‘பயந்து ஓடிய விஜய்யின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம்’
- முன்னாள் அமைச்சர் சிவசங்கர்.
அரசியல் விமர்சனங்களில் இப்படி ஒரு கவித்துவமான வரியைக் கேட்டு நீண்டநாட்களாகிறது.
#BREAKING | “அந்த முதுகுதான் கரூர் மக்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நினைவுச் சின்னமாக இருக்கும்”
-சிவசங்கர், திமுக எம்.எல்.ஏ.
#SunNews | #DMK | #Karur | #TVKVijay
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்பகுதி தான் இது. சமூகவிரோதிகள் கஞ்சா அடிப்பதற்கும் மலஜலம் கழிப்பதற்கும் பயன்படுத்திய இடம்..
இப்பகுதியை அர்பன் டவுன் என்ற பெயரில் சீர்படுத்தி பொழுதுபோக்கு மற்றும் நூற்றுக்கணக்கான உணவகங்களைத் திறந்தார் விடியல் ஸ்டாலின்.
இங்கு ஒரு நாள் வணிகம் பல கோடிகளைத் தாண்டும். அவ்வப்போது இது போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் சொல்வதைப்போல் பாத்து பாத்து விடியல் அரசு செய்தது சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் நன்றி கெட்ட மக்கள்...
என்னத்த சொல்ல?
கலைஞரின் இடத்திற்கு குறி வைத்த வைகோ!
’’ரகசியத்தைக் காப்பாற்றுவதில் துரைமுருகன் இரும்புப்பெட்டி'' என்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 2009-ஆம் ஆண்டு ஒரு கவிதையில் குறிப்பிட்டிருந்தார். அரசியல்வாதிகள் பொதுவாக ரகசியங்களைக் காப்பார்கள். ஆனால், துரைமுருகன் அதற்கு மேலானவர் என்பதால்தான் `இரும்புப் பெட்டி' என்றார் கலைஞர் கருணாநிதி.
அவர் ஏன் இப்படிச் சொன்னார்? என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. அது 2009 தேர்தல் பரபரப்புக்கிடையே கவிதையாக வெளிப்பட்டது. ’தம்பி ஒருவர் திமுக-வில் இருந்தபோது, என் பதவிக்குக் குறி வைத்தார். நான் நீண்ட காலம் உயிரோடு இருந்தால், தலைவர் பதவியை அடைய முடியாதே என்றும் கவலைப்பட்டார்'' என அந்தக் கவிதையில் ஒருவரைச் சுட்டிக் காட்டினார் கலைஞர் கருணாநிதி.
சில ஆண்டுகளுக்கு முன்பு குமரிமுனைக் கடற்கரை விருந்தினர் மாளிகையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கவிதையில் விவரித்திருந்தார் கலைஞர் கருணாநிதி. கலைஞர் தூங்கிக் கொண்டிருந்தபோது துரைமுருகனும், ஆற்காட்டாரும் அந்தத் தம்பியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்தத் தம்பி கலைஞர் கருணாநிதியின் இடத்துக்குக் குறிவைத்து கருத்துகளை வெளியிட்டார். அந்தத் தம்பியின் பெயரைக் கலைஞர் கருணாநிதி குறிப்பிடவில்லை. ஆனால், அவர் யார்? என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்திருந்திருந்தது. அந்தத் தம்பி வைகோதான்!
குமரிமுனைக் கடற்கரை விருந்தினர் மாளிகையில்
குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தேனாம்;
அந்த நள்ளிரவில் அப்போது நமது தம்பிமார்கள்
ஆற்காட்டார் துரைமுருகன் இன்னொருவர் இப்போது நான்,
பெயர் சொல்ல விரும்பாதவர்: இவர்கள் மூவரும்
மாடித் தாழ்வாரத்தில் தேடக் கிடைக்காத திரவியமாய்த்
திராவிடர்க்குக் கிடைத்த திமுகழகத்தின் வளர்ச்சி,
வலிமை, வற்றாத பாச உணர்வு இவை பற்றியும் அதன்
வருங்காலம் பற்றியும் வானம் வெளுக்கும் வரையில்
உரையாடினார்களாம்.
அப்போது, அந்தத் தம்பி - நான் பேர் சொல்லாப் பெருமகன்;
என் தம்பிகள் ஆற்காட்டாரையும், துரைமுருகனையும் பார்த்து
“சரி, கலைஞருக்கு அடுத்து கழகத்தின் தலைவர்
ஸ்டாலின்தானா?" என வெகுண்டெழுந்து கேட்டாராம்
எப்படி அதைச் சொல்கிறாய் என அந்தத் தம்பியர்
கேட்டவுடன் "பேராசிரியர் அவர்கள், கூட்டங்கள் - மாநாடுகளில்
கூறுகின்ற புகழுரைகள் ஸ்டாலினைப் பற்றி
மழையாகப் பொழிகிறதே
என ஆயாசப்பட்டாராம்; அந்த அருமைத் தம்பி!
உடன்; ஆற்காட்டாரும், துரைமுருகனும்; "அன்பழகனார்
அப்படிப் பேசுவதில் என்ன தவறு? அந்தப் பிள்ளையாண்டான்
செய்துள்ள தியாகம் இளைஞர் அணியை வளர்க்கும்
இணையற்ற ஆற்றல் இவற்றைப் பேராசிரியர் பாராட்டுவதில்
என்ன குறை - யாரையும் எடை போட்டுத்தான்
பேராசிரியர் ஏற்றுக் கொள்வார்
கலைஞரையே உறைத்துப் பார்த்து உண்மைத்திறனை உணர்ந்த
பிறகுதான் ஒப்புக் கொண்டார்; தனக்கே தலைவராக!
எனவே இப்போது கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான்
என்ற பேச்சுக்கு என்ன அவசரம்? நீர் ஏன் நெருப்பைத்
தொட்டது போல் துடிக்க வேண்டும்? கலைஞரே இப்போது
உம்மைத் தானே "போர்வாள்" என்று புகழ்கிறார் - போற்றுகிறார்
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உமக்கு வழங்கியது போல
வேறு யாருக்கு இப்படித் தொடர்ந்து வழங்கியிருக்கிறார்.
கவலைப்படாமல் இருந்திடுக! கலைஞர் அவர்கள்; தனக்குப் பிறகு
உம்மைத்தான் தலைவராக்குவார் இயக்கத்திற்கு" என்று நம்பிக்கை
தெரிவித்து அந்த நள்ளிரவிலும் நமது பேர் சொல்ல விரும்பாத
பெருமை மிகு தம்பியின் முகத்தில் ஒளி பிறக்கச்
செய்திருக்கிறார்கள்.
புன்னகை தவழ்ந்த அந்தத் தம்பியின் முகத்தில்
புதியதோர் சிந்தனை அது ஒரு கேள்வியாகவும் மாறியது!
’’ஏன் துரைமுருகன்; நான் கலைஞருக்குப் பிறகு
தலைவனாவேன் என்கிறீர்களே? ஒரு வேளை நமது
கலைஞர், பெரியார் போல ராஜாஜி போல - தொண்ணூறு
வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டால்; நான் தலைவனாவதற்கு
எத்தனை வருடம் காத்திருப்பது?"
இதைக் கேள்வியாகக் கருதாமல், மற்ற இரு தம்பியரும்
தேன் பிலிற்றும் விஷமாக எண்ணிக் கலங்கி
இருவரும் இரகசியமாகச் சத்தியம் செய்து கொண்டார்களாம்
இந்தச் செய்தியை இருவரும் தலைவரிடம்
எப்போதும் சொல்வதில்லையென்று !
ஆனால்
துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி!
ஆற்காட்டாரோ அசல்; கண்ணாடிப் பேழை எனினும்
ஆண்டுகள் சில பல கடந்த பிறகே:
அன்றைய குமரிமுனையில் குமுறிய எரிமலையின்
குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு!
குறளின் அமுத மொழியாம்;
"செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி'
(செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித் தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகை உள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்கமாட்டார்கள்)
உடன்பிறப்பே,
குறளோவியம் நூல் தொகுப்பில் நான்
குறிப்பிடாமல் விட்டுப் போன இந்தக் குறட்பா, இந்த நேரத்தில் நினைவுக்கு வந்ததே
அந்த நினைவுக்கு ஒரு நன்றி!
என அந்த கவிதையை முடித்திருந்தார். இந்தக் கவிதை எழுதப்பட்ட காலத்தில்தான் மதிமுகவில் இருந்த எம்.எல்.ஏ-கள் மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர்ந்தார்கள். அடியொட்டிதான் நினைவலைகளைக் கவிதையாக வடித்தார் கலைஞர் கருணாநிதி.
இப்போது 2026 சட்டமன்றத் தேர்தல் காலத்திற்கு வருவோம். திமுக கூட்டணியிலிருந்து தவெக கூட்டணிக்கு முகாம் மாறியிருக்கும் வைகோ, ’’பதவியை ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் சேர்வது குதிரைப் பேரம் அல்ல’’ என தவெகவிற்கு ஆதரவாகப் பொழிப்புரை எழுதினார்.
மு.கண்ணப்பனும் என்.ராமகிருஷ்ணனும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்த போது ’’மு.கண்ணப்பனின் இந்தச் செயல் கட்சிக்குச் செய்த பெரும் துரோகம்’’ எனக் குற்றம் சாட்டினார் வைகோ. தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ-கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேர்ந்தால் துரோகம், சதிவலை எனச் சொன்ன வைகோ, தவெகவில் சேர்வதற்காக எம்.எல்.ஏ பதவிகளை அதிமுகவினர் ராஜினாமா செய்வதைக் குதிரைப் பேரம் அல்ல என்கிறார்.
- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers
Birthday greetings to Captain Cool Thiru. @msdhoni.
Whether on the field or away from it, your composure, leadership and enduring charisma continue to inspire millions. The anticipation of watching you in action again remains as strong as ever.
Wishing you good health, happiness and many more years of success.
அரசுப்பள்ளி மாணவியின் தன்னம்பிக்கையைத் தனது விளம்பர Reelsகாக Camera முன்னால் கேலி செய்து சங்கடப்படுத்திய அமைச்சர் கீர்த்தனாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சொந்த அனுபவங்களை மறந்த அமைச்சரின் இந்த அதிகாரம் மிக்க மேட்டிமைத்தனம், தவெக-வின் விளம்பர வெறிக்காக எவரையும் பலி குடுக்க தயங்க மாட்டோம் என்ற சிந்தனையை அப்பட்டமாகக் காட்டுகிறது.
தேர்தலுக்கு முன்பும் சரி, தற்போதும் சரி, தங்கள் விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் இத்தகைய பொறுப்பற்ற செயலைத் தவெகவும் அதன் தலைவரும் கைவிட வேண்டும்.
பதவி உயர்ந்தால் மட்டும் போதாது; உங்களுக்கும் உங்களோடு இருப்பவர்களுக்கும் மனமும் உயர்ந்திருக்க வேண்டும் . Uncle!
அறிவாளிகளிடம் பேசத் தான்
சரியான ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும்!!
தற்குறிங்ககிட்ட குழந்தைங்க கிட்ட அடுச்சு விட்டால் போதும்!!
காசா பணமா? பித்தலாட்டம் தானே முதலீடே