கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
சேலம் மாவட்டம், ஓமலூரில் டாஸ்மாக் மூடிய இடத்தில் மீண்டும் அதே பகுதியில் தனியார் பார் திறப்பு, கோவில், பள்ளிவாசல், திரையரங்கு அருகில் இயங்கும் இந்த பாரால் பெண்கள் மாணவர்கள் அவதி, விரைவில் இந்த பாரை நிரந்தரமாக மூடும் மாறு @CMOTamilnadu அவர்களை கேட்டுக்கொள்கிறேன் @AadhavArjuna
இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா..
ஒரு அரசு ஊழியர் போல் மக்கள் பணியை செய்யும் முதல்வரே...
தொடரட்டும் உங்களது மக்கள் பணி..
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay@actorvijay
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
#CMJosephVijay
2/2
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாநகர மற்றும் மாவட்டங்களில் போதைப் பொருட்கள் தடுப்பு படை அலகுகளை உருவாக்குதல் ஆகிய அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய் குமார், இ.ஆ.ப., அவர்கள் உள்ளார்.
#CMJosephVijay
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் குழு புகைப்படம். உடன் மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் உள்ளார்.
#CMJosephVijay
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உரையாற்றினார்.
#CMjosephVijay
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உரையாற்றினார்.
#CMJosephVijay