குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம்.
கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.
கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது.
அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ@TVKPartyHQ
மின்மினி பூச்சியின் வித்தைகளுக்கு மயங்குபவர்கள் அல்ல நாங்கள்!!!
ஆளுமை மிக்க தலைவனின் பின்னால் இருக்கிறோம் என்ற ஒற்றை பெருமையை எங்களுக்கு போதும்!!!
வெற்றியோ தோல்வியோ என்றும் உங்கள் பின்னால் அண்ணா❤️ @TTVDhinakaran#TTVDhinakaran | #AMMK
எடப்பாடிக்கு பதில் இவர் அதிமுகவின் பொதுச் செயலாளரா ஆகியிருந்தா இன்னக்கி அதிமுகவும் கரையேறி இருக்கும். பாஜகவும் கரையேறி இருக்கும். நீங்க என்ன நினைக்கிறீங்க…?
தூய சக்தி என்று சொல்கிற விஜய், இப்படி 420 வேலை பாத்து, என் எம்எல்ஏ காமராஜ் பேரில் போலியான கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
இப்படி ஃபோர்ஜரி வேலை செய்வதுதான் தூய்மையா?
- டிடிவி தினகரன்
TTV is the most brilliant politician . Press has never came over him even once . The replies are sharp and spontaneous. அவர்கிட்ட சிக்கியிருக்கிறார்கள்.
■குதிரை பேரம் நடந்தது என்பதற்கு சான்று சமர்ப்பிக்க பட்டால் சட்டப்படி பதிவி ஏற்பு ஒத்திவைக்கப்படும்.,
~TTV ஒத்த சீட்டை வைத்து மொத்த ஆட்டத்தையும் கலைக்க போறார்.!
💥💥💥
TTV is the one of the most intelligent politicians of TN. Before others he understood the shift in politics of TN. It was his trap in which fell by signing Kamaraj.
அதிமுக பொதுச்செயலாளராக திரு டிடிவி தினகரன்,
பா. ஜ. க தலைவராக திரு அண்ணாமலை அவர்கள் அமையும் பட்சத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கும்!!!!❤️🔥🔥❤️🔥
#TTVDhinakaran | #Annamalai#AIADMK | #BJP