திமுக மீது பரப்பப்படும் பொய் பிரச்சாரத்திற்கு மிகவும் சிறப்பாக பதில் சொல்கிறார் என்றால் அது திரு செந்தில் அவர்கள் தான்
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.. பொய் எப்படி எல்லாம் பரப்பப்படுகிறது என்பது புரியும்
🙏
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தொழிலாளரணி துணை அமைப்பாளர் திரு. அந்தோணி தனுஷ் பாலன் அவர்களின் மகன் திரு. அ.சிம்சன் காந்தி - திருமிகு. கி.மைக்கேலின் சுவேதா இணையரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இன்று, மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்தினேன்.
முன்னாள் அமைச்சர் திரு. @ARROffice உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சாதனை விளக்க அணி ஒன்று வேண்டும்..
அந்த அணி நாம் செய்த மக்கள் பணிகளை வார்டு வார்டாக கிராம் கிராமமாக் ஊர் ஊராக எடுத்து சொல்ல வேண்டும்.
அவர்கள் முழுநேர வேலையாக இருக்க வேண்டும்.
கொள்கை பரப்பு அணி வெரும் அலங்கார பொறுப்பாகதான் உள்ளது.
@mkstalin@Udhaystalin@Office_of_Udhay
தவெகவின் அதிகாரபூர்வ ஐடி விங்காக செயல்படும் நியூஸ் தமிழ் 24x7 தவெக நிர்வாகியிடம் எடுத்த பேட்டியை சமூக வலைத்தளத்தில் Delete செய்துள்ளது. இப்போது எழும் கேள்விகள் என்னவென்றால் அந்தப் பெண் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ய போனது உங்கள் செய்தியாளருக்கு மட்டும் எப்படி தெரிந்தது? அதனை செய்தியாக வெளியிட சொன்னது யார்? இப்போது அந்தப் பதிவை நீக்க சொல்லியது யார்?
சமூகத்தில் நடக்கும் தவறுகளை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் இருக்கும் நீங்களே ஊடக தர்மத்தை மீறி ரீல்ஸ் ஆட்சிக்கு promotion செய்யும் வேலையில் இறங்கலாமா..
#TVKFails
நேர்லயும் சோஷியல் மீடியாக்கள்லயும் உடன்பிறப்புகளான நீங்க வெளிப்படுத்துற உணர்வுகளைக் கவனிக்குறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்து, தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வோட பயணிக்குற நமக்கு, புத்தெழுச்சி ஊட்டக் கூடிய நாளா, தலைவர் கலைஞரின் பிறந்தநாள் வருது!
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடுற அதேவேளையில், சோஷியல் மீடியாவுலயும் தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புவோம்! இளைய தலைமுறைக்கு நம்மோட வரலாற்றையும் – தேவையையும் எடுத்துச் சொல்வோம்!
தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறக்கணும்னா அதுக்கு தி.மு.க.தான் தேவை என்பதை இளைஞர்களுக்குச் சொல்ல தலைவர் கலைஞரின் பிறந்தநாளில் உறுதியேற்று உழைக்கத் தொடங்குவோம்!
#LetterToBrethren #Kalaignar103 #KalaignarForever
சாதியெனும் இருள் அகற்றிடத் தோன்றிய #திராவிடப்_பேரொளி அயோத்திதாசரின் புகழ் ஓங்குக!
மயங்கிக் கிடந்த நம் இனம் விழித்தெழ, புரட்சிகரச் சிந்தனைகளை விதைத்த திராவிட இயக்கத்தின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள்.
🔷 அவருக்குத் திருவுருவச் சிலையும் மணிமண்டபமும் அமைத்தது;
🔷 அவரது பெயரில் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கியது உள்ளிட்டவை #DravidianModel-க்குக் கிடைத்திட்ட பெரும் பெருமை!
சாதிபேதமற்ற சமுதாயத்தைக் கட்டமைத்திட, 'தமிழன்', 'திராவிடன்' ஆகிய சொற்களை அரசியல்களத்தில் ஆயுதமாகப் பயன்படுத்திய அயோத்திதாசரின் சிந்தனைகள் நீடு வாழ வேண்டும்! திராவிடச் சிந்தனை நோக்கி இளைஞர்களை ஈர்த்த அவரது வழியில் பயணிப்போம்! தமிழ்ச் சமூகம் மேன்மையுற தொடர்ந்து பாடுபடுவோம்!
