விசில் ஊதுங்கள்… ஊதிட்டாங்க ஒரேடியா..!!
தமிழகம் முழுக்க உள்ள இந்த தொடர் மின்வெட்டுக்கு, அடுத்து என்னென்ன உருட்டுகளை ஆச்சரியக்குறி அரசு உருட்டும் என்பது இளைஞர்களுக்கே தெரிந்துவிட்டது.
@actorvijay ப்ரோ… Coin Fight எப்போ தான் முடியும்?
மக்களால முடியல..!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
மருத்துவமனை சென்றால் மருத்துவர் இல்லை
பேருந்து நிலையம் சென்றால் பேருந்து இல்லை
பள்ளிக்கூடம் சென்றால் கழிவறை இல்லை
இதுவா நீங்கள் சொன்ன மாற்றம் @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு
வணக்கம் @tn_factcheck…
3 சேனல்கள் முடக்கப்பட்ட செய்தியை “தவறான செய்தி” என போட்டுள்ள நீங்கள், அதை தொழில்நுட்பக் கோளாறு என உருட்டியுள்ளதை கண்டோம்.
அது என்ன தொழில்நுட்பக் கோளாறு?
கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்தாலே நேரலை துண்டிப்பு ஆகுமே.. அந்த மாதிரி கோளாறா?
இந்த மூன்று சேனல்களை முடக்கியது போல சன் நியூஸ் சேனலை இந்த அரசால் முடக்க முடியவில்லை ? அப்படி செய்தால் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும் தங்களை விட்டு போகும் என்ற பயத்தால் தானே?
அப்புறம், உங்கள் மீதான வழக்கை இன்றைய அமைச்சர் @CTR_Nirmalkumar வாபஸ் பெற்றுவிட்டாராமே… வாழ்த்துகள்.
அது எப்படி, 2023-ல் உங்களை Unconstitutional எனக் கூறி வழக்கு போட்டவர், 2026-ல் நீங்கள் Constitutional தான் என்று Compromise ஆனார்?
கட்சி மாறுவதால்,
ஆட்சி அதிகாரம் வருவதால்,
Constitutional Status மட்டும் மாறுமா?
“தகவல் சரிபார்ப்பகம்” என்பதை விட, “த.வெ.க. உருட்டகம்” என்ற பெயர் தான் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது!
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது.
தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.
யூட்யூபில் விமர்சித்தால் கைது,
செய்தி வெளியிட்டால் Blackout,
உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா @CMOTamilNadu?
அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.
இது தான் ஜனநாயகமா?
இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா?
அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?
ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல!
ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் கமாண்டோ படை, அம்மா Patrol என அஇஅதிமுக ஆட்சி பெண்களைக் காக்க, பெண்களை முன்னேற்ற கொண்டு வந்த திட்டங்களை கலந்து அடித்து சிங்கப்பெண் படை எனும் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளது இன்றைய #பொய்க்கால்_குதிரை_அரசு.
Bro… This is seriously Wrong bro!!!
சென்னை மக்களே…
நேற்று இரவு கரண்ட் இல்லாமல் நீங்கள் அவதிப்பட்ட போது காணாமல் போயிருந்த ஆச்சரியக்குறி MLA-க்கள் அனைவரும் அனைவரும் தற்போது ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆஜராகியுள்ளனர்.
மக்கள் தவித்தபோது Absent ஆனவர்கள், அரசு விழாவை சிறப்பிக்க மட்டும் Present ஆகியுள்ளனரே… அடடே… ஆச்சரியக்குறி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
பெரம்பூர் மக்களே….
உங்களுக்கே தெரியாமல் ப்ரோ மாறுவேசத்தில் வந்து நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.
அடுத்த முறை ப்ரோ வரும் போது அவரை Easy-யாக கண்டுபிடிக்க அவரது மாறுவேசங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.
இவண்
@AIADMKITWINGOFL 🙏
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஒருபுறம் "என்னைத் தொடர்ந்து விமர்சியுங்கள்" என்று மேடையில் வீராப்பாகப் பேசுவது!
மறுபுறம் விமர்சித்து வீடியோ வெளியிட்டால் காவல்துறையைக் கொண்டு கைது செய்வது!
ஏன் இந்த இரட்டை வேடம்? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
கடந்த திமுக ஆட்சியில் அதல பாதாளத்தில் இருந்த சட்டம்-ஒழுங்கு, தற்போதைய அரசில் முற்றிலும் புதைகுழிக்குச் சென்றுவிட்டது.
