My opinions will stay anti-establishment, questioning the govt in power as I have stayed earlier as well. Replugging my earlier tweet for the expectations from new govt #TVK
#TamilNadu election looks unpredictable. Whoever wins, all I hope is ppl ensuring the following:
1. More Econ growth
2. Protect State rights/federalism
3. Better L&O incl. Timely justice
4. Most imp: Real social justice where casteism is disincentivized at all levels
#JUSTNOW | ஆகாஷின் பெற்றோர் கைது
சிவகங்கை: மானாமதுரையில் போலீஸ் கஸ்டடியில் ஆகாஷ் என்ற இளைஞர் மரணமடைந்த வழக்கு; ஆகாஷுக்கு போலீசாரே இறுதிச்சடங்கு செய்ய ஆயத்தமான நிலையில் பெற்றோர் எதிர்ப்பு
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்த போலீசார்
Akash Parents Arrested | Justice For Akash | Police Custody Death
#NewsTamil24x7 | #JusticeForAkash | #PoliceCustodyDeath | #AkashParentsArrested
காவல்துறையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கான நீதியை அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் வெட்கமின்றி மறுத்துள்ளன. அதிகாரவர்க்கம், எனது மக்களை அடித்துக்கொலை செய்யலாம் எனும் துணிச்சல் கொண்ட பயங்கரவாத கட்டமைப்பாக மாறுகிறதா எனும் கேள்வியை மதுரை உயர்நீதிமன்றத்தால் மறுக்க இயலுமா?
தவெக அரசும், முதலமைச்சரும் 'அஜித்குமார்' அதிகாரவர்க்க வன்முறையால கொல்லப்பட்டபோது பேசியவர்கள், தற்போது ஆகாஷ் படுகொலைக்கு நீதிவழங்க தவிர்ப்பது ஏன்?
ஒரு இளைஞன் காவல்துறையால் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யல்படுகிறான். அவரது கொலைக்கு காரணமான காவல்துறை சார்ந்த எவரும் வழக்கில் இணைக்கப்படவில்லை. குற்றவாளிகளின் பெயரை இணைக்கச் சொல்லி 100 நாட்களாக அக்குடும்பமும், சமூகசெயற்பாட்டாளர்களும் போராடுகின்றனர். திமுக ஆட்சியில் ஆரம்பித்த போராட்டம் தவெக ஆட்சியிலும் தொடர்ந்தது. திமுக, தவெக, அதிமுக என எந்த கட்சியும் நீதிக்காக குரல்கொடுக்கவில்லை. சாமானியனுக்கு நியாயம் கேட்க நாதியில்லை.
அஜித்குமார், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு கிடைத்த குறைந்தபட்ச கவனம், நடவடிக்கைகூட ஆகாஷுக்கு கிடைக்காத காரணம் என்ன? பட்டியல் சமூகமென்றால் நீதியும், ஆதரவும் கண்மூடி மெளனம் காக்குமா? அஜீத்குமார் வீட்டுக்குச் சென்றார் இன்றய மாண்புமிகு முதலமைச்சர். அன்றய திமுக அரசு கேள்விக்குட்படுத்தபப்ட்டது. அனைவரும் அணிவகுத்துச் சென்றார்கள். இன்றைக்கு அரசியல் செய்யக்கூட எந்த தலைவரும் ஆகாஷ் வீட்டிற்கு செல்லவில்லை. ஏன் அவர் பட்டியல் சமூகமென்பதாலா? காவக்துறையால் கொலையுண்ட அஜித்குமாரும், ஆகாஷுக்கும் வேறுபாடு என்ன? சாதிதானே!..
திமுக அரசு தராத நீதியை, தவெக அரசால் ஏன் தர இயலவில்லை. காவல்துறையை கண்டு இருவரும் அஞ்சுகிறார்களா? அல்லது பட்டியல் சமூகத்தின் மீதான ஒவ்வாமையா?
நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கில் நீதியை கொன்று புதைத்திருக்கிறார்கள். பாதிக்கபட்டவனின் பக்கம் நின்றும், அதிகாரவர்க்கத்தால் வஞ்சிக்கப்பட்ட சாமானிய தலித் குடும்பத்தின் பக்கம் நின்று வழக்கை அணுகத் விரும்பாத நீதிமன்றமாக மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பை கொடுத்திருப்பது என்பது, (திருப்பரங்குன்றம் தீப வழக்கில் கொடுக்கப்பட்ட அநீதியான தீர்ப்பைவிட) மிகமோசமான அரசபயங்கரவாதத்தினை ஆதரிக்கும் அதிர்ச்சிகரமான தீர்ப்பு.
காவல்துறையினரால் நடத்தப்படும் வன்முறைக்கு நீதிமன்றமும், தவெக-திமுக ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் கொடுத்திருக்கும் தீர்வு என்பது என்ன? கொலை செய்த அதே காவல்துறையால், கொலையான அப்பாவியின் உடலை வலிந்து கைப்பற்றி, பெற்றோர் அனுமதியில்லாமல், இறுதிக்கடன் செய்யச் சொல்வது.
என்னே ஒரு நீதி!!
என்னே ஒரு சனநாயகம்!!
இதைக் கல்வெட்டாக எழுதி மதுரை உயர்நீதிமன்றத்தின் வாசலிலும், கலெக்டர் அலுவலக வாசலிலும், முதலமைச்சர் அலுவலக வாசலிலும், சட்டமன்ற வாசலிலும் நட்டு வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் யோக்கியதை உலகம் மெச்சட்டும்.
ஆகாஷின் பெற்றோர்களின் ஆற்றாமை உங்களையெல்லாம் வாழ்வாங்குவாழ்த்தட்டும்..
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை.— (குறள் எண்: 555)
என 'கொடுங்கோன்மை' அதிகாரத்தில் வள்ளுவர் எழுதிய குறளை அனைத்து அரசு அலுவலகத்திலும் எழுதி மாட்டிடுங்கள், குறிப்பாக நீதிமன்றத்தில் நீதிபதிகளின் முதுகுக்குப் பின்னால் அல்ல, அவர்கள் கண்ணுக்கு தெரியும்படியாக..
Europe's post-2008 "austerity" expts showed how cutting spending can shrink #GDP,raise unemployment & even worsen debt-to-GDP ratios. We must focus on growing GDP & revenues,while investing in productive capital & continuing welfare.They aren't mutually exclusive.#TamilNaduDebt
Some of us knew TN finances were in a precarious position and have been repeatedly pointing out. But coming from the official sources, it carries authenticity. Is this fixable? Yes - with a lot of austerity measures. BUT... unfortunately TVK CM Joseph Vijay has also promised too much to the electorate to win the elections. Rs 2500 to every woman/household, free bus ride for women AND men, gold for marriage, gold for children born (அண்ணா சீர், மாமா சீர்), unemployment allowance to his core voters...
No doubt #Surya and #Mukthar have been highly abusive, and cases may be filed under the appropriate legal provisions (e.g., #BNS 79, 356, 352: defamation, insulting women modesty, false allegations etc.). The misuse of the #GoondasAct for this continues to be a matter of concern.
கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தை பா*யல் கொ* சம்பவத்திற்கு, முதலமைச்சர் விஜய் வருத்தப்பட்டார் - அமைச்சர் குமார்
#CMVijay | #RKumar#Gummidipoondi | #PolimerNews
Govt agencies pushed FCI to drop its own ‘anti-monopoly’ safeguard from silo contracts. In the round that followed, Adani won all the contracts.
@SavyasachiAstha reports: https://t.co/hQjS8Ma2Gq
🚨For over a year, I've worked with a small team of researchers to clinically document evidence of the role Big Tech platforms play in encouraging Hindutva Pop music.
We found a total of *523 SONGS*, encouraging violence against Muslims, stoking hate. YouTube, Meta, Apple and Spotify, were all found complicit in not just amplifying but even *funding* these songs. #HPop
For @csohate@raqib_naik
தான் பெண்களுக்கு அண்ணன், குழந்தைகளுக்கு மாமா என்று சொல்லி ஓட்டு கேட்டு அரியணை ஏறியவர் இந்த கொடுமைகளைக் கண்டு எப்படி அமைதியாக இருக்கிறார்!
So far, the CM's silence has
been more deafening than the wails of the grieving families, says TOI
With over 5 #POCSO incidents reported in a single day and farmers protesting, the @CMOTamilnadu s'd at least reassure the public with a clear msg.Instead,hez preoccupied taking pictures with film personalities,precisely the kind of conduct we condemned when #DMK did it. #TVK
குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு ஆட்சியிலும் இதே நிலையை பார்க்கிறோம். ஆளும் கட்சிகள் கையை பிசைந்து நிற்கின்றன அல்லது கடந்து செல்கின்றன. எதிர்கட்சிகள் இந்த வன்முறையை தேர்தல் காலத்தில் பிரச்சனையாக மாற்றி தமது ஓட்டு வேட்டையை நடத்துகிறார்கள்.
அதிமுக-திமுக-தற்போது தவெக என அனைத்து கட்சிகளின் ஆட்சியின் காலத்தில் இவை நடக்கின்றன. கடந்த 2025 செப்டம்பர் காலம் வரையில் கிட்டதட்ட 4967 போக்ஸோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு காவல்துறை FIR, chargesheetஉள்ளிட்டவற்றில் காட்டும் தாமதம் இத்தகைய தாமதத்தை கொடுக்கிறது. இது குற்றவாளிகளுக்கு ஏதோ ஒருவகையில் துணிச்சலை கொடுக்கிறது.
குழந்தைகள் மீதான வன்முறைக்கு பலவேறு சமூக காரணிகளும் உள்ளன. இவற்றைக் குறித்து எந்த கட்சியும் அக்கறைக் கொள்வதில்லை. இந்த சிக்கலை வாக்குவங்கிக்கான பிரச்சார சிக்கலாகவே பயன்படுத்துகிறார்கள். 2026 தேர்தலில் இதை முன்னிலைப்படுத்திய தவெக தற்போது எவ்வித விளக்கமளிக்காமல் இருக்கிறது. அப்படியெனில் இந்த சிக்கலின் மூலவேர் எது என கண்டறிவதில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என அர்த்தமாகிறது.
முதல்வர் இந்த குழந்தையின் மீதான வன்முறை குறித்து வருத்தத்தையும், கண்டனத்தையும் இதுவரை பதிவு செய்யவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை தேர்தல் பிரச்சனையாக பேசிய கட்சிகள் சமூகத்திலிருக்கும் காரணிகளை குறித்தும் பேசி இருந்தால் தீர்வை எட்டி இருக்கலாம்.
வன்முறையில் பலியானவர்கள் நம் குழந்தைகள். நம்மை நம்பி இப்பூவுலகில் அடியெடுத்து வைத்தவர்கள். இவர்கள் மீதான வன்முறைக்கு நீதி கிடைக்கவில்லையெனில் நம் சனநாயகம் வாழ்ந்தென்ன பயன்.
குவிந்துகிடக்கும் வழக்குகள் குறித்தும், அதிகரித்து வரும் வன்முறை குறித்தும் தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் வெளிப்படையாக பேசவேண்டும்..
My thread on #SingappenSpecialForce got pushback saying, 'This is a prevention initiative, not a prosecution one.' As if I don't know that!
Then let us measure it as one. A rigorous effectiveness framework requires defining the right metric, establishing a baseline & being honest about when evidence can realistically appear. 1/10
மனம் பதறுகிறது!
சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சொல்லொணாத் துயத்திற்கு ஆளாக்கி இருப்பதோடு இது, இச்சமூகம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கான அச்சுறுத்தலாகவும் இருப்பது பெரும் கவலையளிக்கிறது.
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் சமீபத்திய தரவுகள் 69 சதவீத குழந்தைகள் உடல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர் என்றும், அதில் 48.7 சதவீதம் குடும்ப உறுப்பினர்களாலும், 34 சதவீதம் பிறராலும் நிகழ்த்தப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், இந்தியாவில் 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 96 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக 'Child Rights and You' அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் நிலையில், காவல்துறையின் மெத்தனமான விசாரணை, குற்றவாளிகளுக்கு எளிதில் பிணை கிடைப்பது மற்றும் வழக்குகளின் நீண்டகால தாமதம் போன்றவை தொடர் குற்றங்கள் நிகழ்வதற்கு வழிவகுக்கின்றன. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை உறுதி செய்யவும்,
தவெக @TVKVijayHQ
தலைமையிலான தமிழக அரசு @CMOTamilnadu உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
1.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கான சமூகக் காரணிகளைக் கண்டறிய, இத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகளைக் காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும்.
2.‘சிங்கப்பெண்’ திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களின் அதிகார வரம்பு மற்றும் செயல்பாட்டு பொறுப்புகள் குறித்து அண்மையில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த வேண்டும்.
3.பெண்கள் &குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும்.
4. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாடு, இணைய வழி பாலியல் சுரண்டல், இணைய மிரட்டல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ச்சியான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
5.பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல், குழந்தை நட்பு விசாரணை மையங்கள் (Child-Friendly Investigation Centres) மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும்.
6.பாலியல் வன்முறைகளைத் தடுக்க பள்ளி நிலை முதலே "மரியாதையான உறவுகள்" (Respectful Relationships), சமத்துவம், சம்மதம் (Consent), பாலின மரியாதை மற்றும் வன்முறையற்ற உறவுகள் குறித்த கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் இதற்காக செயல்படுத்தப்படும் Respectful Relationships Education போன்ற திட்டங்கள் பள்ளி சூழலில் பாலின மரியாதை மற்றும் வன்முறைத் தடுப்பு கல்வியை வலுப்படுத்துகின்றன.
கல்வி, சமூக மாற்றம், தொழில்நுட்ப கண்காணிப்பு, மனநல ஆதரவு, விரைவு நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித கண்ணியத்துடன் மறுவாழ்வு வழங்கும் ஒருங்கிணைந்த அரசுக் கொள்கை அவசியம். உலகின் பல நாடுகள் குற்றத்திற்குப் பிந்தைய தண்டனையை மட்டுமல்ல, குற்றம் நடைபெறாத சூழலை உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வெற்றி கண்டுள்ளன. தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.
@Neelam_Culture
தமிழ்நாட்டில் இன்று மாலை வரை ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பா*லியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது
1. கும்மிடிப்பூண்டியில்
3 வயது குழந்தை
பா*லியல் வன்கொடுமை, கொலை - ஒருவர் கைது
2. திருவள்ளூர் மாவட்டத்தில்
7 வயது சிறுமி
பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது
3. சென்னையில்
12 வயது சிறுமிக்கு
பா*லியல் சீண்டல் - ஒருவர் கைது
4. தாம்பரத்தில்
10 வயது சிறுமி
பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது
5. பூந்தமல்லியில்
7 வயது சிறுமி
பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது
நாளுக்கு நாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறி வருகிறது தமிழ்நாட்டில்
Vijay’s victory was shaped by a combination of the politics of perception, identity and image. It was the result of a carefully constructed narrative, backed by an intensely loyal fan base and an emotionally connected audience that genuinely believed in him and trusted him to bring about change.
@sujajourno writes: https://t.co/xuYs9YSXP1
#TVKVijay
Read a story in the morning that TN govt is trying to have new low risk classification and export more firecrackers. Instead of moving poor people out of this industry!
Feudalism beyond the farmland: Dalits in Sivakasi's firecracker units | https://t.co/KTkjYj9Liw