அம்பத்தூர் பொதுக்கூட்டத்தில்..
தலைவர் தளபதி @TVKVijayHQ அவர்களின் அரசியல் பார்வையின் துணையுடன், பொது செயலாளர் @BussyAnand அண்ணா அவர்களின் முன்னிலையில்!
என் நெருங்கிய நண்பர், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்
திரு.அம்பத்தூர் G.பாலமுருகன் பற்றி
பெருமையுடன் சில வார்த்தைகள்!
#TVKForTN
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் @imrajmohan அவர்களுடன்
எழும்பூர் தொகுதியில் கொடியேற்றி, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஒரு சிறப்புமிக்க நிகழ்வு...
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் #தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் @imrajmohan அவர்களுடன்
எழும்பூர் தொகுதியில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம்.
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் தளபதி அவர்களின் பிறந்தநாள் அன்று,
வில்லிவாக்கம் அங்காளம்மன் கோவில் -இல் தளபதி அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து சிறப்பு பூஜை நடைபெற்று ஒரு மங்களகரமான தொடக்கம்!
@CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay@BussyAnand#HBDCMJosephVijay
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லிகா மகாலில் நடைபெற்றுவரும் Mega Expo கண்காட்சியை இன்று குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தேன்.
தமிழக முதலமைச்சரும், கழகத் தலைவருமான உயர்திரு. C. ஜோசப் விஜய் அண்ணா அவர்களின் ஆணைக்கிணங்கவும், மாநில பொதுச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. N. ஆனந்த் MLA அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,
சென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர் உயர்திரு. SKM. பூக்கடை குமார் @PookadaiKumar அவர்களுடன் இணைந்து குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
– G. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
@CMOTamilnadu@arunraajkg@BussyAnand@LoyolaMani@TVKVijayHQ@imrajmohan@AadhavArjuna@TVKVijayCadres@NanjilPSampath@VigneshTvkCbe@tvkvijaysabari@TVKVijayCadres@LoyolaMani@CTR_Nirmalkumar@RameshOffcl
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லிகா மஹாலில் நடைபெற்றுவரும் Mega Expo கண்காட்சியை இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தேன்.
தமிழக முதலமைச்சரும் கழகத் தலைவருமான உயர்திரு. C. ஜோசப்விஜய் அண்ணா அவர்களின் ஆணைக்கிணங்கவும், மாநில பொதுச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. N. ஆனந்த் MLA அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,
சென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. SKM. பூக்கடை குமார் @PookadaiKumar அவர்களுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
தொடர்ந்து, கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
– G. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
@CMOTamilnadu@arunraajkg@BussyAnand@LoyolaMani@TVKVijayHQ@imrajmohan@AadhavArjuna@TVKVijayCadres@NanjilPSampath@VigneshTvkCbe@tvkvijaysabari@TVKVijayCadres@LoyolaMani@CTR_Nirmalkumar@RameshOffcl
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam
மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
#TVKVijayHQ#TVK#TVKForTN
இன்று நமது கொள்கைத் தலைவர்களில் ஒருவரும், மக்கள் நலப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
@TVKVijayHQ@BussyAnand@AadhavArjuna#TVKVijay
சற்றுமுன், கழகத்தின் பொதுச்செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. N.ஆனந்த் அண்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றேன்.
மேலும், நண்பர் K.V. தாமு அவர்களின் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி..!
#TVK#தமிழகவெற்றிக்கழகம்#தளபதிவிஜய்#TVKVijay
இன்று..!
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சென்னை மத்திய மாவட்டத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் & எழும்பூர் தொகுதியிலுள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற பொதுமக்கள் உணவு வழங்கும் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
@TVKVijayHQ@BussyAnand@AadhavArjuna@imrajmohan#TVKVijay#TVKGovt
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.
எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?. நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர்.
மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?. திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது.
இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர்.
நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும்,
அளக்கமுடியாத ஆழ்கடல் - விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று.
நேர்மையின் நெருப்புக்கோளம் - மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் - ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று.
இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்?.
பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்?.
மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான்.
எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை
‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை.
இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது. அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி.
பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்.
ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் – லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
வாகை சூடுவோம்.
வரலாறு படைப்போம்.
வெற்றி நிச்சயம்..
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (20.04.2026, திங்கள்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்திலும் சென்னையிலும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பஞ்செட்டியில் முற்பகல் 11.30 மணி முதல், வெற்றித் தலைவர் அவர்கள் வாகனப் பிரசாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிற்பகல் 3 மணி முதல் வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதி வழியாக வாகனப் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள புது நகர், சி.கே. நாயுடு தெரு, ரங்கப்பா தெரு, ராமநாதன் தெரு, ரங்கய்யா தெரு மற்றும் பழனியப்பா தெரு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம். தொடர்ந்து, இரவு நடைபெற்ற தெருமுனை பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோம்.
வில்லிவாக்கத்தில் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத அளவிற்கு சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது; தெருக்களில் தெரு விளக்கு இல்லை. ஆனால், ஒவ்வொரு தெருக்களிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. நாளைய நம்பிக்கை தலைமுறையைப் போதைக்கு அடிமையாக்கி முடக்குகிறார்கள்; பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
இவ்வாறு, மக்களை எப்போதும் அச்சத்திலும் ஏழ்மையிலும் வைத்து அரசியல் செய்துவந்த சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். ''தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஜெயித்துவிடலாம்" என்ற அவர்களின் அதிகார ஆணவத்திற்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
உண்மையாக மக்கள் நலனில் அக்கறைகொண்ட வெற்றித் தலைவர் அவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைக்க மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். 'வில்லிவாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளரான என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எப்போதும் காப்பேன்' என்று வாக்குறுதி அளித்தேன்.
விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்!
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!!
நம்மால் முடியும்!!!
1/3