மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!
நாம் தமிழர் கட்சி 234 வேட்பாளர்கள் அறிமுக மாநாடு!
📍ஆலம்பட்டிப்புதூர், திருச்சி.
பெருந்திரளாக கூடிய கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள்.
#நாதக#சீமான்#நாம்தமிழர்கட்சி#திருச்சி#மாநாடு
வெண்ணிலா தாயுமானவன், சுற்றுசூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு, ஆலம்பட்டிப்புதூர், திருச்சி
#சீமான்#நாதக#திருச்சி#மாநாடு
துருவன் செல்வமணி - மாநில கொள்கை பரப்புச் செயலாளர், நாதக | மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு, ஆலம்பட்டிப்புதூர், திருச்சி
#சீமான்#நாதக#திருச்சி#மாநாடு
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!
மாபெரும் மாநாட்டு திடல் வேலைகள் நடைப்பெற்று வரும் காட்சிகள்...
இடம்: ஆலம்பட்டிப்புதூர், திருச்சி-திண்டுகல் தேசிய நெடுஞ்சாலை
நாள்: 21.02.2026
#நாம்_தமிழர்_கட்சி#நாதக#சீமான்#Seeman4TN
மாற்றத்திற்கான மக்களின் மாநாடு!
மாநாட்டு திடலின் கழுகு பார்வை.
காணொளி எடுக்கப்பட்ட நாள் 16.02.2026.
இடம்: ஆலம்பட்டிப்புதூர், திருச்சிராப்பள்ளி – திண்டுக்கல் சாலை
நாள்: 21.02.2026
https://t.co/Wl3Q4PT2DW
How did he get the courage to speak so arrogantly to the public? Why does a North Indian without knowing our language Tamil, works in a government office used by only Tamil people? Immediate action need to be taken.
@IndiaPostOffice@RBI@CMOTamilnadu
@Saattaidurai (சாட்டை துரைமுருகன்) வாகனத்தை வேண்டுமென்றே அவர் உயிர்க்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விபத்துக்குள்ளாக்கியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். இது ப்பாசிசத்தின் உச்சம். காவல் துறையை தனது ஏவல் துறையாக பயன்படுத்தும் திமுக அரசை எச்சரிக்கிறோம்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது! எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை... அதை தடுப்பதற்கு குற்றவாளிகளை கைது செய்ய துப்பில்லாத திமுக அரசு... மேடையில் உண்மையை பாடியதற்காக ஏவல் துறையை திருச்சியில் இருந்து குற்றாலம் அனுப்பி சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளது.
கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி!
சதிகாரன் கருனாநிதி!
சன்டாலன் கருணாநிதி!
என்ற பாடலை எழுதி பாடியவர்களை கைது செய்யாமல் எடுத்துப் பாடிய நாம் தமிழர் கட்சியின்
சாட்டை துரைமுருகனை கைது செய்திருப்பதை கண்டித்த சீமான்.
#ReleaseSaattaiDuraimurugan
கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!
இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:
1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?
2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?
3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.
5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?
6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?
எப்படி ஆட்சி நடத்த கூடாது என்பதற்கான மாடல் தான் இந்த #திராவிடமாடல்... குற்றங்கள் நடப்பதற்கு முன்பு தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் காவல்துறை... ஆனால் தமிழ்நாட்டில்...more
#DMKFails#Resign_Stalin
தலைநகரில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது...
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு, சமூக வலைத்தள பிரபலங்களுக்குமே இங்கு பாதுகாப்பில்லை என்றால், சாமானிய மக்களின் நிலை?
@tnpoliceoffl@CMOTamilnadu@mkstalin@A2D_Army