ஆட்சி மாறியதே தவிர, அவலங்கள் மாறவில்லை!
#பொய்க்கால்_குதிரை_அரசு
“சில இடங்களில் வேண்டுமென்றே Fuse-ஐ எடுத்துச் செல்கின்றனர்” என “அணிலை” மிஞ்சிய உருட்டு உருட்டிய இன்றைய மின்துறை அமைச்சர்.
தமிழகம் முழுக்க Fuse Carrier பாதுகாப்பு படை அமைத்த தவெக அரசு என்று வருங்காலத்தில் பல “🔥”கள் பறந்தாலும் ஆச்சரியமில்லை!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான நம் உயிர்நிகர் கழகத்திற்கு மென்மேலும் வலுசேர்க்க தன்னார்வம் கொண்டு இளைஞர்கள் எடுக்கின்ற முயற்சிகள் பாராட்டுக்குரியது.
மேலும், மாவட்டந்தோறும் இளைஞர்களை ஒருங்கிணைக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள கழகமும் @AIADMKITWINGOFL-ம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.
அதேசமயம், தலைமைக் கழகத்தில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான கூட்டம் ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக வரும் செய்தி “உண்மையல்ல” என்பதை மாண்புமிகு கழகத் தலைமையின் அறிவுறுத்தலின்படி தெளிவுபடுத்த விழைகிறோம்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் ஆணையின்றி, தலைமைக் கழகத்தின் பெயரை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
தலைமைக் கழகத்தின் ஒப்புதல் கடிதம் இன்றி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தப்படாது.
தலைமைக் கழக நிகழ்ச்சிகளுக்கு @AIADMKOfficial சார்பில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் ஆணை பெற்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், நம் கழகத்தின் பெயரை சொல்லி சில இடங்களில் பணம் வசூலிக்கும் செயல்கள் நடந்து வருவதாக சமூக வலைதளங்களில் புகார்கள் வருவதால், இளைஞர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் அணுகுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
தங்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாக கழகத்திடமோ, @AIADMKITWINGOFL- இடமோ எந்நேரமும் கேட்டுப் பெறலாம் என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறோம்.
நீங்கள் சொன்னதைத்தான் நாங்களும் கேட்கிறோம். கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படும் நிலையில், டெல்லி சென்று சிலிண்டர் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தாமல், கள்ள மவுனம் காப்பது ஏன் @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு
மின்துறையில் Hard Disk திருடு போன வழக்கை ஏன் CBCID- யிடம் ஒப்படைக்கவில்லை என நாம் 3 நாட்கள் முன்பு கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,
தற்போது மிகவும் தாமதமாக CBCID விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பொய்க்கால் குதிரை அரசு.
இதற்கு எதற்கு இத்தனை நாட்கள்?
திருடு போன முதல் நாளே செய்ய வேண்டிய வேலையை ஏறத்தாழ ஒரு வாரம் Delay செய்துள்ளதன் பின்னணி என்ன?
செய்திகளில் வரும் வரை இதுபற்றி அமைச்சர் @CTR_Nirmalkumar விளக்கம் தராமல் மறைத்து வைத்திருந்ததே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது வெறும் Hard Disk திருட்டு மட்டுமல்ல.
தரவுகள் திருடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.
Data Theft பற்றி உங்கள் அரசின் காவல்துறையே விசாரிப்பதை இனிமேல் எப்படி நம்ப முடியும்?
நியாயமான விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும் எனில்,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கோரியபடி CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
@CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
Behind every shot that hit different, every silence that said more than dialogue ever could, there she was!❤️🔥
Happy birthday, Geetu Mohandas ✨️
#Toxic#ToxicTheMovie
யூட்யூபர் திரு. @MaridhasAnswers அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்….
Wait a minute…
ஆட்சி மாறி விட்டதோ?
ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்?
பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?
நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க…
What bro… It’s very wrong bro..!!
அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் @dir_ed-யால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.
@AadhavArjuna அவர்களே…
ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?
இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே திரு. மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?
திரு. மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்?
அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா?
ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
உடனடியாக திரு. மாரிதாஸ் அவர்கள் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
HELLO பனையூரா!
எப்ப சார் பெரம்பூர் தொகுதிக்கு நன்றி சொல்ல வர்றீங்க!
Content இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு...
நேத்து sunday வேற...
office Leave...
கொஞ்சம் சீக்கிரம் பாத்து பண்ணுங்க சார்!
Sorry For The Disturbance 😊