அவள்
கைகளில் வர்ணமிடும்
தூரிகைகள்
நினைக்கின்றது!!!
ஏழு வர்ண
வானவில்லை
கைகளில்
கொண்டவளுக்கு
நான் என்ன
புதிய வர்ணம்
தீட்ட போகிறேன் என்று!!❤️
அந்தி சாயும் போது
ஜொலிக்கும் சிவந்த சூரியன்
போல் உள்ள உன் கைகளுக்கு
நான் என்ன அதைவிடவா
சிவக்க வைக்க போகிறேன்
என்று அழுகிறது அந்த மருதாணி!!🌹
சாலையோரம் தள்ளு வண்டியில் வியாபாரம் செய்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்கிறார் என
ஒரு வயதான ஏழை பாட்டியின் தள்ளு வண்டியை அப்படியே தூக்கி குப்பை வண்டியில் போட்டு கொண்டு போகும்போது அந்த பாட்டி பின்னாடியே அழுது கெஞ்சிக்கொண்டு போகும் வீடியோவை சமீபத்தில் பார்த்தேன்
ஒரு கிரவுண்ட் நிலத்தில் வீடு கட்டி இருந்தாலும் சாலையை இப்படி ஆக்கிரமித்து படிகள் கட்டியிருக்கும் பணக்காரர்களை எந்த அதிகாரியும் தட்டிக் கேட்பதில்லையே ஏன்...?
தமிழ்நாட்டில் பல அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் செய்யும் இந்த கன்றாவியை தயவுசெய்து நிறுத்தி தொலையுங்கள்!
சில தினங்களுக்கு முன்பு மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் கோவை தமிழ்நாடு எல்லைப் பகுதியில் லாரி டிரைவர்களின் சிரமங்களை அறிந்து கொள்ளவும், எல்லைகளில் மதுபானங்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்திருந்தார். உண்மையில் உருப்படியானதும் பாராட்டுக்குரியதும் கூட...
அப்படி ஏதாவது செய்தால் கூட பரவாயில்லை. வெறும் ரீல்ஸ்களுக்காக எடுக்கப்படுகிறது என்று அப்பட்டமாக தெரியும் இம்சைகளை நிறுத்துங்கள்..
அதுவும் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் சிலற்றை பார்ப்பதற்கே
அத்தனை அருவருப்பாக உள்ளது!
🤢🤢🤮🤮
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
Fact Check for fun:
3 கி.மீ மாரத்தான் ஓடுன ஒரே முதல்வர் விஜய் அண்ணாதான்! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இன்று நடந்த மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் ஓடியது குறித்து கருத்து
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் அதை முழுமையாக முடித்தார். பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் ஒமர் அப்துல்லா
ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி மாதத்திற்கு ஒரு மாரத்தான் போட்டியில் ஆவது கலந்து கொள்வார்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் என நிறைய முதல்வர்கள் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள்! Fit to core Chief ministers.
தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் எதிர்கால சந்ததிகளின் காதுகளுக்கு போய் விடக்கூடாது.அதற்கு தான் இது!
#CMVijay | #AdhavArjuna | #StartRunStopDrugs
சட்டமன்றத்தில் பொய் சொன்னாரா முதல்வர் விஜய்?
தமிழ்நாட்டில் எல் நினோ பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும் தங்கள் அரசை விவசாயிகள் புரிந்து கொள்வார்கள் என முதல்வர் விஜய் கூறியிருந்தார்
ஆனால் இந்த எல்நினோ பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை மத்திய அரசு வகைப்படுத்தவில்லை
டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் மேற்கொண்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றுதான் கூறியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் பிரச்சனைகள் இருக்கலாம் என்றுதான் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இது மிகவும் தீவிரமான பிரச்சனை. விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் அணுகி பாதிப்பின் விவரங்களை தொடர்ந்து மத்திய அரசுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தால்தான் அந்த அழுத்தத்தின் வாயிலாக தான் நிதி உதவியை பெற முடியும்.
#farmers #tamilnadu #VijayVsUdayanidhi
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
Today With your permission னு action காட்டுறாப்புல
Tomorrow with your permission - னு ஐட்டம் டான்ஸ் ஆடுவாப்புல
Day after tomorrow : with your permission னு ஐட்டம் டான்ஸ்க்கு ஜோடி கேப்பாப்புல குடுப்பீங்களா என்ன சபாநாயகரே ..
மக்கள் வரிப்பணத்தில் என்ன கூத்து இது... 😡
இன்னைக்கு விஜய் பேசுறதை பார்த்தா பெரிய ஆச்சரியம் எல்லாம் இல்ல?
இப்பேற்பட்ட தகுதி இல்லாத ஆளுங்களையெல்லாம் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த இந்த மக்களை தான் சொல்லணும்...
#தற்குறிகள்
சட்டமன்றத்தில் எனக்கே Class எடுக்குறாங்க திமுக
இன்று 😂😂
சபாநாயகர் //
அதிக முறை பொய் சொல்ல கூடாது , பொத்தாம பொதுவாக பேச கூடாது என ஜந்து முறை சபாநாயகரால்
கண்டிக்கபட்டடார் அமைச்சர் 😂😂
டெல்லி போய் நாட்டில் இரண்டாவது பெரிய பொருளாதாரம்னு பேசுறாரு… என் துறையில் இருந்த மகளிர் சுய உதவி குழுவ பாராட்டி பேசுறாரு
இரண்டு நாள்ல இங்க வந்து தமிழ்நாட்டுல கடன் இருக்கு.. ஆட்சி நடத்துறது கஷ்டம்னு சொல்றாரு
சினிமால தான் இரண்டு நிமிசத்தில ஏழை பணக்காரன் ஆவான், பணக்காரன் ஏழை ஆவான்.. சினிமா மாதிரி பேசிட்டு இருக்கீங்க
உதய் பேச பேச விஜய் மூஞ்ச பாக்கனுமே.. பிறந்தநாள்னு கூட பாக்காம முரட்டு குத்து.😭
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
தற்குறிகளே ..
இந்தப் பெண்ணுக்கு இருக்கும் அறிவில் ஒரு 5% ஆவது உங்களுக்கு இருந்திருந்தால் சத்தியமாக நீங்கள் TVK கட்சிக்கு ஓட்டு போட்டு இருக்க மாட்டீர்கள்
நண்பர்கள் இந்த பதிவை காப்பி செய்து பரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
🙏🙏🙏
முட்டு குடுக்க பேன்ஸ் இருக்காங்க,
பழி போட திமுக இருக்கு,
எலிவேஷன் குடுக்க மீடியா இருக்கு,
நம்புறதுக்கு மக்கள் இருக்காங்க,
இதுக்கு மேல என்ன சொகுசு சார் வேணும்?!