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது.
இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன்.
#10thResult #ExamResult
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது.
இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன்.
#10thResult #ExamResult
புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் மே 2026 மாத உதவித்தொகை ரூ.1000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இன்று (13.05.2026) வரவு வைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வியை உறுதி செய்வோம்
சமூக நலத் துறை
தமிழ்நாடு அரசு
#திராவிடம்_வெல்லும்#தமிழ்நாடு_மக்கள்_முதல்வர்
புதிதாக அமைந்திருக்கின்ற ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன் சட்டப்பேரவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை
புதிதாக அமைந்திருக்கின்ற ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன் சட்டப்பேரவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புதிதாக அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கப் போகிறது.
அதற்கு முன்பு வாக்கு எண்ணிக்கை தொடங்கி கடந்த 10 நாட்களாக ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சியாக சில விமர்சனங்களோடு இங்கு வைக்க விரும்புகிறேன்.
முதலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் சுமார் 4 கோடியே 93 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள். தற்போதைய ஆளுங்கட்சிக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 1 கோடியே 72 லட்சத்து 26 ஆயிரம் தான். மீதம் இருக்கின்ற சுமார் 3 கோடியே 21 லட்சம் பேரும், உங்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது கிட்டத்தட்ட 65 சதவிகிதம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு ஆட்சியின் மேல் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது.
அடுத்து மிக முக்கியமான ஒன்று மெஜாரிட்டிக்கான நம்பர்ஸ். நம் சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. மேஜிக்கல் நம்பர் என்று சொல்வார்கள். 118 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியோ கூட்டணியோ தான் ஆட்சிக்கு வர முடியும். இப்போது நம்பிக்கை கூறுகின்ற உங்கள் கட்சிக்கு அந்த நம்பர்ஸ் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை.
108 இடங்கள் தான் இருக்கிறது. அதுவும் அந்த கட்சியின் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தன் வெற்றி குறித்த நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இரண்டு இடங்களில் போட்டியிட்டு, அதில் ஒரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்திருக்கிறார்.
இன்னும் அந்த தொகுதி மக்களை நேரில் சந்தித்தோ அல்லது ஒரு அறிக்கை மூலமாகவோ ஒரு நன்றியைக் கூட இன்னும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்ல நேற்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் மாண்புமிகு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடாது என்று நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதனால் இப்பொழுது ஆளுங்கட்சிக்கு வெறும் 106 இடங்கள்தான் இருக்கிறது.
ஆனாலும் தேர்தலில், தனக்கு எதிராக எங்கள் தலைவர் அமைத்த கூட்டணியில் போட்டியிட்ட தலைவர்களை எல்லாம் இன்று சேர்த்துக் கொண்டு, பெரும்பான்மைக்கான கடிதத்தை, ஆளுநருக்கு கொடுத்து இன்றைக்கு இந்த ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு இன்றைக்கு ஆதரவு தெரிவித்து இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த மதிப்பிற்குரிய தலைவர்கள் எல்லாம், இந்த ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதற்கு சொன்ன காரணம், குடியரசு தலைவர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இன்னொன்றையும் சொன்னார்கள். இப்பொழுதும் எங்கள் தலைவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தொடர்வோம் என்று சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்கு ஆதரவு கொடுக்கும்போது, அவர்கள் சொன்ன இன்னொரு காரணமும் இருக்கு அதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் இப்பொழுது இங்கு என்ன நடந்திருக்கிறது?
உங்கள் கொள்கை எதிரி என்று சொன்ன பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில், போட்டியிட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை அந்தக் கட்சி தலைவருக்கே தெரியாமல் இந்த ஆட்சிக்கு ஆதரவு தர வைத்திருந்தீர்கள். இப்போது நான் சொல்வது மிகவும் டீசண்டான வெர்ஷன்.
அந்தக் கட்சித் தலைவர் திரு டி.டி.வி தினகரன் சொல்லும்போது என்ன தெரியுமா சொன்னார்? ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று சொன்னார். நேற்று சொல்லி இருக்கிறார். 'மாற்றம் மாற்றம் என்று சொன்னீர்கள். இது மாற்றமில்லை. துர்நாற்றம்' என்று சொல்லி இருக்கிறார்.
