@officialepfo keeps on getting this message, can't be able to view the passbook and withdrawal also not working. FYKI I don't have a problem with login using my aadhaar linked mobile number.
Personally ஏதோ இழந்த மாதிரி ஒரு உணர்வு. Not able to accept it. Blind Support பண்றவங்ககிட்ட எல்லாம் argue பண்றேன். தூக்கம் வரவே இல்ல..நாம மட்டும் தான் இப்படி இருக்கோமா.. நாட்கள் நகரும்போது மாறுதா பாக்கலாம்.
திமுக தோற்றதுக்கு எல்லாரும் சோசியல் மீடியா காரணங்களை சொல்லி முடிச்சிட்டோம்.
மிகவும் முக்கியமான சில காரணங்கள் இருக்கு. அவை பற்றி பேசாமலே கடந்து போக முடியாது.
Anti-incumbency. அதை அலையாக மாற்றி இருக்காங்க.
10 வருஷம் ஆட்சிக்கு வந்தவுடன் தொண்டர்களை மறந்தது. தொண்டர்களை பலரும் கவனிக்க வில்லை. விளைவு - பல தொண்டர்கள் விக்ரதி. மேல இருந்து எந்த அடிப்படை உதவியும் கவனிப்பும் இல்லை. உள்ளாட்சிகளில் தேர்ந்து எடுக்கப்பட்ட பலரும் இதனால் கண்ட இடங்களில் கை நீட்ட துவங்கினர். இது மக்களை பல இடங்களில் எரிச்சல் ஆக்கியது.
பல அமைச்சர்கள் echo chamber குழுக்களுக்கு செல்ல துவங்கினர். குறிப்பாக @ptrmadurai அவர்கள், இதுவரை 6 முறை ஊருக்கு வந்தபோதும், வருவதற்கு முன்னரும் அவருடைய அலுவலகம், PA என்று அனைவர் மூலமும் சந்திக்க முயற்சி செய்தேன். ஏன் அவர் மொபைல் எண்ணுக்கு பல முறை மெசேஜ் செய்தும் இன்று வரை அவரை பார்க்கவே முடியல. ஆனா மதன் கௌரி கல்யாணத்துக்கு போயிட்டு இருந்தார். Accessibility is the basic key to people's favor in politics. Unfortunately PTR completely lost it. இத்தனைக்கும் அவர் நடத்தும் பல்வேறு குழுக்களில் இருந்திருக்கேன். ஒரு கட்டத்தில் வெறுத்து போயிட்டேன். என்னை போன்ற பலருக்கும், பல்வேறு ஆராய்ச்சியாளர்களுக்கும் எட்டாத உயரத்தில் இருந்தார். Umagine TN போன்ற IT conference ல influencer களை கவனித்து கொண்டு இருந்தார். மற்றவர்களை அது தெரியுமா, இது தெரியுமா என்று கேட்டவர் இதை ஏன் மறந்தார்.
கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளிலும் வாயை வைத்து நாசமாக்கிய பெருமை ஒருவரை சாரும் என்றால் அது உதயச்சந்திரன் IAS. நான் ரொம்ப நல்லவன், யாரும் என்னை பார்க்காதீங்க என்று சொந்தக்காரர்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டவர், தன்னுடைய ஆசி பெற்ற ஆட்களுக்கு என்னவெல்லாம் செய்தார் என்று அனைவருக்கும் தெரியும்.
PEN நிறுவனத்தில் வேலை பார்த்த mid level ஆட்களின் arrogance. என்னவோ defacto மினிஸ்டர் போலவே எதை சொன்னாலும் இதை நாங்க செய்றோம், இதையும் செய்றோம், அதையும் செய்றோம் என்று சொன்னது. எவனையும் எதையும் சொல்ல விட்டது இல்லை.
மிக முக்கியமான ஒன்று - கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் சுற்றி சுற்றி நாயுடு, ரெட்டி லாபிகளை ஆளவிட்டது. இதை பல்வேறு சமூக குழுக்களும் குறிப்பாக வன்னியர் ஆட்களும், முதலியார் ஆட்களும் வெறுத்தார்கள்.
எங்க மாவட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் காந்தி மாவட்ட செயலாளர் - நாயுடு. முழுக்க முழுக்க நாயுடுகளை மட்டுமே பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் ஆக வைத்து இருந்தார். எங்கள் ஒன்றிய செயலாளர் யார் என்றால் ஆற்காடு வீராசாமி அவர்களின் தம்பி மகன். எப்படியும் அடுத்த 10 வருடத்தில் MLAக்கு நிற்க வைக்கப்படுவான். 2013இல் அவரின் அப்பா சீனிவாசன் சாகும்வரை அவர் தான் ஒன்றிய செயலாளர். யார் சொன்னாலும் கேட்க மாட்டார், மற்ற சமூகங்கள் முட்டி மோதி அதிமுக பக்கம் போய்விட்டது. முதலியார், வன்னியர் அதிகம் இருக்க ஊரில் நாயுடுக்களே ஆட்சி செய்தால் எப்படி.
சரி, எங்க ஊரு கலவை. அந்த கதையை எடுத்துக்கொண்டாலும் எங்கிருந்தோ வந்த சேது ரவி என்னும் நபருக்கு நகர செயலாளர் கொடுத்து 15 வருஷமாக வைத்து இருக்காங்க. 2022இல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை பேரூராட்சியை கைப்பற்றவே முடியல. ஒரே காரணம் - எங்கிருந்தோ வந்தவனை எங்க ஊருக்கு தலைவர் ஆக்குறதா என்று அதிமுகவை உட்காரவைத்து இருக்காங்க.
2026 தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுகுமார். 2024 தேர்தல் முடிந்தவுடன் வேலை செய்ய இறங்கியவர். இன்ஸ்டாகிராம் லோக்கல் ஆட்களை பிடித்து 1.5 கோடி இரண்டு வருடங்களில் செலவு செய்து தொடர்ச்சியாக organic reach செய்து வெற்றி பெற்று இருக்கார்..திமுக வேட்பாளர் ஈஸ்வரப்பன் தேர்தலுக்கு 25 நாள் முன்னரே இன்ஸ்டாகிராம்ல அக்கவுண்ட் Open பண்ணார். இதெல்லாம் விளங்கவா.
இதை எல்லாம் சொன்னாலும் தலைமைக்கு கேட்குமா என்று தெரியாது. கேட்டால் நலம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தனியா சண்ட செய்வோம் 2031ல் தோக்குறோமா மறுபடியும் 2036ல் சண்ட செய்வோம். ஆனால் ஒருபோதும் என் கழகத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். உயிருள்ளவரை தலைவர் கலைஞரின் தொண்டன்🖤❤
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.