‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால்,
“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
@itsmehotshot@iParth_ Seriously, 98 rural employees motham enga district la oruthar Work stress thanaga mudiyama eranthuttaru
Naan lam iruntha pressure la suiside range ku feel panni irukken avvalavu Torture
@itsmehotshot@iParth_ 1 st point valid, enga RD office 32 peru vela pakkuranga nanga oru 2 peru mattum thaan DMK win pannanumnu nenachom matha ellarum against DMK enna avvalavu Torture from the Government
@ThameemMeem@Hotel_Dubakoor@mkstalin இதே தான் எங்களுக்கு நடந்தது 4 posting, எல்லாம் ADMK காரனுக்கு கொடுத்தானுங்க என் பக்கத்துவீட்டு ADMK காரன் posting அவன் பையனுக்கு வாங்கிட்டு எங்க அப்பாவ பாத்து ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சான் பாருங்க, எதுக்குடா இந்த கட்சியில மூனு தலைமுறையா இருக்கோம்னு இருந்துச்சி 😕😕
சாதரண ஒரு கூத்தாடியோடா டேன்ஸ்சயும் பன்ச் டயலாக்கையும் பாத்து ரசிகனா இருக்கதுக்காகவே இவ்வளவு விசுவாசம் காட்ற நாய்களுக்கு மத்தியில, 75 வருசமா இந்த மண்ணு,மக்கள்,மொழிக்கு போராடுன ஒரு இயக்கத்துக்கு விசுவாசமா இருப்பதில் எந்த தவறும் இல்ல. கலைஞர் ஸ்டாலினலாம் விட திமுக என்ற இயக்கம் பெருசு. 🖤❤️
* திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை 17 வயதுடைய நான்கு புள்ளீங்கோ பயல்கள் ஓடும் ரயிலில் அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் போட்டனர்.
* பிறகு அவர் அங்கிருந்து இறங்கி நடந்தபோது.. பின்தொடர்ந்தது.. தனியிடத்திற்கு கடத்தி சென்று கொடூரமாக வெட்டி வீழ்த்தி.. அதையும் வீடியோ எடுத்துள்ளனர்.
* இது தேசிய அளவில் செய்தியாக மாறியுள்ளது. பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
* 18 வயது கூட நிரம்பாத அரை டவுசர்கள் மனதில் இவ்வளவு வன்மவெறி ஏற..சமீபகாலமாக வரும் படங்களும் முக்கிய காரணம்.
* ரத்தம், துப்பாக்கி, கத்தி என படத்தின் போஸ்டர்களே ரத்தக்களறியாத்தான் இருக்கின்றன.
* படத்தில் போதை மருந்து கடத்தல், சாராய குத்துப்பாட்டு, ரத்தம் தெறிக்கும் வன்முறை, ஆபாச வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன.
* படம் முழுக்க இப்படியான காட்சிகளை வைத்துவிட்டு.. கடைசியில் drug free society, மயிரு free society என தத்துவம் பேசுவார்கள்.
* பல இயக்குனர்கள், ஹீரோக்கள் இப்படியான எழவெடுத்த குப்பைகளை வேண்டுமென்றே எடுக்கிறார்கள்.
* காரணம் கேட்டால் பழியை தூக்கி மக்கள் மீது போடுவார்கள். மக்கள் ரசிப்பதால் இப்படி எடுக்கிறார்களாம்.
* தக் லைஃப், கூலி போன்றவற்றை மக்கள் ஃப்ளாப் ஆக்கிவிட்டார்கள். ஆகவே இந்த genre ஐ நிறுத்தி விடுவீர்களா?
* வில்லன் செய்யும் அனைத்தையும் இப்போது ஹீரோ எனும் தடித்தாண்டவராயன்கள் செய்து வருகிறார்கள்.
* இந்த ரத்த மற்றும் கஞ்சா சாக்கடை படங்கள் எடுத்து Gen Z எனப்படும் தவிட்டு தற்குறிகளை.. வன்முறையை கொண்டாடும் கோமாளிகள் மற்றும் கொடூர அரக்கர்களாக மாற்றி வருகிறது தமிழ் மற்றும் இதர மாநில gangster படங்கள்.
* இதில் லோகேஷ் கனகராஜ் எனும் நபருக்கு முக்கிய பங்குண்டு.
* பல ஆண்டுகள் கழித்து ரஜினி படத்திற்கு A சான்றிதழ் வாங்க வைத்த பெருமை இவரையே சாரும். அதற்கு ரஜினியும் பொறுப்பு.
* தற்போது இந்த புண்ணியவான் ஹீரோவாக நடிக்கும் DC படத்தின் போஸ்டர் லட்சணத்தை பாருங்கள்.
* இயக்கம் அருண் மாதேஸ்வரனாம். ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல.
* நீங்கள் கோடிகளில் சம்பாதிக்க இளைஞர்கள் மத்தியில் இப்படி கொடூர வன்முறை மற்றும் போதை கலாச்சார காட்சிகளை தொடர்ந்து உங்கள் இருவரின் படங்களிலும் வைப்பது கேவலமாக இல்லையா?
* உங்கள் வீட்டில் ஒருவரை இப்படி நான்கு மைனர் பயல்கள் வெட்டி சாய்த்தால் எப்படி இருக்கும்? அந்த வடமாநில இளைஞரின் குடும்பத்தார் மனநிலையை ஒருநிமிடம் யோசித்து பாருங்கள்.
* சில ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து.. அனாதையாக வெட்டுப்பட்டு கிடக்கிறார். இனி இவரது குடும்பத்தின் நிலையென்ன?
* இந்த பாவத்தில் ஒரு பங்கு உங்களுக்கும் உண்டு. அது உங்களையும் ஒருநாள் துரத்தும்.
* ரத்த வெறி, போதை வெறி, ஆயுத வெறி படங்களை எடுக்கும் சினிமாக்காரர்கள் மற்றும் அதை பார்த்து கொண்டாடும் ஒருதரப்பு மக்களின் மனநிலை மாறாவிட்டால்.. இப்படியான சம்பவங்கள் தொடராது என உத்திரவாதமில்லை.
* தற்போது 17 வயதில் இருந்து.. அடுத்து 10 வயது சிறார்கள் மனதிலும் இந்த வன்முறை எண்ணம் ஊடுருவதை தடுக்க வேண்டிய பொறுப்பு திரைத்துறைக்கும் உண்டு.
* திருந்தாத கோடம்பாக்க கோமாளிகள் இனியாவது திருந்த வேண்டும்.
* சென்சார் நடைமுறைகள் இன்னும் கடுமையாக வேண்டும்.