அடுத்து அதே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய பெரிய கட்சியான அதிமுக கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவு பட்டிருக்கிறது. பிளவுபட்ட ஒரு அணி உங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து நடந்த இன்சிடென்ட் தான் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட். பிளவு பட்ட குரூப்பில் இருக்கக்கூடிய ஒரு தலைவரின் வீட்டிற்கு ஒரு புது சோபா செல்கிறது. சோபா பின்னாடியே புது முதலமைச்சரும் செல்கிறார். புதுமையாக ஆட்சி நடத்துவீர்கள் என்று பார்த்தால், 'புஷ்பா' படம் போல் ஆட்சி நடத்துகிறீர்கள். தேர்தல் நேரத்தில் ஊழல் சக்தி என்று சொன்னீர்கள். ஆனால் இன்றைக்கு சோஷியல் மீடியாவில் மக்கள் உங்களைப் பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
என்ன கேட்கிறார்கள் தெரியுமா. அந்த ஊழல் சக்தியோடு சேர்ந்து இருக்கின்ற ஆளுங்கட்சியை இப்போது என்ன சக்தி என்று கூறப்போகிறீர்கள்? க்ளீன் கவர்மெண்ட் என்று சொன்னீர்கள் இதுதான் உங்கள் கிளீன் கவர்மெண்ட்டின் லட்சணமா என்று மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்படி நீங்கள் கூவத்தூரையும் மிஞ்சுகின்ற அளவிற்கு, அடிக்கின்ற கூத்தைப் பார்க்கும்போது இந்த அரசு எத்தனை நாளைக்கு நீடிக்க போகிறது என்று மக்களுக்கு சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. முதல் கோணலே முற்றிலும் கோணல் என்பது மாதிரி உங்கள் நடவடிக்கைகள் எல்லாமே இன்றைக்கு எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறது.
இப்படி எம் எல் ஏக்களை எல்லாம் கடன் பெற்று நடத்துகின்ற முதலமைச்சர் தான் அளித்துள்ள போலி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தவுடன், முந்தைய அரசு அதாவது எங்களுடைய அரசு வளர்ச்சிக்காக பெற்ற கடன் குறித்து தவறான கருத்துக்களைத் தந்து, மக்களை இன்றைக்கு திசை திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
பெரும்பான்மையும் இல்லாத, அரசியலில் அடிப்படை நேர்மையும் அல்லாத இந்த அரசு நல்லாட்சி தரும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக போராடும் இன்று மக்களுக்கு துணியும் நம்பிக்கை இல்லை. முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு பதிய வைக்க நான் விரும்புகிறேன்.
உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களே, நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு ஒரு பெரிய தவறை செய்து விட்டோமே என்று இன்று வருத்தப்பட ஆரம்பித்து விட்டார்கள். மக்களின் அந்த உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் நாங்கள் வெளிநடப்பு செய்யப் போகிறோம்.
நாங்கள் வெளிநடப்பு செய்தாலும், அதனால் பேரவையின் எண்ணிக்கை அளவு குறைந்து, நீங்கள் நிச்சயம் இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறத்தான் போகிறீர்கள். அப்படி வெற்றி பெற்ற பிறகாவது மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுகின்ற வகையில் உங்களின் பணிகள் இருக்க வேண்டும்.
எங்களின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், கடந்த ஐந்து வருடமாக, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தார். அந்தத் திட்டங்களை எல்லாம் நீங்கள் தொடர வேண்டும். தயவுசெய்து அதில் அரசியல் செய்ய வேண்டாம்.
ஏனென்றால் இந்த மாதம் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆயிரம் ரூபாய் வருமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் கல்லூரிக்குச் செல்கின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் வருகின்ற கல்வி ஊக்கத்தொகை, ஏழாம் தேதி கொடுத்திருக்க வேண்டும். இதுவரை வரவில்லை. அவர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது பள்ளி இல்லை என்றாலும் ஜூன் மாதம் பள்ளிகளைத் திறக்கப் போகிறார்கள். அப்போது காலை உணவு திட்டத்திற்காக பள்ளி மாணவர்கள் எல்லாம் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. நான் முதல்வன் திட்டம், தாயுமானவர், அன்பு கரங்கள் என்று பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் எல்லாம் ஆவலோடு இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற போது தன் முதல் உரையில் அவகாசம் வேண்டும் என்று கேட்டீர்கள், நிச்சயம் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் காத்துக் கொண்டிருக்கின்ற அனைவரையும் நீண்ட காலம் காக்க வைத்து விடாதீர்கள்.
