தொடர் பயணத்தில் இருந்தபோதும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தேன்.
2021ஆம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; கழக ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சீர்திருத்தங்களின் விளைவு என்பதை, தரவுகளின் அடிப்படையில் எவருடனும் விவாதிக்கத் தயார் என்பதை தெரிவித்தேன்.
மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களால் மட்டுமே நீடித்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி, அதிகாரிகள் புதிய அரசை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்.
🔥 10 நிமிடங்களில் 2 நாள் பிரச்சாரம் காலி!
தோழர் @APunnaivalavan
கடந்த இரண்டு நாட்களாக தவெக கட்டியெழுப்பிய Fake Narrative அடிச்சு நொறுக்கியிருக்கார்....
சத்தம் அதிகமாக இருந்ததாலே பொய் உண்மையாகிவிடாது என்பதை, தரவுகளுடனும் அரசியல் உண்மைகளுடனும் நிரூபிக்கும் உரை.
பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள். 🔥
தமிழ்ச் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தம் பொதுவாழ்வில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வெற்றி - தோல்விகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மகத்தான ஆளுமை!
அரசியல் ரீதியாக ஏற்பட்ட அத்தனை எதிர்ப்புகளையும் -நெருக்கடிகளையும் முறியடித்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தொடங்கிய நமது திராவிட முன்னேற்றக் கழகம், உயிரோட்டமுள்ள, வலிமையான மக்கள் இயக்கமாக என்றும் நிலைத்திருக்கும் வகையில் வழிநடத்திய தன்னிகரற்றத் தலைவர்!
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில், இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்திட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர்!
இலக்கியம், நாடகம், திரைப்படம், பத்திரிகை எனப் படைப்புலகின் அனைத்துத் துறைகளிலும் தன் எழுத்துக்களால் அழியாத முத்திரை பதித்து, தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் பங்களிப்புகளை வழங்கிய மாபெரும் கலைஞர்!
நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் வகுத்தளித்த சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை இறுதிவரை உறுதியாக ஏந்தி நின்ற கொள்கை வீரர்!
தமிழினக் காவலர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரதம் மகத்தான பொதுவாழ்வையும், பெரும்புகழையும் போற்றுவோம்.
வாழ்க கலைஞரின் புகழ்!
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
DMK has decided to function as an effective opposition despite congress betrayal (and perhaps other alliance parties) . ADMK IS PUSHING BJP TO STOP TVK FORMING GOVT. That is disrespecting people’s mandate. Hope democracy prevails @DMK4TN
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.