புத்தகங்கள் வந்தடைந்தது!
தமிழ்தேசியம் சார்ந்த புத்தகங்கள் தேவைப்படுவோர் @thenpulam @Writer_ThiruSrM என்ற பக்கங்களை தொடர்பு கொள்ளுங்கள்! ❤️
பகிரி எண் : 89407 67075
எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி உதவி செய்யக்கூடிய பிள்ளைகள் நாம் தமிழர் கட்சிப் பிள்ளைகள்.
– மருத்துவர் திருமால்செல்வன்
பொதுச் செயலாளர், நாம் தமிழர் கட்சி
பள்ளி மாணவர்களிடத்தில் நஞ்சை விதைப்பதை போல செயல்படும் இந்த செயல்பாட்டை கண்டிக்காமல் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?
நாளை இதே போன்று ஒரு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் என்றோ , திமுக என்றோ , நாம்தமிழர் என்றோ முழக்கமிட்டால் தமிழக அரசு ஏற்குமா ?
கனிமவளத்துறை அமைச்சருக்கு பள்ளிகூடத்தில் என்ன வேலை ?
இனி மாணவர்களை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டோம் என பூம் பூம் மாடு போல தலையாட்டி பேசினீர்களே அது என்னாச்சி ராஜ்மோகன் ? @imrajmohan
வெட்கக்கேடு 🤮
என்ன இவ்வளவு வெளிப்படையாக இறங்கிட்டானுங்க.
கஸ்தூரி ராஜாவின் பெற்றோர் பெயர்(அவரே சொன்னது)
இராமசாமி நாயுடு - ரெங்கம்மா.
அடுத்தது விஷால் ரெட்டி,ராகவா லாரன்ஸ்,சிவகார்த்திகேயன்,
மகேந்திரன்லு என மொத்த #தெலுங்கு கும்பலும் படையெடுத்து வருவானுங்க போல.
தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!
தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டதாகும். இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுளரென திருடிச்சேர்த்துக் கொண்டனர். தமிழர்த் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர். அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.
இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகப்பெருமான். தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான். அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
(1/2)
வணிகத்திற்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழ்ப்பிள்ளைகள் நாங்கள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
ஆகவே, முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்கத்தோடு இப்படம் உருப்பெற்று வெளிவந்தால் தமிழ்த்திரையரங்க உரிமையாளர்கள் இதனை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்ற ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தைத் திரையிடவிடாது மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளிவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்ப்பண்பாட்டைத் திரித்து, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகும் இப்படம் வெளிவந்தால் கடும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பையோ, தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2)
திராவிடத்திற்கு 1000 மடங்கு
ஆபத்தானவர் சீமான் தான்
~திராவிடர்கள்
அப்படியே கொஞ்சம் விசிலடிச்சான் குஞ்சுகள் காதில் விழும் வரை கூவவும் 😀😀
#Seeman | #TVKVijay | #dmk
உடைகளில்கூட வர்க்க வேறுபாட்டைக் கண்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சீருடையை அறிமுகம் செய்தார் பெருந்தலைவர் காமராசர்.
அந்த காமராசரைக் கொள்கைத் தலைவர் என்று கூறிக்கொண்டே, அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்போம் எனக் கூசாது சொல்கிறது கேடுகெட்ட தவெக அரசு.
அமைச்சர் @imrajmohan அவர்களே! இம்முடிவைக் கைவிடாவிட்டால் மிகப்பெரிய விலையை தவெக அரசு கொடுக்க நேரிடும். எச்சரிக்கை!
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 450 கிலோ போதைப்பொருளை காவல்துறை பிடித்திருக்கிறது இதற்கு பின்னணியாக செயல்பட்டது சாத்தான்குளம் தவெக ஒன்றிய செயலாளர் குணசேகரன் தான் என்று திருவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனிடம் வாதம் செய்யும் தவெக நிர்வாகியின் பரபரப்பான ஆடியோ !
காவல்துறை முழுமையாக விசாரித்தால் பெரிய போதைக்கும்பல் சிக்கும் @CMOTamilnadu
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் பயன்படுத்தும் வண்டல் மண்ணை இலவசமாக அள்ளலாம் என அரசு அறிவித்தும் ஒரு லோடுக்கு ஒரு லட்சம் கேட்ட தவெக ஒன்றிய செயலாளரை வழிமறித்த விவசாயிகள் !
தமிழகமெங்கும் வசூல் வேட்டையை துவங்கிய தவெக பொறுப்பாளர்கள் .
@CMOTamilnadu
கியூபப் புரட்சியாளர் சேகுவேரா குறித்து அண்மையில் கூட்டமொன்றில் பேசிய @SuVe4Madurai அவர்கள், "சேகுவேரா அவர்கள் வெற்றியை ஒருபோதும் இலக்காக வைக்கவில்லை; நீதியைத்தான் தனது இலக்காக வைத்தார்" எனப் பேசியிருக்கிறார்.
மறுக்க முடியாத வரலாற்றுப்பேருண்மை!
அதேசமயம், தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிச இயக்கங்கள் இப்போது எந்தப் பக்கம் நிற்கின்றன? எங்கு நீதியின் பக்கம் நிற்கிறீர்கள்? வெற்றிக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என வாக்குக்குக் காசு கொடுக்கிற அளவுக்குத் தரம்தாழ்ந்து போய்விட்டீர்களே தோழர்களே?