ஜனநாயகனை லீக் செய்து பழியை திமுகமேல போட்டு தேர்தல்ல ஜெயிச்சு
இப்போஅதை லீக் செய்தவன்மேல எந்த நடவடிக்கையும் இல்லை னு அவன ரிலீஸ் பண்ணிட்டாங்க
ஆக ஒட்டுமொத்தமா முட்டளாக்கியிருக்கனுக… master plan 🔥
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 450 கிலோ போதைப்பொருளை காவல்துறை பிடித்திருக்கிறது இதற்கு பின்னணியாக செயல்பட்டது சாத்தான்குளம் தவெக ஒன்றிய செயலாளர் குணசேகரன் தான் என்று திருவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனிடம் வாதம் செய்யும் தவெக நிர்வாகியின் பரபரப்பான ஆடியோ !
காவல்துறை முழுமையாக விசாரித்தால் பெரிய போதைக்கும்பல் சிக்கும் @CMOTamilnadu
கர்நாடகாவைச் சார்ந்தவரை, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?
தமிழ்நாடு அரசே! நியமனத்தை இரத்து செய்!
ஜனநாயகன்' திரைப்படத் தயாரிப்பாளர் திரு. கே. வெங்கட் நாராயணா அவர்கள், டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழக மக்களிடையே பெரும் ஐயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், கர்நாடக முதலமைச்சர் திரு. டி.கே. சிவகுமார் மற்றும் அங்கிருக்கும் அரசியல், தொழில் வட்டாரங்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டவர் என்று கூறப்படும் நிலையில், இந்த நியமனம் சனநாயக நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என்பது வெறும் அலுவல் சார்ந்த பதவி மட்டுமல்ல, அது இந்தியாவின் அதிகார மையத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களின் குரலைத் தடையின்றி ஒலிக்கச் செய்யும் மிக முக்கியப் பொறுப்பாகும்.
தற்போதைய சூழலில், காவிரி நீர்ப் பகிர்வு, மேகதாது அணைப் பிரச்சினை மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போன்ற நீர் உரிமைகளும், மொழி உரிமை, முறையான நிதிப் பகிர்வு, மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்தல் போன்ற மாநில உரிமைகளும் எனத் தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பல்வேறு சவால்கள் நமக்கு முன்னால் உள்ளன.
இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில், தமிழகத்தின் சார்பில் டெல்லியில் பேசும் ஆளுமையின் மீது சிறிதளவும் சந்தேகம் எழக் கூடாது.
"மேகதாது அணையை எந்தச் சூழ்நிலையிலும் கட்டியே தீருவோம்" என்று கர்நாடக அரசுத் தொடர்ந்து ஒற்றைக்காலில் நிற்கும் வேளையில், அந்த மாநில அதிகார மையங்களுடன் நெருங்கியத் தொடர்பில் உள்ள ஒருவரைத் தமிழகத்தின் முகமாக டெல்லிக்கு அனுப்புவது, நம் அரசின் உறுதியான நிலைப்பாட்டின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இப்பதவியில் இருப்பவர் எந்தவொரு வெளிமாநிலத் தாக்கத்திற்கும் ஆட்படாதவராகவும், முரண்பாடுகளுக்கு இடம் தராமல் தமிழ்நாட்டின் நலனை மட்டுமே தனது ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படுபவராகவும் இருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும்.
எனவே, தமிழக மக்களின் நியாயமான அச்சங்களையும், அரசியல் ரீதியான சந்தேகங்களையும் அலட்சியப்படுத்தாமல், இந்தச் சர்ச்சைக்குரிய நியமனத்தை, தமிழ்நாடு அரசு உடனடியாக இரத்து செய்து திரும்பப் பெற வேண்டும்.
பிற மாநில அரசியல் அல்லது தொழில் வட்டாரங்களுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத, தமிழ்நாட்டின் உரிமைகளில் சமரசமற்றப் பற்றுக்கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த நேர்மையான ஒருவரை இப்பொறுப்பில் அமர்த்த வேண்டும். காவிரி, மேகதாது உள்ளிட்ட அனைத்து மாநில உரிமைப் போராட்டங்களிலும் தமிழக நலனை மட்டுமே முன்னிறுத்தி, அசைக்க முடியாத மனஉறுதியுடன் டெல்லியில் செயல்படக்கூடிய ஆளுமைக்கே இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான தருணத்தில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அரசின் கடமையாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு இந்தச் சர்ச்சைக்குரிய நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நேர்மையும் நம்பகத்தன்மையும் மிக்க, தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமே அசைக்க முடியாத உறுதியுடன் செயல்படும் ஒருவரை டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைச் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
The Real OG Seeman 🔥
கன்னட வாழ் தெலுங்கரான,
வெங்கடா நாராயாணா ரெட்டியின் நியமனத்தை #தவெக விஜய் அரசு திரும்ப பெறாவிடில் தமிழ்நாடே அதிரும் அளவில் பெரிய போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.
