அம்பத்தூரில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் 20 நிமிடங்கள் மின்வெட்டு; மின்வெட்டு காரணமாக பொதுக்கூட்ட நிகழ்ச்சியை ஆர்ப்பாட்டமாக மாற்றி தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்
#ThangamThennarasu | #DMK | #Powercut | #Chennai
’’இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’னு தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினார்.
இந்த ஒரு மாதத்துல அவர்கள் பண்ண சம்பவங்களின் தொகுப்பு இது!
#tvk#TVKVijay#TVKFails#tvkilies
தேர்தல் வெற்றி தோல்வி திமுகவுக்கு புதுசு இல்ல. ஆனால் அதன் 75 வருட சரிதத்தில் தோற்ற பின்னும் இப்படி கூட்டம் கூட்டமாக தேடி வந்தது அரிது
தோற்றது புகழேந்தி ஐயா இல்ல, தமிழ்நாடு என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்
“மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு, தனது ஒரு மாத கால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது..
6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில், நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்..
“சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை, மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும், இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
“பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார்.. மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை..
பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்..
தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல், தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார்..
“ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர்.. பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார்.
அடுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார். காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்?
மூன்றாவதாக “மின்வாரியப்பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” என்கிறார்.. எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார்..
மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க, மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட கரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது?
தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் “மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிறது என்பதுதான்!
ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை!
இதுவும் தவெக ஆட்சியில் நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்!
தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை.. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பது தான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது..
புள்ளி விவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், 2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196 மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்..
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை.. அது மட்டுமா?
இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார்..
(1/2)
Another Scammer?
இல்லாத ஒரு Trustஐ இருக்குனு விளம்பரம் படுத்தி நான் நல்லது செய்யுறேன் அதனால் அரசியலுக்கு வரேனு பொய் சொல்லி இன்னொரு சினிமா பொய்யனை தலையில் கட்ட ready ஆகிட்டானுங்க
வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை.. சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிற்பதால் அவதி.. ஆவேசமடைந்த பொதுமக்கள் கடும் வாக்குவாதம்
#Tambaram#Roadissue#Viralvideo#Newstamil24x7
#WATCH | திமுக ஆட்சியில் 4 மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டு பயன்படுத்தி வரும் வாகனங்களுக்கு தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் வழங்கிய அமைச்சர் விஜய் பாலாஜி.. செய்தியாளர்கள் சுட்டிக்காட்டி கேட்டபோது அமைச்சர் அளித்த பதில்
#SunNews | #Vellore | #TVK | #VijayBalaji
நீங்க நினைக்கிற மாறி திமுக தோல்விக்கு எந்த அணியும் காரணம் இல்ல திமுகவும் காரணம் இல்ல
மகளிர் உரிமைதொகை, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், விடியல் பயணம், விலையில்லா லேப்டாப் இப்படி எல்லா நலத்திட்ட பயனாளிகள் பல பேர் தவெகவுக்கு தான் குத்தி இருக்காங்க
இங்க அவங்களுக்கு தேவைப்பட்டது ஒரு மாற்றம் திரைல கதாநாயகனா பாத்த அண்ணாவ முதலமைச்சரா பாக்கணும் அவ்வளவுதான் அவனுங்க உச்சபட்ச ஆசை
அதை தாண்டி விஜய் அதை செய்ய போறார் இதை செய்ய போறாரு இதெல்லாம் அவங்களுக்கு தேவை இல்லாத விஷயம் விஜய் ஏதுமே செய்யலனா கூட அதை பத்தி ஒருத்தனும் பேசமாட்டான். அண்ணாவ முதல்வர் சீட்ல உக்கார வச்சதோடா அவங்க கடமை முடிஞ்சது..
இந்த ஆட்சி எவ்வளவு நாட்களுக்கு இருக்கும்னு தெரியாது ஆனா இனிமே மாற்றம் மாற்றம் வர்றவன ஒருத்தனும் கண்டுக்க போறது இல்ல
நாம செய்ய வேண்டியது நடக்குற நடக்கபோற அவலங்களை எல்லாம் மக்கள் மன்றத்துல சொல்லி சாட்டைய அவங்க கைல குடுக்குறது மட்டும் தான் அத சிறப்பா செஞ்சா போதும்
எல்லாம் நன்மைக்கே 🖤❤️
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK@DMKWomensWing
#BREAKING | “இப்போது எதுக்கு முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார்? கரூர் CBI வழக்கில் இருந்து தப்பிக்கவா?”
-மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #MKStalin | #DMK | #TVKVijay