OFFICIAL ANNOUNCEMENT
The Super Kings and Head Coach Stephen Fleming have mutually decided to part ways.
Together, we shared one of the most successful and enduring partnerships in IPL history. The legacy you've built will continue to inspire us.
With immense respect and gratitude, Thank you, Stephen. 💛
More details: 🔗 https://t.co/o36a2ozbuy
மனிதம் மறந்து சாதியைக் கௌரவுமாகக் கருதும் மனிதமற்ற மனிதர்கள்! ~ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுக - நீலம் பண்பாட்டு மையம்!
****************************
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, சாத்தங்குடி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபனும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பிரியதர்ஷிணியும் ஒருவரையொருவர் நட்புடன் பழகி வந்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்றுக்காலையில் அவ்விருவரும் அப்பகுதியில் உள்ள தோப்பு ஒன்றின் கூரைக் கொட்டகையில் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ள கொடூரமான சம்பவம் பேரதிர்ச்சி அளிக்கிறது.
இச்சம்பவத்திற்கு முன்னதாக காவல்நிலையத்தில் பெண்ணைக் காணவில்லை என்கிற முன்திட்டமிடலோடு பொய்யான புகார் ஒன்றையும் பெண்ணின் பெற்றோர் அளித்திருக்கின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணின் சித்தப்பா 'உங்களை சென்னை { அ}பெங்களூர் அனுப்பி, வாழ வைக்கிறேன்' என்று அவ்விருவரையும் நம்ப வைத்து, பெண்ணை மட்டும் ஒருநாள் முழுவதும் வேறோர் இடத்தில் தங்க வைத்துள்ளனர். பின்னர், அப்பெண் மூலமாகவே பார்த்திபனுக்கு போன் செய்து வரவழைத்திருக்கின்றனர்.
இதற்குப் பின்னரே பெண்ணின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கொட்டகையில் மர்மமான முறையில் அவ்விருவரும் இறந்த நிலையில் தூக்கிடப்பட்டு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றனர் என்றே சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை லட்சுமி காந்தன், சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜி, ஆகியோர்கள் மீது காவல்துறை விசாரணை மேற்கண்டு SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நாளும் சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்வது சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு வருகிறது என்பதைத்தான் காட்டுகிறது. இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து தொடரும் சாதி ஆணவப்படுகொலைக்குத் தனிச்சட்டத்தை தாமதிக்காமல் இயற்ற முன்வர வேண்டும். மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்ட பார்த்திபன் அவரோட தந்தையுடன் சென்று சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தன்னைச் சாதிப் பெயர் சொல்லி பெண்ணின் தந்தை தாக்க முன் வந்ததாகவும், தன்னோட உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கருதி காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அதைக் காவல்துறை வாங்க மறுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இந்தச் சாதிய ஆணவப் படுகொலைக்குப் பின்புலமாக இருந்த கும்பலை கைது செய்வதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல், தொடர்ந்து நிகழும் சாதி ஆணவந் படுகொலைகளை நிரந்தரமாகத் தடுப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
எனவே, தவெக தலைமையிலான தமிழக அரசு சாதி ஆணவப் படுகொலைக்கென தனிச்சிறப்பு சட்டத்தை காலதாமதம் இல்லாமல் இயற்றுவதற்குரிய ஆக்கபூர்வமான செயல் திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பார்த்திபன் குடும்பத்திற்குத் தகுந்த பாதுகாப்பை அளிக்கும்படியும் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.
ஜெய்பீம். @TVKVijayHQ@CMOTamilnadu@Neelam_Culture
What a super sweet welcome! Sooo happy and excited to begin this beautiful journey with my Tamil debut. Enakku romba santhosham! Thank you, team ❤️✨
@NimmaShivanna@Abishanjeevinth@dramacompany
தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து "யூசுப்"கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் .
- 41 Years old.
- Captain.
- First match of the tournament.
- Chasing 221 runs.
- Hundred.
- Player of the match.
ONE & ONLY FAF DU PLESSIS OF SUPER KINGS FAMILY 💛🔥
Sourav Ganguly tells the story of how he scouted MS Dhoni.🏏
"We didn't even have a wicketkeeper who could bat. I went to Jamshedpur to watch MS Dhoni, and he didn't even know about it. Saba Karim told me, 'This guy hits a lot of sixes. Check him out. I picked him from there, and he played his first India A match at the Wankhede Stadium.
