என்ன நண்பா @LoyolaMani ?
கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாம, என்ன என்னமோ எழுதி வச்சு இருக்க?
விமர்சனத்துக்கும், குற்றச்சாட்டுக்கும் விளக்கமோ, மறுப்போ, தர்க்கமோ வைக்கணும். தொலைக்காட்சி விவாதம் மாதிரியே இங்கயும், வாய்க்கு வந்தத உளறிக் கொட்டக்கூடாது நண்பா!
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் இரண்டு அரசுத் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக இன்றுகூட செய்தி வந்திருக்கிறது. அதற்கு தவெக அரசைப் பொறுப்பேற்கச் சொல்லவில்லை.
முந்தைய திராவிட அரசுகள் போல அல்லாது, பள்ளிக்கல்வித்துறையைச் சீரமைக்கச் சொல்கிறோம்; அரசுப்பள்ளிகள் மீது கவனமெடுக்கச் சொல்கிறோம்; தரம் உயர்த்தச் செயல்பாடுகளை முன்னெடுக்கச் சொல்கிறோம். அமைச்சர் ராஜ்மோகனோ தனியார் பள்ளிகள் மீதுதான் கரிசனம் காட்டுகிறார். அதனைத்தான் அண்ணன் சீமான் அவர்கள் சுட்டிக்காட்டிக் கண்டித்திருக்கிறார்.
தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கவில்லை என்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். அதேபோல, தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட தவெக அரசு விடவில்லை என உறுதியளிப்பாரா ராஜ்மோகன்? இன்றளவும் கட்டணக் கொள்ளை நடந்துகொண்டுதானே இருக்கிறது.
இதனைத்தானே அண்ணன் சீமான் அவர்கள் கேட்கிறார்.
//உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? //
// தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? //
அதற்கு உரிய விளக்கத்தை அளிக்காது, முந்தைய திமுக அரசைக் கைகாட்டித் தப்பிக்க முயற்சிக்கிறீர்கள். நாங்கள் அதனை ஏதோ கண்டிக்காதது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
இதோ,முந்தைய திமுக அரசினுடைய பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகச்சீர்கேடுகளைக் கண்டித்து அண்ணன் சீமான் விடுத்த அறிக்கைகளிலிருந்து ஒரு சில...
(https://t.co/r9FCyk8a4s)
(https://t.co/tSb3xCLVZH)
(https://t.co/N0QeX5vjOu)
(https://t.co/eRDxOHbHxG)
(https://t.co/mbuES2wcl6)
(https://t.co/skzoTNfTCy)
போகட்டும்!
அப்புறம் என்ன..? நாங்க திராவிட ஆதரவாளரா? திராவிடத்தை எதிர்க்கணுமா? அடடா.. விஜய் திராவிடத்தை எதிர்க்கிறார் போல! இருக்க இடத்தை மறந்துட்டு same Side Goal போட்றீயே நண்பா?
திமுக ஆட்சியின் அத்தனை அவலங்களையும் எதிர்த்து நாங்கள் போராடியிருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களோடு நாளும் களநாயகனாகப் போராட்டக்களத்தில் நின்று இருக்கிறார் அண்ணன் சீமான். கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா சிலை வைக்கும் முடிவு உட்பட பல மக்கள் விரோதத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தியது அண்ணன் சீமான்தான். திமுக அரசின் கொடுங்கோல் திட்டங்களையும், செயல்பாடுகளையும் எதிர்த்து சமரசமின்றிப் போராடியது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். அவ்வளவு ஏன்? திமுக முன்வைக்கும் 'திராவிடம்' எனும் கற்பிதத்தையும், 'பெரியார்' எனும் பிம்பத்தையும் உடைத்து எறிந்திருக்கிறோம். அதனால், திராவிடத்தையும், திமுகவையும் எதிர்க்க எங்களுக்குப் பாடமெடுக்கிற அதிகபிரசங்கித்தனம் வேண்டாம்.
வேற என்ன.. உதயநிதியை நேரில் சந்திச்சுட்டா நாங்க திமுகவோட உறவுல இருக்கோமா? என்ன அறிவு நண்பா உனக்கு?
