A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
From a senior politician :
One scenario he discussed .
High chances of no party getting a majority on May 4th .
If that happens - vijay will not align with any major party and will call for a re-poll .
Which will happen in 6 months time .
Until then - presidents rule .
என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.
எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?. நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர்.
மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?. திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது.
இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர்.
நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும்,
அளக்கமுடியாத ஆழ்கடல் - விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று.
நேர்மையின் நெருப்புக்கோளம் - மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் - ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று.
இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்?.
பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்?.
மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான்.
எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை
‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை.
இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது. அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி.
பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்.
ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் – லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
வாகை சூடுவோம்.
வரலாறு படைப்போம்.
வெற்றி நிச்சயம்..
🚨 எல்லாரும் இந்த வீடியோவ..உங்க Whatsapp Status & Family Groups ல அனுப்புங்க மக்களே ‼️
வெற்றித் தமிழ்நாட்டிற்கான நமது தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தரவாதங்கள்! ✅
வாக்களிக்க பூத் ஸ்லிப் வரவில்லையா...? கவலை வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை பார்த்து உங்களுடைய பூத் ஸ்லிப் டௌன்லோட் செய்துகொள்ளுங்கள்
https://t.co/EmTkjRT3Kt
Captcha Code பார்த்து சரியாக பதிவிட்டு தேடவும்
உங்களுடைய விபரங்கள் கிடைக்கும்.
#VoteForTVK#VoteForWhistle
The #JanaNayagan leak makes me angry.
I’ve experienced personally the pain and sense of loss when something like this happens, early in my career. You feel like a target, you feel a loss of hope, it’s not just about me, there are co-actors, directors, producers, and so many who have all their dreams on the line.
This current issue needs to get sorted Asap and the people behind it identified, and if it doesn’t it reflects a systemic failure. It keeps reminding us how insensitive people can be, and the extent some will go to cause harm without a second thought.
I send my thoughts and my unconditional support to the entire team of the film.
Piracy has always been a gut wrenching experience for the entire industry, which shatters the dreams of thousands of people who’ve put in their everything for this film 💔
Let’s stand with the entire team and support them, and respect their heart. Let’s always consume art the way it was supposed to be, in the big screens ❤️
#JanaNayagan
Leaking #Jananayagan before its official release is not just piracy, it is disrespect to the hard work of producers, hundreds of artists and technicians who gave their blood and sweat for this film.
Cinema should be experienced the way it is meant to be on the big screen. The person (s) behind this leak should be severely punished.. Nothing can stop our #Thalapathy as I said earlier jananayagan will be the greatest farewell of all time..
3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடும் ஜனநாயகன் படத்தை ஆன் லைனில் யாரோ திருடி வெளியிட்டுள்ளார்கள்.
அப்படத்தின் தயாரிப்பாளர் பார்வையில், இயக்குநரின் பார்வையில், இதில் பங்கேற்றிருப்பதால் துளிர்க்கக் காத்திருக்கும் பலரின் கனவுகளின் பார்வையில் இதைப் பார்க்க விரும்புகிறேன்.
சமீபத்தில் எனது நிறுவனத்தின் மூலமாக வெளியான சல்லியர்கள் படம் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட வலி, இழப்பு இவற்றை சொல்ல முடியாது. அதன்பிறகு அதை அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியிட்டு சமன் செய்தோம். ஆனால் ஜனநாயகன் மிகப் பெரிய முதலீட்டுப் படம். அது திரையரங்குகளுக்கு குறித்த நேரத்தில் வராதிருந்ததே மிகப்பெரிய இழப்பை தயாரிப்பாளருக்கு ஏற்படுத்தியிருக்கும். அதையும் தாண்டி இப்போது திருட்டுத்தனமாக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்றால் ஒட்டுமொத்த இழப்பையும் தயாரிப்பாளர் தாங்க வேண்டும் என்பது வேதனை.
இழப்பு மேல் இழப்பு. இயக்குநரின் உழைப்பு பலரின் கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கிறது. இது திரையுலகில் நடக்கக்கூடாத குற்றச் செயல். யாரோ ஒருவரின் உழைப்பு காசு பணத்தில் திருடுபவர்கள் சப்புக்கொட்டிக் கொள்வதை விடவே கூடாது.
யார் இந்த வேலையை செய்தது எனக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திரையுலகிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டிய திருட்டுக் களைகள். உழைப்பைச் சுரண்டிக் கொழுப்பவர்கள் இனி அச் செயலை செய்யக்கூடாது என்ற எண்ணம் வருமளவிற்கு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
திரையுலகினர் ஒற்றுமையுடன் இணைந்து இந்த இழிசெயலை செய்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
-சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/ இயக்குநர். #jananayagan @tfapatn@TFPCTN