#ஆந்திரா_வெற்றிக்_கழகம்#AVK_Fails
#NewsUpdate | "தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா?
தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்" -சீமான், நாதக
#SunNews | #VenkatNarayana | #Vijay
இந்த குழந்தைக்கு கொக்கேன் என்றால் என்ன? பவுடராக மூக்கில் வச்சு இழுப்பது எப்படி என என்ன தெரியும்? குழந்தையை கேடயமாக பயன்படுத்தும் போக்கை தவெக செய்வது அருவருப்பானது..
இதில் அந்த குழந்தை 50க்கும் மேட் கட் செய்துள்ளது தெரிகிறது... ஆக ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லி கொடுத்து, இந்த குழந்தையை பேச சொல்லி ரெக்கார்ட் பண்ணிருக்கான். ஜூனியர் ஆர்டீஸ்ட் மாதிரி தன் குழந்தையை வச்சு அரசியல் ஆதாயம் தேடிட்டு இருக்கான் இதன் தந்தை. ரூட் மாபியா இதை பரப்புகிறான்..
அடுத்த என்ன குழந்தைகளை வச்சு மாமா பாவம் என்று அழவிட போறானுக...
வெங்கட நாராயணா ஒரு கன்னடர்.
பிறந்து வளர்ந்தது கர்நாடகாவில்.
இவருக்கு #தமிழும் பேசத்தெரியாது.
எவ்வளவு பெரிய துரோகம் இது.
மிஸ்டர் விஜய் ஆந்திரா,
கர்நாடகாவுல இதேபோல தமிழர்களுக்கு அரசு பதவிகளை வாங்கிக் கொடுத்துவிட்டு,நீயும் இங்க அவர்களுக்கு பதவி கொடு.
#தமிழின_விரோதி_தவெக
தமிழகத்தின் டெல்லி பிரதிநிதி - விஜய் நியமனம் செய்த நபர் இவர் தான்... இது போல் ஆந்திரா கர்நாடகா கேரளாவில் செய்திருந்தால் பெரும் போராட்டமே வெடித்திருக்கும்..
விஜய்க்கு செய்வது அதிகார ஆணவ திமிர் அன்றி வேறு இல்லை.. என்ன ஆணவம் இருந்தால் பிறந்து , பிசினஸ் முழுக்க கர்நாடாகவில் செய்து கொண்டிருக்கும் முழு ஒருத்தரை - இந்த மாநிலத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தரை நியமனம் செய்து அதை சரி என்று நம்மை ஏற்க கூறுவார்கள் இந்த TVK அமைச்சர்கள்... இதை எந்த விலை கொடுத்தேனும் தமிழக அரசியல் கட்சிகள் வீழ்த்த வேண்டியது அவசியம்..
உனக்கு கஷ்ட காலத்தில் இருந்தார் என்பதற்காக , உன் சினிமா தயாரித்தார் என்பதற்காக தமிழகத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தரை தமிழகத்தின் டெல்லிக்கான பிரதிநிதியாக நியமனம் செய்வதை ஏற்க முடியாது. இதற்காக எதையும் எதிர் கொள்ள தயார்..
வைகோ கூறியது “மதிமுக 2 MLA ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு” என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்
ஆக விஜய் குதிரை பேரம் நேரடியாக நடத்தி வருகிறார்.. பதவி விலகுவது அவர்களாக செய்கிறார்கள் என்று இத்தனை நாட்களாக ஆதவ் முதல் அனைத்து TVk கும்பலும் சொன்னது பொய்..
விஜய் இதில் என்ன குறைந்தபட்ச நேர்மை இருக்கு?
கர்நாடகாவை சார்ந்த ஒருத்தனுக்கு “விஜய் திரைப்படம் எடுத்தான்” என்பதற்காக அமைச்சருக்கு நிகராக ஒரு பதவியை அதுவும் தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் ஒருத்தனை நியமிக்கும் திமிர் எங்கிருந்து வருகிறது?
தமிழ் நாட்டை சேர்ந்தவ நம்மை எல்லாம் பார்த்தா இவனுகளுக்கு என்ன நினைப்பு என தெரியவில்லை.. மொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒன்றுகூடி எதிர்க்க வேண்டியது அவசியம்.
ஆளும் இந்த TVK அரசுக்கும் சொல்ல முடியாத ஆணவமும் அதிகார திமிரும் உச்சம் ஏறிவிட்டது என தோன்றுகிறது..
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