அனைவரையும் நேசி, ஆனால் சிலரை மட்டும் நம்பு, ஒருவரை பின்பற்று ஆனால் ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள். தமிழ் தேசியவாதி 💙 #BelongsToTamilianStock#Programmer
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர் வெண்ணிலா தாயுமானவன் அவர்கள் தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்திருந்த வழக்கில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட CRZ அனுமதியை எதிர்த்து வெண்ணிலா தாயுமானவன் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று 19.06.2026 இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை முன்னெடுக்கிறதா அல்லது கை விடுகிறதா என்று தெரிவிக்க வேண்டும் என அவர் தரப்பில் நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறையின் செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பா. விக்னேஷ் அவர்கள் வாதிட்டார். CRZ அனுமதி வழங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் இத்திட்டத்திற்கானக் கட்டுமானங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் தமிழ்நாடு அரசு திட்டத்தை கைவிடுமானால் வழக்கை முடித்து வைக்கலாம் என்றும், இதுகுறித்து பதிலளிக்கவும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசும்பொழுது நீதியரசர் புஷ்பா சத்தியநாராயணன் அவர்கள் நினைவு சின்னங்கள் அமைப்பதில் தவறு இல்லை, அதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் கடலுக்குள் வைப்பது ஏன்? பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தான் செயல்பட முடியும் என்றும் கூறினார்.
இவ்வழக்கு 28.07.2026 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாயை திறங்க CM சார் :
AMCA தொழில் ஆந்திராவிற்கு செல்கிறது.
adidas உற்பத்தி ஆலை அதுவும் ஆந்திரா செல்கிறது..
royal enfield முதலீடு அதுவும் ஆந்திரா செல்கிறது... அது எப்படி கீர்த்தனா அமைச்சராக ஆனதும் எல்லாம் சொல்லி வைத்தது போல் ஆந்திரா செல்கிறது? இது சாதாரண விசயம் தானே என நினைத்தால் - அனைவருக்கும் சின்ன ஒரு விளக்கம்...
போர் விமானங்கள் செய்வதற்கான Advanced Medium Combat Aircraft (AMCA) தொழில்சாலை அமைவதற்கு கடந்த 3 ஆண்டுகள் மேல் தமிழக அரசு - நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான DRDO உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஏறக்குறைய தமிழகம் தான் வரும் அந்த தொழில்சாலை என்று இருந்த நிலையில் இன்று எந்த அடிபட்டையில் ஆந்திரா சென்றது என்பதை விரிவாக மக்களுக்கு விஜய் தெரிவிக்க வேண்டும்.
இது வெறு 19,000 கோடி முதலீடு மட்டும் அல்ல இது அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் சுமார் 1,00,000 கோடி வரை முதலீட்டை ஈர்க்க வல்லது... இதனால் தான் தமிழக அரசு இந்த AMCA விமான உற்பத்தி தொடங்குவதற்கு சுமார் 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுக்க முன்வந்தது.. அது மட்டும் அல்ல இந்த விமானங்களின் பரிசோதனை அவசர தேவைக்கு தகுந்து சுமார் 3.5 கிமி தொலைவிற்கான விமான ஓடுதளமும் ஓசூரில் தமிழக அரசு சரியாக அமைத்து கொடுக்க தயார் நிலையில் இருந்தது. இப்படி அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த போது எப்படி திடீர் என அந்த தொழில் சாலை ஆந்திரா சென்றது? கீர்த்தனாவின் ஆந்திரா தொடர்பு அப்படியா? அதற்கான ரகசியங்களை கீர்த்தனா கசியவிட்டாரா? எப்படி சென்றது பதில் சொல்லுங்கள்..
இந்த தொழில் சாலை அமைவதற்கு ஆந்திரா அரசிடம் விமான ஓடுதளத்திற்கு தேவையான இடமே இல்லை... இனி தான் அதை கையகப்படுத்த போகிறது... ஆனால் அனைத்தும் முடித்து கொடுக்கும் நிலையில் இருந்த தமிழகத்தை விட்டு அது செல்ல ஒரே காரணம் அமைச்சர் கீர்த்தனா தரப்பும் - ஆந்திரா முதல்வர் மகன் லோக்கேஷ் தரப்பும் இடையே இருக்கும் தொடர்பா என்ற சந்தேகம் எழுகிற்து!
கீர்த்தனாவிற்கு ஆதவாக ஆந்திராவில் இருந்து லோகேஷ் கொடுப்பதும்... கீச்த்தனா அமைச்சர் நெருங்கிய உதவியாளராக இருக்கும் ரவி தேஜா என்ற நபர் முழுக்க ஆந்திராவில் லோகேஷ் தரப்பிற்கு வேலை செய்தவர்கள் என்பதும்... தற்போது வெளியாவது இன்னும் சந்தேகத்தை வழுவாக எழுப்புகிறது... ரவி தேஜா என்பவனுக்கு தமிழ் மொழியே தெரியாது. இவர்கள் தமிழகத்தின் தொழில் துறை அமைச்சகத்தை கொடுத்த விஜய் என்ன மிச்சர் சாப்பிடுகிறாரா?
இந்தியாவின் விமான தயாரிப்பும் சார்ந்த முக்கியமான தலைமை அமைப்பான Aeronautical Development Agency (ADA) இருப்பது சரியாக ஓசூர் நகரில் இருந்து 30கிமி தூரத்தில். இதனால் தான் AMCA தொழில் சாலை தமிழகத்தில் ஓசூர் பகுதி சிறந்ததாக கருதப்பட்டது... இருந்த போதும் விஜய் பதவி ஏற்ற சில நாட்களில் அது ஆந்திராவிற்கு சென்றுவிடுகிறது...
கீர்த்தனா உதவியாளர் அனைவரும் ஆந்திராவின் தொடர்பில் இருப்பதும் - கீர்த்தனாவே ஆந்திராவில் அந்த முதல்வர் மகனுக்கு வேலை செய்தவர் என்பது தான் காரணம் இந்த AMCA தொழில்சாலை ரகசியம் கசிவதற்கு என்ற குற்றச்சாட்டிற்கு விஜய் பதில் என்ன?
இது சாதாரணமாக தொழில்சாலை இல்லை... சுமார் 8,000 இளைஞர்களுக்கு அதுவும் ஆராய்ச்சி சார்ந்த விசாயங்களில் ஈடுபட விரும்பும் நம் இளைஞர்களுக்கு பெரும் சொத்தாகவும் அத்தோடு இதனை சுற்று சிறு குறு தொழில்கள் என பெரும் முதலீட்டை கொண்டு வர கூடிய அற்புதமான வாய்ப்பை இன்று இழந்து நிற்பதற்கு கீர்த்தனா & co ஆந்திரா பாசம் தான் காரணம். அமைச்சரவையில் இருந்து கொண்டு கீர்த்தனா அடிக்கடி protocol மீறி செல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.
precision machining சார்ந்த தொழில்கள்
composites சார்ந்த தொழில்கள்
electronics சார்ந்த தொழில்கள்
avionics சார்ந்த தொழில்கள்
testing equipment சார்ந்த தொழில்கள் என பல 1000 தொழில்கள் இந்த ஒரே ஒரு முதலீடு வருவது மூலம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். இதை இன்று மொத்தமாக எந்த காரணமும் இல்லாமல் ஆந்திராவிடம் இழந்து நிற்கிறது தமிழகம். ஒரே காரணம் விஜய் அரசு மற்றும் கீர்த்தனா...
கீர்த்தனா மீது எழும் மேலும் சந்தேகம் என்னவென்றால் :
சென்றது இந்த ஒரு முதலீடு மட்டும் அல்ல... 1950 களில் தொடங்கி இன்று வரை royal enfield தொழில் சாலை தமிழகத்தில் தான் இருந்து வருகிறது. இன்னும் ஒரு படி மேல் சென்று சொல்வதென்றால் Made in madras என்று தான் அது அந்த தொழில்சாலையை கூறுவர். அப்படி ஒரு தொழில்சாலை இன்று சுமார் 3,000 கோடி மதிப்பீட்டிலான முதலீடும் ஆந்திரா சென்றுள்ளது. அதுவும் விஜய் அமைச்சர் கீர்த்தனா பொறுப்பு ஏற்றபின்.... இது எப்படி நடந்தது?
அதே போல் அடுத்த முதலீடு Hwaseung.. இது தான் உலக புகழ் பெற்ற adidas பிராண்ட் காலணிகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை. நமது ஆம்பூர் வேலூர் தரம் காரணமாக தமிழகதிற்கு வருவதாக இருந்த இந்த தொழில்சாலையும் சரியாக ஆந்திரா சென்றுள்ளது.... எப்படி எல்லாமே கீர்த்தனா வந்த பின் ஆந்திரா செல்கிறது?
