சபரிமலையில் 18ஆம் படி ஏறி தரிசனம் செய்ய வேண்டும் என்ற என்னுடைய 50 ஆண்டு கால கனவு நிறைவேறியது என்று ஆனந்த கண்ணீர் விட்ட சௌமியா அன்புமணி...
பாக்கவே நெகிழ்ச்சியா இருக்கு..
என்ன ஒரு பக்தி🥺🙏
இன்று வெளியாகியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும், எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் த���ரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் கிடைக்கப் பெறா�� மாணவ, மாணவியர் சோர்ந்து போகாமல், மீண்டும் நன்றாகப் படித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சிறப்பான எதிர்காலம் அமையவும், பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உருவாகவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் அன்பு அண்ணன் திரு @HRajaBJP அவர்களை, இன்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
அண்ணன் திரு @HRajaBJP அவர்கள் உடல்நலத்தில், நல்ல முன்னேற்றம் இருப்பதில் மகிழ்ச்சி. அவர் விரைவாக முழு நலம்பெற்று, அரசியல் களத்தில் தொடர்ந்து நீண்ட காலம் இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்பதே, அனைவரின் வேண்டுதலும் விருப்பமும்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தேசப் பணியில், மக்களுக்காகவும், ஹிந்து மதத்துக்காகவும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அண்ணன் திரு @HRajaBJP அவர்களுக்கு, இந்த சிறு ஓய்வு, மீண்டும் புத்துணர்ச்சியுடன் பல்லாண்டு பணியாற்ற நிச்சயம் உத்வேகம் தரும்.
@SRSekharBJP@imkarjunsampath
முதலமைச்சர் பாதுகாப்புக்கு வந்த பெண் காவலரை கழிவறையில் வைத்து வீடியோ எடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது - பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மற்ற பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும் ?
ராமநாதப��ரம் மாவட்டம் பரமக்குடியில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் கழிவறை பயன்படுத்திய போது, செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்வில் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் காவலருக்கு நடைபெற்றிருக்கும் இந்த அவலச் சம்பவம், தமிழகத்தில் பெண்களின் பா��ுகாப்பு எந்தளவிற்கு கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய காவல் அதிகாரி ஒருவரே சக பெண் காவலரை போகப் பொருளாக பார்த்திருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் மிகப்பெரிய இழுக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, பெண் காவலரை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்ட காவல் சிறப்பு ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்கு வரும் பெண் காவலர்களோடு, அனைத்து பெண் காவலர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu