அடக்குமுறைக்கும் - ஆதிக்கத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்த மாவீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
ஆங்கிலேயருக்கு வரிக்கட்ட மறுத்து - மாபெரும் போரிட்டு பீரங்கிக்கு நெஞ்சைக் காட்டிய மாமன்னர் அழகு முத்துக்கோனின் வீரம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அவரது தீரத்தையும் - தியாகத்தையும் போற்றுவோம்!
#அழகு_முத்துக்கோன்
திராவிட இயக்கத்தின் தாய்மடியாம் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பனகல் அரசரின் பிறந்த நாள் இன்று.
பனகல் அரசர் குறித்த புத்தகம்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அரசியல் அரிச்சுவடி.
சமூகநீதியை உறுதி செய்ய #CommunalGO - ஆலய வழிபாட்டு உரிமையைக் காக்கின்ற வகையில் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தடையைத் தகர்த்தது என பனகல் அரசர் சாதித்தவை ஏராளம்.
திராவிட மாடலுக்குத் தடம்போட்டுத் தந்த பனகல் அரசரின் புகழ் ஓங்கட்டும்!
#பனகல்_அரசர்
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers
இளம் பெண்களின் பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத #SofaModel அரசின், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?
#WomenSafety#TVK#women
"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
பனகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.
சமூகநீதியின் அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள்தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை!
நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்!
#PanagalRaja
ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
தீண்டாமைக் கொடுமைகளை உலகிற்கு உணர்த்த முதலாம் வட்ட மேசை மாநாட்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கே கைக்கொடுக்க மறுத்தத் துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.
தன் வாழ்நாள் எல்லாம் ஒடுக்கப்பட்ட – விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகவும் – சம வாழ்வுக்காகவும் உழைத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பணிகளைப் போற்றும் வகையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஓட்டேரி பகுதியில், ‘இரட்டைமலை சீனிவாசன் சாலை’ என்று நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள் பெயர் சூட்டினார்கள்.
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் ஓங்கட்டும். அவர் லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்.
#RettamalaiSeenivasan
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் - ஆலந்தூர் தெற்குப்பகுதி - 164-வது வட்டக்கழக செயலாளராகவும், மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய நங்கநல்லூர் நேரு காலனியைச் சேர்ந்த அண்ணன் ஏசு (எ) ஜேசுதாஸ் அண்மையில் மறைந்தார்.
இன்றைய தினம் அண்ணனின் இல்லம் சென்று அவரது திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
மாவட்டக்கழகம் சார்பில் அண்ணன் ஏசு அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.11 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினோம்.
அவரது துணைவியாரும் - மாமன்ற உறுப்பினருமான அக்கா தேவி உள்ளிட்ட குடும்பத்தார் - நண்பர்களுக்கு நம்முடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தோம்.
அண்ணன் ஏசு அவர்களின் கழகப்பற்றும் - கலைஞர் மீதும், கழகத்தலைவர் அவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த பாசமும் போற்றுதலுக்குரியவை.
கழக நிகழ்ச்சிகளில் கருப்பு - சிவப்புக் கொடியோடு அண்ணன் ஏசு எழுப்பிய கொள்கை முழக்கங்கள் உடன்பிறப்புகளின் செவிகளில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அண்ணன் ஏசுவின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்!
@thamoanbarasan
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
சட்டசபையில தொட்டவனை விட மாட்டேன்னு சொன்ன முதலமைச்சர், இப்ப ஊழல் வழக்கு இருக்கிற அதிமுகவினர் யாரையும் விடாம கட்சியில சேர்த்துட்டு இருக்காரு.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
நம் உயிரோடும் – உணர்வோடும் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை தென் மேற்கு மாவட்டக் கழகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சென்ற ஜுன் மாதம் முழுவதும் சுமார் 256 நலத்திட்ட நிகழ்ச்சிகளை கழக நிர்வாகிகள் நடத்தி இருக்கிறார்கள்.
அவர்களுக்கான பாராட்டு விழா அடையாறு முத்தமிழ் மன்றத்தில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம்.
ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் மக்களுக்கான களத்தில் தி.மு.கழகம் முன்வரிசையில் நிற்கும் என்பதை உறுதி செய்கிற வகையில் கலைஞர் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை தென் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளைப் பாராட்டி உரையாற்றினோம்.
கலைஞர் புகழ் ஓங்கட்டும்
@mylaivelu@ThamizhachiTh
தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.@GGPonnambalam அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம்.
போருக்குப்பின் இலங்கையில் நிலவும் சூழல் – அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உள்ளிட்டவைக் குறித்து அவர் நம்மிடம் எடுத்துரைத்தார்.
அவரது கருத்துக்களை கழகத்தலைவர் @mkstalin அவர்களிடம் எடுத்துச்சென்று, இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று உறுதியளித்தோம்.
இந்த சந்திப்பின்போது, நம்முடைய இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலைப் பரிசளித்தோம்.
‘ஆட்டுக்கு தாடியை அளந்து வைத்தது போல்'
ஆளுநருக்கும், அவருக்குரிய எல்லையை வகுத்து வைத்திருக்கிறது சட்டம்!
எடுத்தேன், கவிழ்த்தேன்
என்று எல்லை மீறி
தொல்லை தரும் ஆளுநரை கண்டிக்க துப்பில்லாத கையாலாகாத அரசால்
இதுபோன்ற அதிக பிரசங்கித் தனங்கள் அரங்கேறுவது வெட்கக்கேடு! 🔥😡
@mkstalin@Udhaystalin
#LeaderOfOpposition
#DMk
#TVKFails