வாயை திறங்க விஜய்.... வெக்கமாக இல்லை இப்படி தமிழக இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் தொழில்கள் ஆந்திராவிற்கு செல்வதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் மக்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க..
வாயை திறங்க CM சார் ...
#வாயை_திறங்க_CM
-மாரிதாஸ்
போலி மூனு நம்பர் இரண்டு நம்பர் லாட்டரி விற்பனை செய்த தவெக ஶ்ரீ வைண்குண்டம் MLA சரவணன் கும்பலின் கள்ள லாட்டரி தொடர்பும் - அதில் மார்டீன் லீமா ரோஸ் கும்பலின் நாகலாந்து Dream லாட்டரி தொடர்பு என்ன என்பதை விரிவாக கடந்த சில நாட்கள் முன் நான் வெளியிட்ட வீடியோவை தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி Remove செய்ய துணையாக நின்றுள்ளது விஜய் அரசு?!
இதில் இருந்தே தெளிவாக தெளிகிறது இந்த அரசு எந்த அளவுக்கு லாட்டரி மாபியா கும்பல் கட்டுப்பாட்டில் வைத்து ஆடுகிறார்கள் என்று...
ஆக ஶ்ரீ வைண்குண்டம் MLA சரவணன் சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி அதுவும் போலி லாட்டரி விற்பான் whatsapp குரூப் வச்சு... அதுவும் மார்டீன் குடும்பம் சம்மந்தப்பட்ட லாட்டரியை இங்கே தமிழகத்தில் விற்பனை செய்வான் - அதை கேள்வி கேட்டால் முடக்குவோம்? லாட்டரியால் இன்னும் எத்தனை குடும்பத்தை நாசம் செய்து ஓயும் இந்த மாபியா!
பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் |
நாம் தமிழர் கட்சி
’’இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’னு தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினார்.
இந்த ஒரு மாதத்துல அவர்கள் பண்ண சம்பவங்களின் தொகுப்பு இது!
#SofaModelGovt#TVKVijayFails#TVKFails
தமிழ்நாட்டுக்குள் உள் நுழைவு அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கான நேரமும் கட்டாயமும் வந்துவிட்டதாக கருதுகிறேன். வடகிழக்கு மாநிலங்களுக்கு எப்படி சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு அந்த அனுமதி அளிக்கப்படுகிறதோ அதேபோல தமிழ்நாடு உள்ளிட்ட அதை விரும்பக் கூடிய அத்தனை மாநிலங்களுக்கும் அதனை வழங்கி உள் நுழைவு அனுமதிச்சீட்டை பெறுவது கட்டாயம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
எண்ணற்ற இயக்குனர் உருவாக பாதை அமைத்து தந்த எங்கள் பிதாமகன்.. அலங்கரிக்கப்பட்ட முகங்களையும் அலங்கார வாழ்க்கைகளையும் அடையாளமாக கொண்ட தமிழ் சினிமாவில் எதார்த்த முகங்களையும் இயல்பான மக்களின் வாழ்க்கையும் பதிவு செய்து தமிழ் சினிமாவின் அடையாளத்தை மாற்றிய போராளி, படைப்பாளி, ஆசான், அய்யா, அப்பா, ஆளுமை, இமயம் உறைந்தது. பாரதிராஜா அவர்களின் தடையமின்றி தமிழ் சினிமா கிடையாது.. எதிர்காலத்திலும் ஒவ்வொரு தமிழ்சினிமாவின் படைப்புகளிலும் எங்கள் அய்யனின் ஆன்மா வாழும்..
#RIPTheGreatBharathiraaja
தமிழ்த்தேசிய இனத்தின் கலை அடையாளம்!
மண்ணின் மகத்தானப் படைப்பாளி!
இனமான உணர்வுகொண்ட பெருந்தமிழர்!
எங்கள் ஐயா பாரதிராஜா அவர்களுக்குப் புகழ் வணக்கம்!
காலங்கடந்து நிற்கும் உங்களது ஒப்பற்றப் படைப்புகளாலும், இனமானச் செயல்பாடுகளாலும் இரவா புகழ்கொண்டு தமிழர் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு வீற்றிருப்பீர்கள் ஐயா!