அதுசரி! INDIA கூட்டணிக்குள் தொடர்ந்து நீடிக்கவும், செயல்படவும் வேண்டுமென திமுகவைக் கூப்பிடுறாரே உங்க கூட்டணிக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர் திமுகவோட எந்த உறவுல இருக்காரு? அவரை தவெக அரசு கண்டித்ததா? திமுகவை தோழமைச் சக்தி எனச் சொல்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் என்ன உறவுல திமுகவோட இருக்காங்க? அவங்கள எல்லாம் கண்டிச்சுட்டீங்களா?
வேற என்னது.. அமைச்சர் ராஜ்மோகன் மீது வன்மமா? எழுதணும்ங்குறதுக்காக எதையாவது எழுதாத நண்பா..
கடைசியா என்ன சொன்ன நண்பா.. பதிலடியா? தொலைக்காட்சி விவாதம் பக்கம் தலையவே காட்டுறது இல்லையே ஏன் நண்பா? அங்க வாங்க நண்பா.. யாருக்கு யார் பதிலடி கொடுக்குறான்னு பாப்போம்..
கடைசியா ஒரே கேள்வி நண்பா.. இதுக்கு மட்டுமாவது பதில் சொல்லு..
முந்தைய திமுக, அதிமுக ஆட்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கினார்கள் எனும் நந்தகுமாரின் குற்றச்சாட்டை முழுமையாக நாங்கள் ஏற்கிறோம்.
2017ஆம் ஆண்டு முதல் 2021வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அவர் தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கினாரா? இல்லையா?
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தனித்தமிழ்நாடு கோரிக்கையைப் பிரிவினைவாதம் எனவும், தேச விரோதம் எனவும் கூறுவதை ஏற்க முடியாதெனினும், இந்தியப் பார்வையில் இருந்து வெளிப்படும் எதிர்ப்புணர்வு என அதனைப் புரிந்துகொள்ளலாம்.
மாறாக, தனித்தமிழ்நாடு கேட்பதை மனநலச்சிக்கல் என்பது தேசிய இனத்தின் பிரிந்துபோகும் தன்னுரிமைப் பற்றிய புரிதல் இல்லாது, அவற்றிற்காகப் போராடிய போராளிகளையும், செயல்பாட்டாளர்களையும் மலினப்படுத்தும் செயல்.
ஒரு நாட்டுக்குள் வாழும் ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது தாயகத்தை தனி நாடாக அறிவிக்கக் கோருவதே மனநலச் சிக்கல் என்றால், வெவ்வேறு நாடுகளாக இருக்கும் நிலப்பகுதிகளை ஒரே நாடாக்கி, 'அகண்டப் பாரதம்' என அமைக்கக் கோருவதற்குப் பெயர் என்ன நீதிமான்களே?
நடிகரின் வசன உச்சரிப்பு ,உடல்மொழி , துணை நடிகர்களின் நடிப்பு எல்லாம் சரியாக இருந்தும் படத்தில் விவசாயிகளை கொச்சைப்படுத்தி ஆணவத்திமிரோடு
பேசுவதால் படம் அட்டர் ப்ளாப் .
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நியூஸ் 18 தமிழ்நாடு சார்பாக மன்னார்குடியில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் இன்றைய அரசியல் நிலை குறித்துப் பேசியபோது, அதனைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், 'முதல்வன்' திரைப்படம் பார்த்துவிட்டு, அதில் உந்தப்பட்டு நான் வந்ததாகவும் பேசினார் ஐயா மகேந்திரன்.
இப்போது எல்லோரும் அதிர்ச்சி அடையும் வகையில் முடிவெடுத்திருக்கிற ஐயா மகேந்திரன் அவர்களே! எந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, உந்தப்பட்டு பனையூரில் ஐக்கியமாகியிருக்கிறீர்கள் ஐயா?
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தம்பிக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, முழு உடல்நலம் பெற்று மீண்டுவர துணைநிற்கிறேன்.
போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறைத்தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? முதல்வராகப் பதவியேற்றதும், ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ எனக் கையெழுத்திட்டாரே விஜய், என்ன செய்கிறது அந்தப் படை?
@CMOTamilnadu@TVKVijayHQ
இக்கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி