பிறந்த மண்ணில்
அடக்கம் செய்யப்பட்டார்
பாரதிராஜா
83 ஆண்டுகளுக்கு முன்னே
தமிழர்கள் பெற்ற
ஒரு புதையலைக்
குழிதோண்டி மீண்டும்
புதைத்துவிட்டோம் பூமிக்குள்
மேற்குத்தொடர்ச்சி மலைகளே
கள்ளிக்காடே கரடே நதியே
பச்சைத் தாவரங்களே
பாடும் பறவைகளே
வைகை அணைமீது மோதும்
வருசநாட்டுக் காற்றே
உங்கள் மகனை
உங்கள் மடியில்
ஒப்படைத்துவிட்டோம்
உடைந்த சொற்களின்
கதறல்கள்,
வட்டார வழக்கில் புலம்பல்கள்,
கண்ணாடிப் பெட்டியைக்
கட்டிக் கொண்டு
கண்ணீர் விட்ட மாதரார்,
ஒப்பாரியில் தாலாட்டுப் பாடியே
தங்கள் மகனைத்
தூங்க வைத்துவிட்டார்கள்
தாய்மார்கள்
நாங்கள் யாரும்
கோரிக்கை வைக்காமலே
அரசு மரியாதையளித்த
தமிழ்நாட்டு முதலமைச்சர்
விஜய் அவர்களுக்கு
எங்கள் மண்ணின் நன்றி
துணையிருந்த தோழர்களை
என்னால் மறக்க முடியாது
மாண்புமிகு அமைச்சர்கள்
நிர்மல் குமார், வன்னியரசு
ஆட்சியர் வைத்தியநாதன்,
காவல்துறை டி.ஐ.ஜி சசிமோகன்,
கண்காணிப்பாளர் சினேகப்பிரியா,
செந்தமிழன் சீமான்
மற்றும்
காலம் தூரம் பாராமல் ஓடிவந்த
கலைக் குடும்பத்தார்
அனைத்துக் கட்சித் தலைவர்கள்
இந்நாள் முன்னாள்
நாடாளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்கள்
சந்திரசேகர் ஐ.பி.எஸ்
சிவனாண்டி ஐ.பி.எஸ்
ராஜரத்தினம் ஐ.ஏ.எஸ்
தொழிலதிபர் வணங்காமுடி,
வெற்றி திரையரங்குகளின்
உரிமையாளர்
மதுரை ஐ.வெற்றிவேல்,
கல்வியாளர்
திண்டுக்கல் ரத்தினம்,
வசந்தபவன் ரவி,
பொறியாளர் பழனியப்பன்
போன்ற
நட்பு வட்டாரங்களுக்கும்
வெற்றித் தமிழர் பேரவை
உறவுகளுக்கும் நன்றி
அஞ்சலியில் விழுந்த
ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும்
நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்
இறுதி மரியாதையை
ராஜ மரியாதையாக்கிய
காவல் துறைக்கு
ஒரு கைகூப்பு
ஊடக நண்பர்கள்
அத்துணை பேருக்கும்
எங்கள் தலை வணக்கம்
ஓய்வுகொள் இமயமே!
உன் அடக்கம் முடிந்த
அதே தருணம்
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப் பக்கம் வீசிச்
சிறு தூறலிட்டுச் சென்றது
ஏன் தெரியுமா?
உன் குழியில் தள்ளப்பட்ட
பச்சை மண்ணிலிருந்து
உனக்கு
மண்வாசனை வீசத்தான்
#பாரதிராஜா | #Bharathiraja
'சென்னை சூப்பர் கிங்ஸ்' @ChennaiIPL அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) திரு. காசி விஸ்வநாதன் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் நேற்று (10.06.2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
திரு பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது. தமிழ்த் திரையுலகை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரைப்படத்துறையில் உச்சத்தைத் தொட்ட ஓர் ஆளுமையாகத் திகழ்ந்தார். குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் போற்றத்தக்கது. துயரமான இந்த வேளையில், எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.