கணவர் விட்டு போன கனவை காப்பாற்றும் உமா சேதுராமன்….
என் கணவர் கிளினிக் ஆரம்பித்து 4 வருடங்களிலேயே இறந்துவிட்டார்.
அப்போது பலர், நீ டாக்டர் இல்லை… அதுவும் கோவிட் காலத்தில் இந்த கிளினிக்கை நடத்த முடியாது. வேறு யாரிடமாவது கொடுத்துவிடலாம் என்று சொன்னார்கள்.
ஆனால் என் மனதில் தோன்றியது ஒன்றே ஒன்று தான்… அவர் ஆசையாக ஆரம்பித்த கிளினிக் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது.
அதை தொடர்ந்து நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. நமக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். இருக்கும் வாழ்க்கையை நாமே முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
அவர் விட்டுச் சென்ற கனவை, என் கனவாக எடுத்துக்கொண்டு, அந்த கிளினிக்கை கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.