இளையராஜா to மலேசியா வாசுதேவன்..
யோவ் அருமையான சந்தர்ப்பம் உனக்கு #கமல்ஹாசனுக்கு பாட்டு பாடபோர..இதுல ஒரு அடி அடிச்சா தான் நீ ஜெய்பா.இலன்னா அதுக்கு அப்புறம் எனக்கு தெரியாது.
16 வயதினிலே படத்தின் முதல் பாடல் ஒலிப்பதிவு நிகழ்ந்த போது..
#HBDMalaysiaVasudevan#KamalHaasan
#Ilaiyaraaja
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ம் 9-ம் வகுப்புகளில்,
குறைந்தது ஒரு பிரிவிலாவது சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவது கட்டாயம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு,மும்மொழி கொள்கை திணிப்பு.
கேந்திர வித்யாலயா
பள்ளிகளை தமிழ் நாட்டில் தடை செய்ய வேண்டும்
@TVKVijayHQ#KamalHaasan@maiamofficial
June 14 - Sunday
உலக குருதி கொடையாளர்கள் தினம்.
ஆண்டிற்கு ஒரு முறையாவது இரத்த தானம் செய்வோம்.
நாம் அளிக்கும் 350 ML மூன்று உயிரை காக்கும் வாய்ப்பு உள்ளது.
#Blood#BloodDonation#BloodDonorsDay
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு (தவெக) தனது அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – @maiamofficial வலியுறுத்தல்!
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் டெல்டா பகுதி விவசாயிகளின் தற்போதைய அவல நிலையைக் கண்டு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் தற்போதைய தமிழக அரசு (தவெக) காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
1. மேட்டூர் அணை மூடல் & மின்வெட்டு துயரம்:
வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு (2026) அணையில் முழு கொள்ளளவு எட்டப்படாததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் டெல்டா பாசனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, நிலத்தடி நீரை (போர்வெல் மூலம்) இறைத்து பாசனம் செய்யலாம் என்று விவசாயிகள் முயன்றால், டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான மும்முனை மின்சார (Three-Phase Connection) மின்வெட்டு அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டு வைத்துள்ளது. போதிய மின்சாரம் இல்லாததால் போர்வெல் மூலமும் அவர்களால் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
2. போதாத 'குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு':
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை ஈடுகட்ட, கடந்த இரண்டு ஆண்டுகளில் முந்தைய திமுக அரசு விவசாயிகளுக்குக் கூடுதல் நிதியுடன் கூடிய குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பை வழங்கியிருந்தது.
ஆனால், தற்போதைய தவேக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு வெறும் ரூ. 134.83 கோடி மட்டுமே. இது முந்தைய அரசு வழங்கிய தொகையை விட மிகவும் குறைவானதாகும்.
முக்கியக் குறிப்பு: இந்த ஆண்டு 'எல் நினோ' (El Niño) விளைவினால் 90% மழைப்பொழிவு குறைந்துள்ளது. வறட்சி அதிகமாக இருக்கும் இந்த ஆண்டில்தான் தண்ணீருக்கான தேவையும், விவசாயிகளுக்கான நிதி உதவியின் தேவையும் மிக அதிகம். இத்தகைய சூழலில், அரசு மிகக் குறைந்த தொகையை அறிவித்திருப்பது டெல்டா விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
3. தேர்தல் வாக்குறுதியும், ஏமாற்றமும்:
தேர்தல் அறிக்கையில் "விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்" என்று தற்போதைய ஆளுங்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், நடைமுறையில் அது முழுமையாகச் செய்யப்படவில்லை.
பல்வேறு கடுமையான நிபந்தனைகளை (Terms and Conditions) விதித்து, ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த விவசாயப் பெருங்குடி மக்களையும் ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கைகள்:
தமிழக விவசாயிகளின் நலனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் தற்போதைய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்:
குறுவை சிறப்புத் தொகுப்பு நிதியை வறட்சிக் காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக உயர்த்த வேண்டும்.
டெல்டா பகுதிகளில் போர்வெல் பாசனத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரத்தை (3-Phase Power) தடையின்றி வழங்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல், இந்த அறிவிப்புகள் அனைத்தையும் தவெக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
#MakkalNeedhiMaiam
#KamalHaasan_MP
#cheifministerofTamilnadu
#deltafarmers
Congratulations to Shri @narendramodi ji on becoming India’s longest continuously serving elected Prime Minister. In a diverse democracy like ours, sustained public trust is a significant feat. May our collective focus remain on India’s progress and the welfare of our fellow citizens.
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
நார்வே செஸ் 2026 தொடரில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை ஒரே பதிப்பில் இரண்டு முறை வீழ்த்தி, வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய செஸ் இளம் மேதை ஆர். பிரக்ஞானந்தாவிற்கு மக்கள் நீதி மய்யம் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது !
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#KamalHaasan_MP
#Norwaychess
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.
உங்கள்
கமல்
@ilaiyaraaja#HBDIlaiyaraaja
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராக இருந்து சமூகநலனுக்காகவும் சமநீதிக்காகவும் எத்தனையோ வழக்குகளில் வாதாடி வென்ற திருமதி. வி.மோகனா அவர்கள், அந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவே பதவி ஏற்கிறார். இப்படி வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் தமிழ்ப் பெண்மணி இவரே என்பதில் தமிழகம் பெருமை கொள்கிறது.
உச்சநீதிமன்ற மாண்பமை நீதிபதி வி. மோகனா அடைந்திருக்கும் உயர்வு, தத்தம் துறைகளில் அந்தரங்கசுத்தியோடு ஈடுபடும் எவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கும். அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
ஒரு சகோதரி என்னிடம் கேட்டது பெண்களுக்காக உங்க @ikamalhaasan என்ன செய்தார்?
"இல்லத்தரசிகளுக்கு ஊதியம்" என்ற தத்துவம், பெண்களின் வீட்டு உழைப்பை அங்கீகரிக்கும் ஒரு புரட்சிகரக் கொள்கை
இன்று பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது
விதை நம்மவர் போட்டது
@maiamofficial@MouryaMNM