இன்று தமிழ் நாட்டில் நாம் காணும் அரசியல் மாற்றம், ஏதோ தானாக விளைந்ததல்ல.அது ஒரு 'Narrative War.
இது 2018-ல் திரிபுராவில் மாணிக் சர்க்கார் என்ற 25 ஆண்டுகால கோட்டையை வீழ்த்த பா.ஜ.க பயன்படுத்திய அதே 'Information Warfare' உத்தியின் அச்சு அசலான மறுபதிப்பு!.
அன்று திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்த பா.ஜ.க கையில் எடுத்த ஆயுதம் மிகைப்படுத்தல். எங்கோ ஒரு மூலையில் நடக்கும் குற்றத்தை, மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது போன்ற ஒரு Perception.சமூக வலைதளங்கள் மூலம் கட்டமைத்தனர். "சலோ பல்டாய்" என்ற ஒற்றை வாசகத்தை மக்களின் ஆழ்மனதில் விதைத்தனர். அதே Formula தான் இங்கும்!
இதையே தான் தமிழ் நாட்டிலும் கட்டமைத்தனர்.
ஒட்டுமொத்த இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பில் முன்னணியில் இருக்கும் தமிழ் நாட்டை, ஏதோ ஒரு சில சம்பவங்களை வைத்து 'பாதுகாப்பற்ற மாநிலம்' என்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலம் இளைஞர் மனதில் பதிய வைத்தனர்.
ஒரு நீண்ட கால சமூகப் பிரச்சனையை, இப்போதைய நிர்வாகச் சீர்கேடு என்பது போல 24 மணிநேரமும் ஒரு 'Narrative' செட் செய்யப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகளில் நாம் அடைந்த கல்வி, மருத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியைப் பற்றித் தெரியாத ஒரு தலைமுறையை (Gen-Z) குறிவைத்து, "எதுவுமே நடக்கவில்லை, எல்லாம் மோசம்" என்ற குருட்டுத்தனமான நம்பிக்கையை விதைத்தனர்.
இதற்கு இவர்கள் பயன்படுத்திய பிரதான தளம் இன்ஸ்டாகிராம். சினிமா இன்ஃப்ளூயன்சர்கள், லைஃப்ஸ்டைல் வீடியோ போடுபவர்கள் என ஒரு பெரும் கூட்டத்தையே இதற்காகத் தயார் செய்து, செய்திகளை விட 'வைரல் வீடியோக்கள்' மூலம் பரப்புரை செய்தனர். வரலாற்றுப் புரிதல் இல்லாத ஒரு தலைமுறையை, மிக எளிதாக ஒரு 'Digital Trap'-இல் விழ வைத்துவிட்டனர். இவர்களுக்கு ஆதாரப்பூர்வமான விவாதங்களை விட, 15 வினாடி 'BGM' போட்ட ரீல்ஸ்கள் தான் தேர்தல் அறிக்கையாகத் தெரிந்தது.
வளர்ச்சியை அனுபவித்துக்கொண்டே, வளர்ச்சி அடையவில்லை என்று நம்பும் ஒரு முரண்பாடான தலைமுறையை இந்த 'நாடக கும்பல்' உருவாக்கியிருக்கிறது. நிஜத்திற்கும் நிழலுக்குமான வித்தியாசம் தெரியாமல், இன்ஸ்டாகிராம் அல்காரிதத்தில் சிக்கி வாக்களித்திருக்கிறார்கள்.
பிம்பங்கள் ஆட்சியைக் கைப்பற்றலாம், ஆனால் அவை ஒருபோதும் வளர்ச்சியைத் தராது. திரிபுராவில் அன்று விதைக்கப்பட்ட 'மாற்றம்' இன்று எங்கே இருக்கிறது என்பதை உணர்ந்தால், நாளை தமிழ் நாட்டின் நிலை புரியும்!
#DigitalPolitics #TNPolitics #PerceptionWar
@arivalayam@mkstalin@Udhaystalin@TRBRajaa@DMKITwing
தந்தை 5ம் வகுப்பு.. தாய் 8ம் வகுப்பு.. மகன் 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரி.. செங்கல் சூளையில் வேலை பார்த்து ஆளாக்கிய தந்தை.. தாயின் சபதம்.. மகனின் விடாமுயற்சியால் வெற்றி பெற்ற குடும்பம்..
#Chennai | #IASExam | #UPSC | #Student | #Parent | #PolimerNews