மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் @mkstalin பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க.
இந்தியா திரும்பும் செலவை இரு அரசுகளும் ஏற்கும் என்றாலும், உக்ரைனில் மறுபடியும் தங்கிப்படிக்கும் சூழல் உருவானபின் அங்கு திரும்பிச்செல்லும் செலவை யார் செய்வது என்பதே நடுத்தர மாணவர்களின் கேள்வி. ஆக இவ்விரு அரசுகளும் இந்தச் செலவையும் ஏற்க வேண்டுமென்று மநீம கேட்டுக்கொள்கிறது.
உக்ரைன் போர் சூழலை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் இந்திய மாணவர்கள் பட்ட சிரமம் வருத்தத்திற்குரியது. இப்பொழுதேனும் மீட்பு நடவடிக்கையில் அவர்களின் பயணச் செலவை மத்திய, மாநில(தமிழக) அரசுகள் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம் மற்றும் ஊடக பலத்தை வைத்துள்ள கட்சிகளை எதிர்த்துப் போராடும் மய்யத்தின் நேர்மை அரசியல் தொடரும்!
- தலைவர் கமல் ஹாசன்
#KamalHaasan#MakkalNeedhiMaiam
கோவையில் வாக்காளர்களுக்குப் பணம், அண்டா, ஹாட் பாக்ஸ், வெள்ளிக் கொலுசு (அதுவும் அசல் ‘கழக’ தயாரிப்பு) என ஜனநாயகம் கேலிக்கூத்தாகியுள்ளதை ஊடகங்களும், எங்களைப் போன்ற மாற்றுக்கட்சிகளும் அம்பலப்படுத்தியும் பலனில்லை. நடவடிக்கை எடுக்கக் கோரி இன்றும் புகாரளித்துள்ளோம்.
கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
இன்று காலை விசாலாட்சி தோட்டத்தில் தலைவர் @ikamalhaasan அவர்கள் மய்ய வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்த அப்பகுதி மக்கள் தலைவரை பேராதரவுடன் வரவேற்றனர்.
#தேடி_தீர்ப்போம்_வா
தன் இசையால் மொழிகளைக் கடந்து இதயங்களை தன்வசப்படுத்தியவர் இசைக் குயில் லதா மங்கேஷ்கர். கேட்கும்தோறும் நினைவடுக்குகளில் உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களைக் காற்றில் கலந்துவிட்டுச் சென்றிருக்கிறார். (1/2)
இன்று (06.02.2022) மதியம் 2.00 மணியளவில் தலைவர் @ikamalhaasan அவர்கள் நமது ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்க உள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் உங்களுள் ஒருவர் என்பதும் உங்களுக்கான ஒருவர் என்பதும் இவர்களின் தனித்தகுதிகள். தகுதி மிக்க இவர்களை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை.
மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, இயற்கைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகத் தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களின் 5-ஆவது கட்ட பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள். திறமைக்கு வாய்ப்பளியுங்கள்.
ஒருபுறம் இந்தியை மூன்றாவது மொழியாக அனைவரும் படிக்க வேண்டும் என்கின்ற அறிவிப்பு,
மறுபுறம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் என்பது கூட தெரியாத ரிசர்வ் வங்கி அதிகாரிகள்.
மீண்டும் ஒரு மொழிப்போருக்கு இவர்களே முன்மொழிகிறார்களோ?
விபரீத விளையாட்டு
வேண்டாம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கான உரிமையை உறுதிப்படுத்தியபோதே
நமக்கான பொறுப்புகளையும் உணரச் செய்த இந்த குடியரசு நாளை பொறுப்போடும், பெருமிதத்தோடும் கொண்டாடுவோம்💐
தமிழ் மொழி மீது அளவில்லா பற்று கொண்டதால் தங்கள் வாழ்வையே இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அர்பணித்த மொழிப்போர் தியாகிகளை வணங்கி நினைவு கூர்வோம். தமிழ் மொழியின் உரிமையை, பெருமையை நிலைநாட்டும் பணிகளைத் தொடர்வோம்.
பத்மபூஷண் விருது பெறும் தமிழரான டாடா குழுமத்தின் சேர்மன் நடராஜன் சந்திரசேகரன், தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் கூகிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கும் (1/3)
இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம். நாம்தான் இதன் பாதுகாவலர்கள் என்பதை உணர்வோம். அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் சுதந்திரத்தின், அதிகாரத்தின், உரிமைகளின் உண்மையான மதிப்பை அறிந்து ஒற்றுமையுடன் கடமையாற்றுவோம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.