இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்!
முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் ஒரு நேரடியான கேள்வி:
கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன... இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது?
இன்று இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.
நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும்.
நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னைப் பார்க்கிறேன். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது!
தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது.
மேலும் ஒரு விஷயம்...
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி!
என் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.
அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான்!
News Tamil 24x7 Breaking News | 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்
வருகிற 10ஆம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய் நேரில் பணி ஆணைகளை வழங்க உள்ளதாக தகவல்
Karur Stampede | 02 July 2026
#CMVijay #GovernmentJobs
உதயநிதி master plan விஜய் ஆட்சி நீடிக்க கூடாது இந்த ஆட்சி கலைக்கணும்
சபாநாயகர் எதிரா வாக்கு அளிக்க TVK MLA வை மிரட்டல் விடுத்து கேட்டுருக்காங்க
எடப்பாடி பழனிசாமியும் உடந்தை
திமுகவின் திருகுதாளத் திருவாய் கொண்ட வெறும் வாயை மென்று வீண் வதந்தியை வாந்தியாக எடுப்பதில் வல்லவர், எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. புலம்பல் திரு.பரந்தாமன்.
திமுக ஏதோ அரசியல் புனிதம் பேசும் இயக்கம் என்று திக்கித் திணறி, முக்கி முனகி, சொத்தை வாதம் பேசிச் சொதப்புகிறார்.
நம் தவெக எம்.எல்.ஏ.விடம் ஒட்டக பேரம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சரின் அடியாட்களைக் காவல் துறை அமுக்கிய பிறகும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யென்று ஜல்லி அடிக்கிறார்.
Vending machine வைத்து மற்ற கட்சியினரை விலைபேசும் விஷ ஜந்து திமுகவிற்கு வெட்கமே இல்லாமல் ஜால்ரா அடிக்கும் பரந்தாமன், வாயை அடக்கிப் பேச வேண்டியது அவசியம்.
ஒட்டக பேரம் நடத்திய தன் முன்னாள் அமைச்சர், ஒருவருக்கும் தெரியாமல் ஓடி ஒதுங்கிப் பதுங்கி நடுங்கி மறைந்து அலையும்போதே திமுகவினர் வாய்க்கொழுப்பு எடுத்து வம்பளப்பது சகிக்கவில்லை.
மக்கள் விரும்பும் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் வாய்க்கு வந்தபடி பேசும் அறிவாலயத்தில் அலையும் பிராணியாக மாறுவதும் மாறாததும் பரந்தாமனுக்கே வெளிச்சம்.
சொந்தக் கட்சியிலேயே விஷக்கடி பட்டு, தேர்தலில் போட்டியிட்டுத் தோற்கும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் குழம்பிப் போய் நம் மீது அவதூறாக அள்ளி வீசி வாய்விட்டுப் புலம்பிச் சலம்பி இருக்கிறார்.
பரந்தாமன் பேசும்போது அநாகரிகத்தின் உச்சமாக, ‘அரண்மனை நாயே அடக்கடா வாயை’ என்று அமைச்சரைப் பார்த்துச் சொல்கிறார். அதே போல நாமும், ‘அறிவாலயத்து … அடக்கு வாயை’ என்று சொல்லலாம். ஆனால், நாகரிகம் கருதித் தவிர்க்கவே விரும்புகிறோம்.