பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத,
போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய,
குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற த.வெ.க. அரசைக் கண்டித்து
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது..
#AIADMK
பழனி கோவில் நில விவகாரத்தில் தவறு நடந்தது உண்மை என அமைச்சரே ஒப்புக் கொண்ட பிறகு,
அது தொடர்பாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரலாமே தவிர,
காவல்துறையிடம் புகார் அளித்து அவர்களை அடியாளாக பயன்படுத்தக் கூடாது.
-அஇஅதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர், எம்.பி @IInbadurai அவர்கள்.
ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்
என்று செயல்பட்ட கோயபல்ஸ்
என்றோ மறைந்துவிட்டான்.
ஆனால் அவனை நினைவுபடுத்துவதற்கென்றே பல கோயபல்ஸ்கள் இப்போது நம்மிடம் இருந்தே புறப்பட்டிருப்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
-கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் கழக சட்டமன்ற குழு கொறடா திரு.அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
#AIADMK
உச்ச நீதிமன்றம் காவிரி நதிநீர் தொடர்பாக இறுதித் தீர்ப்பு வழங்கி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்பு, மீண்டும் ஒரு நடுவர் மன்றம் கோரி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சனையில் அரசியல் புரிதலற்றுச் செயல்படும் பொய்க்கால் குதிரை அரசுக்கு அரசியல் பாடம் எடுத்த, சட்டசபை நாயகர், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
திறந்தவெளி கிடங்குகளில் மழை நீரில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு என்று ஒரு தனி மாண்பு உண்டு. “வரலாற்று சிறப்புமிக்க பேரவை” என்று பெருமையோடு நாம் சொல்லக்கூடிய அவையிலே இக்கூட்டத் தொடரில் நடைபெற்ற சம்பவங்கள் துளியும் மரபைக் காக்கும் வகையில் இல்லை.
மேகதாது என்ற ஜீவாதாரப் பிரச்சினையில் மிக அலட்சியமாக, எந்த விவாதமும் இல்லாமல் ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை இந்த பொய்க்கால் குதிரை அரசு நிறைவேற்றியிருப்பது, அவையின் செயல் விதிகளை குழிதோண்டிப் புதைக்கும் செயல்.
மாண்புமிகு அம்மா அவர்களின் முயற்சியால் காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டு, மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முயற்சியால் அமையப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையம் அமையப்பெற்று, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையான ஆணையமாக அது செயல்படும் நிலையில், இன்னொரு ஆணையம் என்பது இத்தனை ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் வெற்றியை நீர்த்துப் போகச் செய்து, கர்நாடக அரசின் சதி வலையில் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தள்ளும் செயலாகும்.
விவரம் தெரியாமல், விவசாயிகளின் வலிகள் புரியாமல் இன்றைய அரசு இப்படி ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது வரலாற்றுத் தவறு.
சட்டமன்ற உரைகள் என்பது பதிவில் ஏற்றக் கூடியது, வரலாற்றில் நிற்கக் கூடியது. அங்கே Diplomacy, Decency, Decorum தான் ஓங்கி நிற்க வேண்டும். ஆனால், நேற்றைய எதிர்க்கட்சித் தலைவர் உரை மற்றும் இன்றைய முதல்வரின் பதிலுரையில் Disrespecful Slander தான் முன்னே நின்றது.
“சி எம் சார்… இப்போ நீங்க உங்க ஆரஞ்சு கலர் வேன்-ல நின்னு பேசுறதா நினைச்சி, மனப்பாடம் பன்ன ஸ்கிரிப்டை ஒப்பிச்சி, Action பண்ணி காமிங்க” என்று உரையை எழுதிக் கொடுத்தவர் சொல்லிவிட்டார் போல… இன்றைய முதல்வரும் அப்படியே செய்துவிட்டார்.
அதிலும்,
எதிர்க்கட்சிகள் எழுப்பிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து என்ன விளக்கம் இருந்தது?
மின்வெட்டு குறித்து என்ன பதில் இருந்தது?
அமோனியா கேஸ் லீக் மரணங்கள் குறித்து என்ன பேசப்பட்டது?
ஒன்றுமே இல்லையே..!!
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எந்த ஒரு சிறுமிக்காகவும் இன்றைய முதல்வரின் மனம் பதறியதாக தெரியவில்லை. அவ்வளவு ஏன், கரூர் மரணங்களையே மிக எளிதாக கடந்து செல்கிறார். அதிலும், கரூர் மரணம் பற்றி பேசும் போது, தன் மீது பழி போடுவது “வேற லெவல்” என்ற வார்த்தையை சொல்கிறார் என்றால், நாம் எப்போதும் சொல்வோமே, “Narcissistic Behaviour” , அது இது தான்!
