எப்போதும் போலத்தான் அந்த இரவும், இல்லாதவர்களுக்கு உணவு பகிர்ந்து கொண்டிருந்தேன் ஆனால் எப்போதும் போல இல்லை அந்த இரவு.
திடீரென ஒரு பெண் கண்ணீரோடு வந்தார். அவர் பேசியது புரியவில்லை. வடமொழியில் பேசினார். ஆனால் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் பதற்றமும், கண்ணீரும் உணர்த்தியது. காதலனைத் தேடி ஒடிசாவிலிருந்து இங்கே வந்திருக்கிறார் ஆனால் அவனோ மொபைல் Switched off செய்துவிட்டு ஆள் எஸ்கேப். உடனடியாக அந்த பெண்ணை பாதுகாக்க வேண்டி 100-க்கு கால் செய்தேன். Patrol அனுப்புவதாக கூறினார்கள்.
நள்ளிரவை கடந்து பயணித்தது நேரம். வரவில்லை. மீண்டும் அழைத்தேன்...
சில நிமிடங்களில் ஒரு தலைமை காவலர் வந்தார்.
'கவலைப்படாதீங்க...நாங்க இருக்கோம்' என்றார். அந்த அணுகுமுறையே புதிதாக இருந்தது.
யார் யாருக்கோ கால் செய்து பேசியபடியே இருந்தார்.
'என்ன சார் ஒரு பொண்ணு தனியா அழுதுகிட்டு இருக்கு...நீங்க பேசிட்டே இருக்கீங்களே ' என்றேன்.
'இல்ல மேடம், ஸ்டேஷன் போகனும்னா பெண் காவலர் இருக்கனும்...ஆனால் தற்போது பெண் காவலர்களோ, காவல் நிலையத்தில் இல்லை. வெளி Duty போயிருக்காங்க. Home-க்கு அனுப்பனும் என்றால் மேலதிகாரிகளிடம் சட்டப்படி அனுமதி வாங்கனும்...நிறைய Formalities இருக்கு...அதெல்லாம் ஒருபக்கம் செய்துக் கொண்டே, இன்னொரு பக்கம் வேறு வாய்ப்புகள் இருக்கான்னு பார்த்துகிட்டு இருக்கேன்' என்றார். பின், என் பதிலை கூட எதிர்ப்பார்க்காமல் தொடர்ந்து மொபைலில் பேசினார். Atlast அப்பெண்ணுக்கு பாதுகாப்பான ஒரு இடத்தை கண்டறிந்து, அங்கு அவரை சேர்த்தார்.
ஒரு பக்கம் கண்ணீரோடு அப்பெண்...இன்னொரு பக்கம் நள்ளிரவு நேரம்...பதற்றமான சூழல் ஆனாலும் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தபடியே இருந்தார் தலைமை காவலர். கிட்டத்தட்ட 3 மணி நேர முயற்சிகளுக்குப் பிறகு வெற்றி கிடைத்தது.
‘ரொம்ப நன்றிங்க’ என்றோம். ‘அட பரவாலைங்க மேம் உங்க கண்ல பட்டதால அந்த பெண்ணுக்கு இந்தளவுக்கு உதவி செஞ்சிருக்கீங்க. நைட் நேரத்தில தப்பான நோக்கத்தில அந்த பெண்ணை யாரும் நெருங்கிடக்கூடாதுன்னு பாதுகாப்பா இருந்திருக்கீங்க ஆனா நிறைய பேரு , நமக்கெதுக்குனு ஒதுங்கி போய்டுவாங்க. அப்படி இல்லாம எங்க இப்படி யாரப் பார்த்தாலும் தேடி வந்து உதவி செய்தால், அதுவே போதும்ங்க’ என்றபடியே , நமக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார்.
பொதுவாக 'காவல்துறையினர் என்றாலே பொதுமக்களை அலட்சியமாக பார்ப்பவர்கள்' என்று ஒரு பொது எண்ணம் உள்ளது. ( அப்படி பல மோசமான அனுபவங்கள் பொது மக்களுக்கும் உண்டு) ஆனால் இவரோ உண்மையிலேயே 'காவல்துறை உங்கள் நண்பன்' என்பதற்கு அர்த்தம் கொடுத்தார்.
மறக்கமுடியாத உதவி.
Thank u Nanba!
அவர் பெயர் : சாந்தகுமார்
தலைமை காவலர் 12411
Control room E 2, Royapettah
@chennaipolice_@CMOTamilnadu@ikamalhaasan #HumanityFirst
Yesterday, on 19/10/23, I took charge as Superintendent of Police, Kanyakumari District.
In 2019, I underwent my District Practical Training in Thirunelveli District. Happy to be back to South Zone.
Looking forward to an interesting tenure in this beautiful land.
I got relieved from the post of SP Karur yesterday. It was an eventful tenure with many challenges.
I had an excellent team and the guidance from senior officers and support from colleague officers made the tenure memorable.
I ll be joining Kanyakumari shortly.
Thank you all