பருத்திவீரன் படத்தை கலைஞரிடம் போட்டு காண்பித்த போது எந்த ஊரில் நீ படம் எடுத்த அங்க என்ன இன்னும் கரண்ட் இல்லையா ஒரு கரண்ட் கம்பியை கூட நான் பார்க்கவே இல்லை என்று கேட்டார்,இல்லை நான் அதெல்லாம் மறைச்சு எடுத்தேன் என்று சொன்னேன்
- இயக்குனர் அமீர்
~ படத்தை சாதாரணமாக பார்க்கும்போது கலைஞரின் பார்வை மட்டும் எங்கு சென்றிருக்கிறது என்பதை நீங்கள் பாருங்கள் ஏனென்றால் 1974 லேயே ஒரு மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொடுத்தது தமிழ்நாடு மட்டும்தான் அதை செய்து காட்டியது கலைஞர் மட்டும்தான் இன்றளவும் பீகார் ஒரிசா போன்ற மாநிலங்களில் மாநிலம் முழுவதும் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு போக முடியவில்லை.
சும்மா ஒன்னும் சொல்லல்ல #FatherOfModernTamilnadu ன்னு 💥
#Kalaignar103
இன்னைக்கு திருச்சி கிழக்குல விஜய் பேசுன Body Language, Posture, Mannerismஅ கவனிச்சிங்களா
அப்டியே கட் பண்ணி விஜயோட சட்டசபை, தலைமை செயலகம், அதிகாரிங்க கூட மீட்டிங்க்ல இருக்க Body Languageஅ கவனிங்க.
எந்தளவுக்கு ஒரு Scripted அரசியல் ஸ்டேஜ் பண்ணி நடிச்சிட்டு இருக்கான்னு தெரியும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசைப் பார்த்து மன்னராட்சி எனத் திமிர்ப்பேச்சு பேசினார் இன்றைய முதலமைச்சர்.
இன்றோ, மங்குனிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது.
Volvo பேருந்து என்றால் இதுதான். முன்பின் செய்திகளைக் கூட பார்க்காதவர்கள் துறைக்கு அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளனர். பரிதாபம்...
#TVKFails
Tamil Nadu is not waiting for the future, we are building it.
From single-window approvals and faster clearances to AI cities, green hydrogen, advanced manufacturing, and the space economy, Tamil Nadu is creating an ecosystem where innovation meets execution.
Under the visionary leadership of Hon’ble Chief Minister C. Joseph Vijay Sir, we are committed to making Tamil Nadu the investment and innovation powerhouse of India.
The future is here. Invest in Tamil Nadu.
#TamilNadu #Industries #CMJosephVijay
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா திரு. ஜோசப் விஜய் அவர்களே?
நமது மத்திய அரசு சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 7 பேருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டு 24 மணி நேரங்கள் கடந்துவிட்டன. விருது வாங்கியவர்கள் எல்லாம் செல்வச் செழிப்பில் திளைத்து, பண மெத்தையில் புரண்டவர்கள் இல்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்து தங்களது அசாத்திய திறமையினால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்த தமிழர்கள்.
அவர்களின் இந்த வெற்றி கண்டு உங்களுக்கு அகம் மகிழவில்லையா? நமது நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அவர்களைப் போன்ற சாமானியர்களுக்கு கிடைத்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா? முதல்வராக இல்லாவிடிலும் சாதாரண தமிழனாக நீங்கள் கொண்டாடி களிக்க வேண்டிய நிகழ்வல்லவா இது? பின்பு எதற்கு இந்த கனத்த மௌனம்?
நமது சோழ மன்னர்களின் வரலாற்று அடையாளமான “ஆனைமங்கல செப்பேடுகள்” நமது தாயகம் திரும்பியதற்கும் நீங்கள் வாயைத் திறக்கவில்லை. நமது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் கிடைத்ததற்கும் நீங்கள் வாழ்த்துக் கூறவில்லை. உங்களைத் தோள் வலிக்க தாங்கிப்பிடித்து உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நீங்கள் காட்டும் நன்றிக்கடன் இதுதானா திரு. ஜோசப் விஜய்? இப்படியொரு ஆணவ முதல்வரை தமிழக வரலாறு இதுவரைக் கண்டதில்லை.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
@RKRadhakrishn@RKRadhakrishn Sir - Is this not against People's #Mandate? You were so tensed when there was a talk about DMK and ADMK forming govt? Now, VCK, Congress, IUML are against people's mandate. Isn't it?
கடந்த 10 நாளா தொடர்ந்து கொலை, பாலியல் கொடுமைகள் சட்ட ஒழுங்கு சீற்கேடு செய்திகள் வர வர, பல தவெக ஐடிக்கள் ஆக்டிவ்வா இல்ல கவனிச்சீங்களா? எல்லோரும் சொல்லிவெச்ச மாதிரி சைலண்ட் மோட்ல இருக்காங்க.
முதலமைச்சர் ஆன பிறகும் நார்மலா பேச மாட்டாரா?
ஏன் கிளைமாக்ஸ் ல வில்லனை பார்த்து நாலு பக்க வசனத்தை ஹை டெசிபல் சவுண்டில் தெலுங்கு ஹீரோ பாலையா பேசுவது போல் பேசுகிறார்..??
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
28-38 வயது தமிழ்நாட்டுப்பெண்கள் பொதுவா தைரியமானவங்களா இருப்பாங்க. போல்டா பேசுவாங்க. Confidentஆ இருப்பாங்க. குடும்பத்துக்கு ஒண்ணுன்னா சிங்கமா புலியா கரடியா மாறி சண்ட போட்டு அவங்களுக்கு வேணும்கிறத வாங்கிப்பாங்க. ஆனா, பொது அறிவுன்னு வரும்போதோ உலக விஷயங்கள தெரிஞ்சிக்குறதுலயோ பின் தங்கியே இருக்காங்க, ஒரு சிலரத் தவிர. வேலைக்குப்போகும் பெண்கள் மத்தியிலயும் இதே நிலவரம் தான். அவங்க பள்ளி ஆசிரியையா இருந்தாலும்கூட அவங்களுக்குள்ள குடும்பப்பிரச்சன வீட்டு விவகாரம்னுதான் பேசிப்பாங்க. பராசக்தி படத்துல வர்ற பண்டரி பாய் கேரக்டர்லாம் சாதாரணமான வாழ்க்கையில பார்க்குறது அரிது. அதுல, 90’s kids, daddy’s little princessஉன்னு வளர்ந்த பெண்கள் மத்தியில கல்யாணத்துக்கு எந்த செலிப்ரிட்டி மேக் அப் பர்சன புக் பண்ணலாம், தன்ன கல்யாணம் பண்ணிக்க போற ஆள எப்படி தனக்கு ஏத்த மாதிரி மாத்தலாம், ரெண்டு பேரும் சேர்ந்து என்ன மாதிரி ரீல்ஸ் போடலாம், இந்த மாதிரியான விஷயங்களைத்தான் முன்னிலை படுத்தறாங்க. இதுல பலருக்கு அவங்க அமேசான்லயும் மீஷோலயும் ஆர்டர் போடுறதுக்கு ஒரு வருமானம் பத்தாம கடன் வாங்கி கடன் வாங்கி பெரும் கடன் தொல்லைல வேற இருப்பாங்க. இந்த மாதிரியான சூழல்ல திராவிடம், அண்ணா, பெரியார், அம்பேத்கர், தொகுதி மறுவரையறை, பண மதிப்பிழப்பு இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது. மாசா மாசம் 1000 ரூ வருதா… நல்லது. பொங்கலுக்கு 3000 வருதா… புருஷன் 20000 கொண்டுவராரா… இதெல்லாம் வெச்சு தினம் தினம் நாட்கள தள்ளிட்டு இருக்காங்க. ஹெல்மெட் போட்டுக்காம ஸ்கூல்ல
பசங்கள ஸ்கூட்டில டிராப் பண்றதும், ரெண்டு காலயும் ரோட்டுல தேய்ச்சுக்கிட்டே வண்டி ஓட்டுறதும், left indicatorஐ போட்டுட்டு rightல திரும்புறதும்னு, இவங்கள்ல பல பேர் லைசன்ஸே காசு குடுத்துத்தான் வாங்கியிருப்பாங்க.
இவங்க விஜய்க்கு வாக்கு அளிக்கலைன்னாதான் ஆச்சர்யம். தான் வளர்ந்து வந்த பருவத்துல பார்த்து ரசித்த, பர்ஸனல் கிரஷ்ஷா இருந்த, ஆதர்ஸ நடிகர். இன்னிக்கு எதிரிகளால சூழப்பட்டிருக்காரு. பாவமா இருக்கு பார்க்க. வலியோட இருக்காரு. எப்படியாவது அவர ஜெயிக்க வைக்கணும். அவரு வந்தா எல்லா பிரச்சனையும் தீர்த்துடுவாரு. அப்படின்னு யாரு சொன்னா? அவரே சொன்னாரே. அதுக்கும் மேல பார்க்க நல்லா இருக்காரு. அவங்க வாழ்க்கையில இல்லாத alpha male personalityஆ தெரியுறாரு. இதை லாஜிக்னு சொல்றத விட மேஜிக்னு சொல்றதே சரியா இருக்கும்.
இந்த பெண்களோட கணவர்கள் என்ன ஆனாங்கன்னு பார்த்தா, அவங்களும் ஏதாவது ஒரு நடிகரோட ரசிக மனப்பான்மைல இருப்பாங்க. இல்ல, இவங்களுக்கு கம்ப்ளீட் சரண்டர் மோட்ல இருப்பாங்க. இல்ல, என்னத்தையோ பண்ணித்தொலை, என்ன போட்டு டார்ச்சர் பண்ணாம இருந்தா சரின்னு இருப்பாங்க.
இந்தப்பெண்கள் கொத்து கொத்தா போயி தவெகவுக்கு வாக்களிச்சுட்டு வந்து, வீடியோக்கள்ல யாராவது யாருக்கு வாக்களிச்சீங்கன்னு கேட்டா, தனக்கே உரித்தான ஒருவனைப்பற்றி பேசுவது போல ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்போட விஜய்க்கு தான் போட்டேன்னு சொல்லுறாங்க. அவங்க தொகுதி வேட்பாளர் பெயர்கூட பலருக்குத்தெரியாது.
இதை நான் ஏன் சொல்றேன்னா… யாரையும் இழிவு படுத்த இல்ல.. இந்தப்பெண்களோட பெரிய அன்ப நான் பலமுறை உணர்ந்து அனுபவித்திருக்கேன்.. இந்தப்பெண்களில் பலர் எனக்குத்தோழிகளா இருக்காங்க… ஆனா இதை நான் ஏன் சொல்றேன்னா… தமிழ்நாடு அறிவார்ந்த சமூகம்னுலாம் 70-80களோட முடிஞ்சு போச்சு. பொது வெளியில இன்னிக்கு பெண்கள் அதிகமா வர்றாங்க ஆனா அவங்க என்னவா வர்றாங்க (How they show up)உங்குறது மாறியிருக்கு.
To be continued.