அது மட்டுமல்ல தேர்தலுக்கு முன்பு பல கவர்ச்சியான வாக்குறுதிகளையும் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். மக்கள் அதையும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.
மகளிருக்கு மாதம் 2500 ரூபாய், ஆண்டுக்கு 6 சிலிண்டர், தங்கச் செயின், மோதிரம், பட்டுப் புடவை, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை என்று அந்தப் பட்டியலும் நீண்டு கொண்டிருக்கிறது.
அதில் ஒரு சில வாக்குறுதிகளையாவது முதல் கையெழுத்தில் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். நீங்கள் வாக்குறுதிகளைச் சொல்லும் பொழுது நடைமுறைக்கு சாத்தியமானவற்றை மட்டும் தான் சொல்கிறேன் என்று எல்லா கூட்டத்திலும் திரும்பத் திரும்பச் சொல்லி இருக்கிறீர்கள். எனவே அதை விரைந்து செய்து காட்டுங்கள்.
இந்த நேரத்தில் எங்கள் திராவிட மாடல் ஆட்சியைப் பற்றி ஒன்றை ஒன்று மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது 2021 கோவிட் பெருந்தொற்று காலம் இருந்தது. அப்போது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு தெரியுமா? வெறும் 0.7 சதவிகிதம். அந்த நிலைமையிலும் எங்கள் தலைவர் முதலமைச்சர் அவர்கள் முதல் கையெழுத்திலேயே மகளிர்க்கு விடியல் பயணம் திட்டத்தைக் கொடுத்தார். முதல் நாளே எல்லா குடும்பங்களுக்கும் 4000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகையை முதலமைச்சர் கொடுத்தார்.
ஆவின் பால் விலை குறைப்பு வரை, முதல் நாளே ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். ஒரே மாதத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்னது மாதிரி பெட்ரோல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பதற்கான உத்தரவையும் எங்கள் முதலமைச்சர் போட்டார். இப்படி கடுமையாக உழைத்ததால் தான் ஐந்தாண்டு முடிவில் இன்றைக்கு இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை எங்களுடைய தலைவர் மாற்றிக் காட்டியிருக்கிறார்.
நாங்கள் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி விட்டுத்தான், ஆட்சியை விட்டுச் சென்றிருக்கிறோம். உங்கள் ஆட்சியைப் பொருத்தவரைக்கும், வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக நடத்துங்கள். அது மட்டும் தான் மக்களின் கோரிக்கை.
எங்களின் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கட்டளையின்படி நீங்கள் ஆட்சியைத் தொடர, நாங்கள் தடையாக இருக்க விரும்பவில்லை. அந்த வகையில் பேரவையிலிருந்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
நன்றி, வணக்கம்.
ஜெயலலிதா என்று ஒருத்தர் இருந்தார்.
"சினிமாவுல ஏராளமா சம்பாதிச்சு வச்சிருக்காங்க.. அவங்களுக்கு பிள்ளையா குட்டியா.. எதுவும் இல்ல.
கை சுத்தம்.. வாய் சுத்தம்.. எல்லாமே சுத்தம்" அப்படின்னு நினைச்சு மக்கள் ஓட்டு போட்டாங்க.
அந்த ஜெயலலிதா தான் எம்எல்ஏ கடத்தல் போன்ற பிராடுகளை ஆரம்பிச்சு, கடைசியா சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு போனது.
எதுக்காக சொல்றேன்னா..
அதுக்காக சொல்றேன்..
வாயத் திறங்க விஜய்!
ராஜஸ்தானில் இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததால் ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடக்கம் முதலே நீட் தேர்வு என்பதே ஒரு மோசடியென தி.மு.கழகம் சொல்லி வருவது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களும், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்களும் குரல் கொடுத்துள்ள நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் மௌனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இப்போதும் ஒன்றிய பா.ஜ.க அரசு என சொல்ல பயமாக இருக்கிறதா? நீட் தேர்வு தொடர்பாக தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை செய்தியாளர்களை சந்தித்து திரு. @TVKVijayHQ வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்!
#TVKFails