He was in my team. He scored a hundred and was hitting sixes onto the roof. I have never seen anyone hit sixes like MS Dhoni.🔥
🚨 MS DHONI SLAMS BCCI ON IMPACT PLAYER RULES 🚨
Ms Dhoni Said 🗣️,
"The IPL was already in a very good position. After the introduction of the Impact Player rule, the game has become quite imbalanced. The IPL had exciting matches, strong competition, and excellent quality of cricket. There was no need for any further changes. This rule may help in some ways, but I am not really an Impact Player, and I do not like the Impact Player rule at all."
One of our greatest ever, signing off.
Kane Williamson has announced his retirement from international cricket effective immediately.
Head to https://t.co/Pm8RiU65zt to read more.
தவெக @TVKVijayHQ
தலைமையிலான தமிழக அரசே
@CMOTamilnadu இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்றிடு!
தென்மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை,தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இந்நிலை தொடர்ந்து நீடிப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அரண் சேர்க்காது.இந்நிலையில் கடந்த இருதினங்களில் அதாவது, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடந்தேறிய சாதி ஆணவக்கொலையை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!
கங்கைகொண்டான் சிப்காட் தனியார் சோலார் நிறுவனத்தில் பணிசெய்துவந்த மறவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் (ராமலட்சுமி) திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரைக் காதலித்தார் என்பதற்காகவே தன் சகோதரரால் அப்பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதிகளில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் நடந்திருக்கின்றன.
ஒரு சம்பவம் நடந்து முடிவதற்குள் மீண்டுமொரு துயரம் நிகழ்வது தொடர்கதையாக நீடிப்பது கவலையளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இளம்பெண் அபிசெல்வி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை எனத் தெரியவந்துள்ளது. சக தோழியின் அண்ணனான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற தலித் இளைஞரைக் காதலித்ததற்காக இப்படுகொலையைச் செய்த அப்பெண்ணின் அண்ணன் சிவஞானம், உடந்தையாக இருந்த தாய் எஸ்தர் பாலின் இருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை. இவ்விரு சம்பவங்களிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் தங்கள் வீட்டுப் பெண் தலித் சமூக இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக இரத்தச் சொந்தங்களே படுகொலை செய்யும் அளவிற்குத் துணிந்திருப்பது அபாயகரமான செயலாகும். இதன் பின்னணியில் யார் யார் இருந்து இதுபோன்ற சமூகவிரோதச் செயலை ஊக்குவிகிறார்கள் என்பதைக் காவல்துறையும் அரசும் உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
தொடர்ந்து தென்தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதிய வன்முறைகளும் ஆணவக்கொலைகளும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தி சட்ட ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. மேற்கண்ட இரு சாதி ஆணவக்கொலைகளுக்கும், சாதிய வன்முறைகளுக்கும் மூளையாக இருந்து செயல்பட்ட சாதியவாதிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதோடு தாமதிக்காமல் ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தையும் தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.
காவல்துறையும் கைது செய்வதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாக கருதும்போக்கு நீடிப்பது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில், குற்றவாளிகள் வெளியே வந்து மீண்டும் அதே செயலைத்தான் செய்கிறார்கள் என்கிறபோது இயல்பாகவே சமூகப் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. இப்போக்கு சாதிய வன்முறையையும் ஆணவக்கொலையையும் ஊக்குவிப்பதாகவே அமையும்.
“தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தடுக்கச் சிறப்பு கண்காணிப்பு தீவிரம்; கிராமங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தென்மண்டல ஐஜி குறிப்பிட்டுள்ளார். இது வெறும் அறிக்கையாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. ஏனெனில், இதற்கு முன்னதாக இதுபோன்று நிறைய அறிக்கைகளும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட ஒருநபர் ஆணையங்களும் பல்வேறு வழிமுறைகளைக் கொடுத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பணிகளில் பணியமர்த்தப்படுகின்ற காவலர்களும் காவல் அதிகாரிகளும் ஓரே சமூகப் பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதோடு, காலந்தாழ்த்தாமல் ஆணவப் படுகொலைகளுக்கான தனிச் சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.
@Neelam_Culture