சனநாயகம் !
எளிய மக்களுக்கும் அதிகாரம் !!
குரலற்றவர்களின் குரலலாக
#பேராசான்@thirumaofficial
அவர்களின் போர் படைத் தளபதி மாண்புமிகு அமைச்சர் @VanniTamizhVCK ..🥺🙏🏽
#vck
யாகாவா ராயினும் நாகாக்க...
திமுக தோழர்களின் எல்லைமீறிய விமர்சனங்களுக்கு கடும் கண்டனங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வென்றதால் தன்னிச்சையாக ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி 'குடியரசுத் தலைவர் ஆட்சி' என்கிற பெயரில் தமிழ்நாட்டில் மறைமுக 'பாஜக ஆட்சி' வந்துவிடக் கூடாதென்ற தொலைநோக்குப் பார்வையில் இடதுசாரித் தலைவர்களுடன் கலந்துப்பேசி தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பது என முடிவெடுத்தார் எழுச்சித் தமிழர் தலைவர் அவர்கள்.
திமுகவுடன் கூட்டணி வைத்து இரண்டு எம்எல்ஏ-க்களை பெற்றோம் என மரியாதைக்காக திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களை சந்தித்து தகவலை தெரிவித்துவிட்டுத்தான் தவெக-விடம் ஆதரவு கடிதத்தை கொடுத்தோம். அதற்காக, திமுகவிடம் அனுமதி வாங்கிவிட்டு ஆதரவளித்தோம் எனச் சொல்வதையும் ஏற்க முடியாது. பின்னர் சிறுத்தைகளின் விருப்பத்தையும் தவெகவின் கோரிக்கையையும் ஏற்று தவெக அமைச்சரவையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றது. தவெக அமைச்சரவையில் பங்கேற்ற நாள்முதல் திமுகவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சிமீது தொடர்ச்சியான வன்ம பரப்புரை திட்டமிட்டே பரப்புகிறார்கள். அதற்கு வன்மையான கண்டனங்களையும் எச்சரிக்கையையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்கள், தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்ற நாளன்றே, கொச்சையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு அண்ணன் ஸ்டாலினின் கண்டனத்தை ஏற்று சிறுத்தைகள் மிகுந்த கண்ணியத்துடன் கடந்து சென்றோம். தற்போது மீண்டும் த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளை அவமதிக்கும் விதமாக பேசியிருக்கிறார். இந்தி எதிர்ப்பு தொடர்பாக ஜூன் 23-ம் தேதி சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் "திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி கொடுத்து ஆட்சி அமைத்துள்ளீர்கள். அமைச்சரவையில் இடம் கொடுத்தவர்களுக்கும் வெட்கமில்லை, அமைச்சரானவர்களுக்கும் வெட்கமில்லை!" எனக் கேட்கிறார். இத்தகைய காட்டமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு பணிவன்புடன் சில கேள்விகளை முன்வைக்க விழைகிறேன்... 40 நாட்களுக்கு முன்னால் ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஆசியுடன் பரம எதிரி அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திமுக முயன்றதே... அப்போது உங்களுக்கு வெட்கமில்லையா? விஜய் முதல்வராகவிடாமல் தடுக்க ஒவ்வொரு கட்சியின் கதவுகளையும் நள்ளிரவில் தட்டினாரா உதயநிதி..
மக்கள் தீர்ப்பை திருட முயன்றபோது உங்களுக்கு வெட்கமில்லையா? வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்தது திமுக அப்போது வெட்கமில்லயா? ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை விசிக தயவில் பெற்றுக் கொண்டு அதிகாரத்தில் பங்கு தர மறுத்தீர்களே.. அப்போது வெட்கமாகயில்லையா? 2026 தேர்தல் சமயத்தில் விசிக வேட்பாளர்களிடம் உங்கள் முன்னாள் அமைச்சர்கள் சாதிய துவேசத்தை வெளிப்படுத்தி, உள்ளடி வேலை செய்து தோற்கடித்தார்களே... அந்த செய்திக் கேட்டு நீங்கள் வெட்கப்படவில்லையா?
விழிம்பு நிலை மக்களுக்காகவே வாழ்வை அர்பணித்து, 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' முழக்கத்தை அரசியலை களத்தில் ஏந்திய எங்கள் தலைவர், சமூகநீதி வழி ஆட்சி நடத்த விரும்பும் விஜய்க்கு ஆதரவு அழித்து அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார். இதைக்கண்டு வயிற்றெச்சல் அடைகிறீர்கள்... இதற்குத்தான் உள்ளபடியே நீங்கள் வெட்கப்பட வேண்டும். வாய்துடுக்கான பேச்சுகளும் கூட்டணிக் கட்சிகளை பெரியண்ணன் மனப்பான்மையில் அணுகியதும்தான் திமுகவை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்திருக்கிறது என்பதையும் உங்களுக்கு நினைவுகூற விரும்புகிறேன். தோல்வியின் மனவேதனையில் பிதற்றிக் கொண்டிருக்காமல் இனியாவது ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி அரசியலை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
வழக்கறிஞர்.எழில் கரோலின்
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
23.06.2026
#vck #vckitwing #ezhilcaroline #tholthirumavalavan #tnpolitics
'முதலமைச்சருக்கு ஈழத்தமிழர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க அண்ணா!'
