முருகப்பெருமானின் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் பாக்கியம் கிடைத்தது இறையருள் எனக்கு பெரும் நெகிழ்ச்சியை அளித்தது.
முருகனின் அருள் அனைவருக்கும் என்றும் துணையாக இருந்து நல்லதே நடைபெற அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.
வெற்றி வேல்! வீர வேல்!
#thiruthanai #murugantemple #premalathavijayakanth
டெல்லியில் நடைபெற்ற NEET எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் பங்கேற்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களையும், அவர்களுக்கு ஒருங்கிணைப்பாக செயல்பட்டு வரும் திரு. அபிஜீத் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினேன்.
அந்த சந்திப்பில், போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக முழுமையான ஆதரவை தெரிவித்தேன்.
இந்தப் போராட்டத்தில் நீங்கள் தனியாக இல்லை. உங்கள் நியாயமான கோரிக்கைக்கு தே.மு.தி.க. என்றும் உறுதுணையாக இருக்கும். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்தப் போராட்டத்தில், தெருவிலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி, உங்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்போம். நாடாளுமன்றத்தில் தினந்தோறும் NEET ரத்து கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். இந்த வாரம் முழுவதும் NEET தொடர்பான விவாதங்களிலும், போராட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று, NEET-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்" என்ற உறுதியையும் அவர்களுக்கு அளித்தேன்.
உரையாடலின் போது, **கேப்டன்** அவர்கள் NEET-க்கு எதிராக ஆரம்ப காலத்திலிருந்தே எடுத்த உறுதியான நிலைப்பாட்டையும், மாணவர்களின் கல்வி உரிமைக்காக அவர் நடத்திய துணிச்சலான போராட்டங்களையும் நினைவுகூர்ந்தோம்.
அப்போது அங்கிருந்த மாணவர்கள், கேப்டன் அவர்களின் தைரியம், நேர்மை, அநீதிக்கு எதிராக அச்சமின்றி போராடும் குணம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். திரைப்படங்களில் அவர் நடித்த சண்டைக் காட்சிகளையும் நாங்கள் மிகவும் விரும்பிப் பார்ப்போம். அதைவிட, மக்களுக்காக அவர் போராடிய குணம்தான் எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகம்" என்று பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சி அளித்தது.
NEET தேர்வு என்பது மாணவர்களின் திறமையை அளவிடும் தேர்வு அல்ல; சமூக நீதிக்கும், சமமான கல்வி வாய்ப்புக்கும் எதிரான ஒரு முறையாகவே தே.மு.தி.க. தொடர்ந்து கருதி வருகிறது.
அதனால்தான், கேப்டன் அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே NEET-ஐ எதிர்த்து உறுதியான குரல் கொடுத்தார். அந்தப் பாதையிலேயே, பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் MLA அவர்களின் தலைமையில் நாங்களும் அதே உறுதியுடன் பயணித்து வருகிறோம்.
மாணவர்களின் கல்வி உரிமையையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பது எங்களின் கடமை.
மாணவர்களின் நலனுக்காக நடைபெறும் ஒவ்வொரு நியாயமான போராட்டத்திலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றும் உறுதியாக துணை நிற்கும்.
அன்றும்... இன்றும்... என்றும்...
அனைவருக்கும் சமமான கல்வியே எங்கள் இலக்கு...
#BanNEET #NEETBan #DMDK #தேமுதிக #LKSudish
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கழக பொருளாளர் திரு. எல்.கே. சுதீஷ் அவர்கள் இன்று சாலிகிராமம் இல்லத்தில் என்னை சந்தித்து ஆசி பெற்றார்.
கேப்டன் அவர்களின் ஆசீர்வாதத்துடன், மக்களின் நலனையும் கழகத்தின் கொள்கைகளையும் உயர்த்திப் பேசும் வலுவான குரலாக மாநிலங்களவையில் செயல்படுவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
#dmdk #premalthavijayakanth #LKS #dmkalliance