எப்போதும் நம் வாழ்க்கை நம்மைச் சார்ந்தவர்களுக்கு அமைதியும், நம்பிக்கையும் கொடுக்க கூடியதா அமையணும்.. எப்போதும் நாம் நேசிக்க மட்டுமே கத்துக்கணும்.. வெறுப்பு, பகை பொறாமைங்கற எந்த உணர்வும் நமக்குள்ளே வர வேண்டாம். ஈகோ பார்த்துகிட்டு வாழ்க்கையைத் தொலைச்சிட்டு வேதனையில் வாடறதை விட மறந்து மன்னிச்சுட்டு அன்பு காட்டுவோம். எது நடந்தாலும் அது நாம் அடுத்தவரை புரிஞ்சுகிற சந்தர்ப்பங்கள்ன்னு நினைச்சுக்கணும்.. அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கைன்னு, மற்றவங்க அங்கீகாரத்துக்காக ஏங்கி நிற்காம துணிச்சலாக, தன்னம்பிக்கையோடு நம் வாழ்க்கைப் பாதையில் நடந்து போவோம்.
க்ரேசி மோகன் இறந்து போன அன்னிக்கு நடந்ததை மாது பேட்டி கொடுத்திருக்கார். அதிகாலையில கோயிலில் இருக்கும் போது க்ரேசி அவருக்கு கால் செய்திருக்கார். வயிறு வலிக்குதுன்னு கம்ப்ளைண்ட் பண்ணிருக்கார். இனிமே வெத்தலை போட மாட்டேன்னு சொல்லிருக்கார்... வலி தாங்கலைன்னு சொல்லிட்டு வீட்லையே எதையோ சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுன்னு இவர் சொல்லிட்டு போயிருக்கார்....
மறுபடியும் ஒன்னு இரண்டு மணி நேரத்துக்குள்ள கால் செய்து வலி அதிகமாகுது மூச்சு விட முடிலன்னு சொல்லிருக்கார். காரை எடுத்துட்டு ஹாஸ்பிடல் போய் அட்மிட் செய்த கொஞ்ச நேரத்தில உயிர் பிரிந்திருக்கு.
என்னுடைய கணிப்பு க்ரேசிக்கு வலி வந்து அவர் மாதுக்கு கால் செய்றதுக்கு முன்னாடியே 1 மணி நேரத்துக்கு அவரா சமாளிச்சு பார்த்திருப்பார். சமாளிக்க முடிலன்ன உடனே கால் செய்திருப்பார். அதில ஒரு மணி நேரம், மாது வந்து பார்த்தப்போ 1 மணி நேரம், அடுத்த போன் கால், ஹாஸ்பிடல் போனதுன்னு 2 மணி நேரம் போயிருக்கு. மாரடைப்புக்கு முதல் 3 மணி நேரம் கோல்டன் டைம். ஒரு வேளை காலையில முதல் முறை வயிறு வலின்னு ஆரம்பிச்ச உடனே ஹாஸ்பிடல் போயிருந்தா இன்னிக்கு க்ரேசி நம்ம கூட இருந்திருக்கலாம்...
முதல் விசயம் அதிகாலையில் வலி. பெரும்பாலான இதய பிரச்சனை & ஸ்ட்ரோக் அதிகாலையில தான் வருது. வயிற்று வலி, தாடை வலி, நெஞ்சு வலி, பிடறி வலி, கழுத்து வலி, நெஞ்சு கரிப்பு என எதுவா இருந்தாலும் அதிகாலையில வருவதற்கு கூடுதல் கவனம் கொடுக்கணும். உடனடியா இரத்தக் கொதிப்பை பார்க்கணும், 90க்கு கீழேயோ 170க்கு மேலேயோ இருந்தால் உடனடியாக மருத்துவமனை போகணும்.
இரண்டாவது புகையிலை பழக்கம். வெற்றிலை பாக்கு, சிகிரெட், பீடி, ஹான்ஸ், பாக்கு, மூக்குப்பொடி என எந்த விதமான புகையிலை பழக்கம் இருந்தாலும் உடம்பில எங்க வலி வந்தாலும் நேரா கிளம்பி ஹாஸ்பிடல் போய்டுங்க.. பிபி அங்க போய் பார்த்துக்கலாம்.
அடுத்தது உழைப்பில்லாத வாழ்க்கை முறை. நிச்சயமா பெரும்பாலோனோருக்கு இது பொருந்தும். அதிக உழைப்பில்லை, அதிகாலை வலி.. கிளம்பு ஹாஸ்பிடலுக்கு...
அடுத்து சர்க்கரை நோய்.. ஒழுங்கா மாத்திரை எடுக்கலியா?? அதிகாலை வலியா? ஹாஸ்பிடல் தான்...
மிக முக்கியமானது பிபி.. மாத்திரை போடல, உடனடியா கிளம்பனும். ஹாஸ்பிடலுக்கா பரந்தாமனை பார்க்கவா என்பது எவ்ளோ சீக்கிரமா கிளம்பறீங்க என்பதை பொறுத்தது.
கவனிக்க வேண்டிய இன்னொன்னு... வயது. 40 வயசுக்கு மேல, அதிகாலை வலி... கிளம்புங்க ஹாஸ்பிடலுக்கு.
ஒரு வேளை மேலே சொன்ன காரணத்துல ஒன்றுக்கு மேல உங்களுக்கு இருந்தா அதிகாலை வலி வந்தாலே அது கண்டிப்பா ஹார்ட் அட்டாக் தான்.. உடனடியாக ஹாஸ்பிடல் போங்க.
முதல் 3 மணி நேரம் தான் முக்கியம். வலிக்குது ஒரு சோடா குடிப்போம்ன்னா சோடா முடியறதுக்கு முன்னாடி சோலி முடிஞ்சுரும். கார்டியாக் அரெஸ்ட் வேற வகை. அது யாருக்கும் எப்பவும் வரலாம்... காப்பாற்றுவது கடினம் ஆனால் ஹார்ட் அட்டாக் 99% பெரும்பாலும் 3 மணி நேரம் டைம் கொடுக்கும்... சுதாரிச்சுக்கணும்.
அதுக்கு தேவை ஓரளவு விழிப்புணர்வு தான். அதுக்கு இந்த பதிவை படிச்சிருந்தாலே போதும்.
#Shared
@niranjan2428 இப்ப இருக்கிற நிலைமையில் அவரே போன் பண்ணி அல்லது நேர்ல வந்து கேட்டா கூட கொடுக்க முடியாது சூழ்நிலை பாஸ் தப்பா நினைக்க வேண்டாம் அவ்வளவு கஷ்டம் @niranjan2428