திருவண்ணாமலை மாவட்டம் – நாயுடுமங்கலம் ஊராட்சியில் புதிதாக ஈழத்தமிழர் மறுவாழ்வு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள நிலையில், அருகில் அமைந்துள்ள பழைய முகாம்களில் வாழும் மக்களின் கோரிக்கையினை ஏற்று புதிய குடியிருப்புகளை நேற்று (21.06.26) பார்வையிட்டோம்.
கலசப்பாக்கம் வட்டம் – தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள முகாமில் வசிக்கும் 160 குடும்பங்கள் மற்றும் துரிஞ்சாபுரம் வட்டம் – காரியந்தல் முகாமில் வசிக்கும் 92 குடும்பங்கள் என மொத்தம் 252 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய வளாகத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவுநீர் வெளியேற்றும் வசதி, குறைவான கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி, அங்கன்வாடி உள்ளிட்ட தேவைகள் இன்னும் நிறைவுபெறாமல் உள்ளதாக மக்கள் முறையிட்டனர். அனைத்து கோரிக்கைகளும் உரிய துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்று மக்களிடம் உறுதி அளித்தேன்.
கடும் மழை பெய்து கொண்டிருந்த போதும், திரளான மக்கள் எம்மை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அங்கிருந்து விடைபெறும் போது, ‘முதலமைச்சருக்கு ஈழத்தமிழர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க அண்ணா’ என்று பெண்கள் கூட்டாக தெரிவித்தனர். இன்று சட்டப்பேரவையில் உரையாற்றும்போது, ஈழத்தமிழர்கள் சொல்லி அனுப்பிய வாழ்த்தினை அவையில் பகிர்ந்துக் கொண்டேன்.
மறுவாழ்வு முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்கள் மற்றும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் குறித்து விடுதலைச்சிறுத்தைகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுமாறு கோருகிறோம்.
@CMOTamilnadu
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் என்னுமிடத்தில் இயங்கி வந்த மீன் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர், 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.
இந்த விபத்தில் பலியாகியுள்ள வடஇந்திய தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
சிகிச்சை பெற்று வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உயர் சிகிச்சையும் இழப்பீடும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தனியார் மற்றும் அரசு தொழிற்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து உரிய ஆய்வும் தொடர் கண்காணிப்பும் மேற்கொண்டால் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க முடியும்.
தொழிலாளர்கள் நலன் குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது இனியவாழ்த்துகள்.
#HBDCMJosephVijay
குவாடரும் கோழி பிரியாணியும் வாங்கிட்டு கூலிக்கு மாரடிக்குற கும்பலுக்கு சொல்லுகிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை
எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது🤫
என்றென்றும் #பேராசான்@thirumaofficial
அவர்களின் வழியில்💙❤
#விசிக 💥
அண்மையில் லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவின் 92 இசைக்கலைஞர்களுடன் "சிம்பொனி நம்பர் 1 - நியூ பிகினிங்ஸ்" என்ற தனது முதல் ஆல்பத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ள இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் அவர்கள் இன்று சந்தித்து வருகின்ற ஜூன் 21-ம் நாள் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ள சிம்பொனி இசைப் படைப்பின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தார்.
பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனம் (IRT) இணைந்து 'தொல்குடி தொடுவானம்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 16 பழங்குடியின இளைஞர்களுக்கு "கனரக மோட்டார் வாகன" (Heavy Motor Vehicle. HMV) ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமத்துடன் பொது வில்லை (PSV Badge) வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியின் வெற்றியாக கலந்துகொண்ட 16 பயிற்சியாளர்களும் பயிற்சி முடித்தவுடனேயே 100 விழுக்காடு (100%) நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) மின்சாரப் பேருந்து (e-bus) பிரிவிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டப் போக்குவரத்துப் பணிமனைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கான சான்றிதழை, நேற்று (17.06.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினோம். இந்நிகழ்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் திரு. கே. சுப்பையன், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.ச. அண்ணாதுரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் இளம்தலைவர் @RahulGandhi அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளைப் பாதுகாத்திடும் போர்வாளாக அரசியலரங்கில் களமாடும்
திரு. ராகுல் காந்தி அவர்களின் அளப்பரிய முயற்சி வெற்றிபெற விசிக சார்பில் மனமுவந்து வாழ்த்துகிறோம் .