மேலும், சட்டப்பேரவையில் உறுப்பினராக அல்லாத ஒரு முன்னாள் முதல்வர் குறித்து, அவரது கட்சியினர் இல்லாத நேரத்தில் பேசுகிறார் என்றால், ஆளுங்கட்சி சபாநாயகர் அனுமதி அளிக்கிறார் என்பதற்காக ஒரு முதல்வர் தன் பொறுப்பின் தன்மை உணராமல் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் சில அமைச்சர்கள் பின்னால் ஒளிந்துகொள்ளும் இன்றைய முதல்வர், பனையூர் பங்களாவில் மனப்பாடம் செய்துவிட்டு வந்து கம்பு சுற்றும் போது மட்டும் யாரும் குறுக்கிடக் கூடாதா? அப்படி குறுக்கிட்டால், மனப்பாடம் செய்த டயலாக்கை மறந்துவிடுவாரா ?
Point of Order என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்திடம் தமிழ்நாடு சட்டமன்றம் மாட்டிக்கொண்டது தான் வேதனையின் உச்சம்.
இதில் ஒரு சைகை வேறு…
இதற்கு கைதட்ட ஒரு ரசிக வெறிக் கூட்டம்!
இது என்ன சட்டமன்றமா? சர்க்கஸ்ஸா?
அரசியலை ஏதோ Entertainment Platform போல கருதிக் கொண்டிருக்கும் ரீல்ஸ் முதல்வரே….
மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது Content அல்ல… Commitment!
மக்கள் பிரச்சனை பற்றி இனியாவது பேசுங்கள்!
(பி.கு. : அப்பா எங்க, மனைவி எங்க என்பதெல்லாம் மக்கள் பிரச்சனை அல்ல. மக்களுக்கு எது தேவையோ, அந்த அரசியலை மட்டுமே எந்நாளும் பேசுவோம்.)
ஆளுநர் உரை “கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்”.
புதிய திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். வெள்ளை அறிக்கையில் இருந்தது தான் ஆளுநர் உரையிலும் இருந்தது.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், அஇஅதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வருகை புரிந்தார்கள்.
#TNAssembly
அதிகரிக்கும் மின் வெட்டு! அவதியுறும் தமிழக மக்கள்! இருளை நோக்கி நகரும் தமிழகம்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?
அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில்,
உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் @CMOTamilNadu!
பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : 19.6.2026 - வெள்ளிக் கிழமை
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#மக்களுக்காக_அஇஅதிமுக
வழக்கு பதிய முடியாது…
விசாரணை நடத்த அதிகாரம் கிடையாது…
ஆனால் பெயர் “சிங்கப்பெண் அதிரடிப் படை”!
எந்த அதிகாரமும் இல்லாமல் எப்படி இந்த அதிரடிப் படையால் செயல்பட முடியும்?
ரோந்து போலீசாருக்கு Uniform மட்டும் மாற்றிவிட்டு, Amma Patrol மீது ஸ்டிக்கர் ஒட்டியது தானே இந்த திட்டம்?
What bro… How will this force function bro @actorvijay ?
பெண்கள் பாதுகாப்பை மற்றுமொரு PR Stunt-ஆக மட்டுமே பார்க்கிறதா இன்றைய #பொய்க்கால்_குதிரை_அரசு ?
வணக்கம் @tn_factcheck…
3 சேனல்கள் முடக்கப்பட்ட செய்தியை “தவறான செய்தி” என போட்டுள்ள நீங்கள், அதை தொழில்நுட்பக் கோளாறு என உருட்டியுள்ளதை கண்டோம்.
அது என்ன தொழில்நுட்பக் கோளாறு?
கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்தாலே நேரலை துண்டிப்பு ஆகுமே.. அந்த மாதிரி கோளாறா?
இந்த மூன்று சேனல்களை முடக்கியது போல சன் நியூஸ் சேனலை இந்த அரசால் முடக்க முடியவில்லை ? அப்படி செய்தால் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும் தங்களை விட்டு போகும் என்ற பயத்தால் தானே?
அப்புறம், உங்கள் மீதான வழக்கை இன்றைய அமைச்சர் @CTR_Nirmalkumar வாபஸ் பெற்றுவிட்டாராமே… வாழ்த்துகள்.
அது எப்படி, 2023-ல் உங்களை Unconstitutional எனக் கூறி வழக்கு போட்டவர், 2026-ல் நீங்கள் Constitutional தான் என்று Compromise ஆனார்?
கட்சி மாறுவதால்,
ஆட்சி அதிகாரம் வருவதால்,
Constitutional Status மட்டும் மாறுமா?
“தகவல் சரிபார்ப்பகம்” என்பதை விட, “த.வெ.க. உருட்டகம்” என்ற பெயர் தான் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது!
#பொய்க்கால்_குதிரை_அரசு
மருத்துவமனை சென்றால் மருத்துவர் இல்லை
பேருந்து நிலையம் சென்றால் பேருந்து இல்லை
பள்ளிக்கூடம் சென்றால் கழிவறை இல்லை
இதுவா நீங்கள் சொன்ன மாற்றம் @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது.
தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.
யூட்யூபில் விமர்சித்தால் கைது,
செய்தி வெளியிட்டால் Blackout,
உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா @CMOTamilNadu?
அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.
இது தான் ஜனநாயகமா?
இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா?
அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?
ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல!
ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial